search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி"

    • மதுரை ரிங் ரோட்டில் நள்ளிரவில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    • மோட்டார் சைக்கிள் கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

    மதுரை

    மதுரை ரிங் ரோடு சாலையில் நேற்று நள்ளிரவில் கண்டெய்னர் லாரி ஒன்று மாட்டுத்தாவணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஒரே மோட்டார் சைக்கிளில் சோளங்குருணி யைச்சேர்ந்த ஜெயமுருகன் மகன் ரஞ்சித் (வயது16) , கண்ணன் மகன் வீரசந்தானம் (18) உள்பட 3 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். மண்டேலா நகர் அருகே மோட்டார் சைக்கிள் கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 3 பேரும் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஞ்சித், வீரசந்தானம் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரைஅரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பெருங்குடி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவர் குறித்தும், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

    இதனை டிரைவர் பிரபாகரன் ஓட்டிச் சென்றார். இந்த லாரி ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டு பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியின் பின் பகுதியில் திடீரென்று தீ ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் மளமளவென தீப்பரவி லாரி முழுவதும் எரிய தொடங்கியது. டிரைவர் பிரபாகரன் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சாலையில் நடுவே லாரியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக இறங்கி தப்பி ஓடினார்.

    இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் டீசல் டேங்க் அருகே தீ பற்றி பெரிய அளவில் எரிய தொடங்கியது. இதனை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதில் லாரி முழுவதும் எரிந்து தீக்கரையானது. மேலும் லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகளும் தீ விபத்தில் எரிந்து நாசமானது.

    சென்னை-நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருந்து வரும் நிலையில், நடு ரோட்டில் லாரி எரிந்த காரணத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    லாரி திடீரென்று எப்படி எரிந்தது? காரணம் என்ன? என ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • லாரி ஆட்டோவின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • இருவரும் ரவுடிப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராயபுரம்:

    பூந்தமல்லி கூடம்பாக்கம் சேர்ந்தவர் இளங்கோ (வயது 44) லாரி டிரைவர். தண்டையார்பேட்டை இளைய முதலில் தெருவை சேர்ந்தவர் மதன்குமார் (37) சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர்கள் இருவரும் வேலை முடிந்து காசிமேடு சிங்காரவேலன் நகரில் லாரி மற்றும் ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றனர்.

    பின்னர் லாரி ஆட்டோவின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி இளங்கோ, மதன்குமார் ஆகியோர் காசிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    அதில் காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த பிரதீப் (20), அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் சூர்யா (26) ஆகியோர் குடி போதையில் லாரி, ஆட்டோ கண்ணாடியில் கல்லை வைத்து உடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பிரதீப் மீது 1 கொலை, 3 கொலை முயற்சி உள்பட 13 வழக்குகளும், சூர்யா மீது 1 கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும் உள்ளன. இருவரும் ரவுடிப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டிருந்தது.
    • எதிர்பாரத விதமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே அசூர் புறவழிச்சாலையில் நேற்று இரவு செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டிருந்தது. பெரம்பலூரியில் இருந்து பூம்புகார் நோக்கி செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை அரியலூர் மாவட்டம் ஆமணக்கு தோப்பு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் ஒட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ் (வயது 33) என்பவர் மாற்று டிரைவராக பணியில் இருந்தார். இந்நிலையில் பெரம்பலூரில் இருந்து பூம்புகார் நோக்கி சென்ற லாரி எதிர்பாரத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

    இதில் ஆனஸ்ட் ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த ஆனஸ்ட்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களின் எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    டெண்டர் நீட்டிக்க கோரிக்கை

    இதற்காக 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் டெண்டர் மூலம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து இருந்ததால் டெண்டரை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என சங்கம் சார்பில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்தும் அடிக்கடி சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்து வந்தனர். இந்த நிலையில் 3 ஆயில் நிறுவனங்களும் தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.

    ஒப்பந்தம் கையெழுத்து

    நேற்றுடன் நடைமுறையில் உள்ள டெண்டர் முடிவடைந்துள்ளதால் கால நீட்டிப்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஐ.ஓ.சி. ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் கையெழுத்திட நேற்று நாமக்கல் வந்தனர்.

    செல்லப்பம்பட்டியில் உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் சங்கத்தலைவர் எஸ்.எல்.எஸ்.சுந்தர்ராஜன் முன்னிலையில் சங்க உறுப்பினர்களின் வாகனங்களுக்கு ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடிதம் வழங்கினர்.

    பின்னர் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ரான் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    சங்கத்தின் சார்பில் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை டெண்டர் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ. தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அது ஏற்கப்பட்டு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆயில் நிறுவனங்கள் 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.

    இதன் மூலம் தென் மண்டலம் மற்றும் பிற மண்டலங்களில் இயக்கப்படும் 7,500 எல்.பி.ஜி. வாகனங்களுக்கு ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோட்டப்பா டியில் இருந்து நைனார் பாளையத்திற்கு சென்றார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது 54). மரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோட்டப்பா டியில் இருந்து நைனார் பாளையத்திற்கு சென்றார். பின்னர் தோட்டப்பா டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல வி. கிருஷ்ணாபுரம் பால் சொசைட்டி அருகே வேப்பூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்புறமாக வடமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே வடமலை உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் வடமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்கு லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.
    • அந்த லாரியை தொடர்ந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் பணிக்கம்பட்டி அருகே உள்ள இலந்த குட்டை என்ற பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய அந்தப் பெண் ரோட்டை விட்டு திடீரென கீழே இறங்கியதால், ஸ்கூட்டர் சரிந்ததாக கூறப்படுகிறது.

    விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த லாரி நிற்காமல் சென்றதால், அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்று அந்த லாரியை சிறை பிடித்தனர். மேலும் அந்த லாரியை தொடர்ந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சிறைபிடிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி சென்றது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து பெங்களூருக்கு பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி சென்றது. லாரியை தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த வீரமணி ஓட்டி வந்தார். திண்டிவனம் அடுத்த பட்டணம் அருகே வளைவில் வேகமாக திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் திண்டிவனம் காஞ்சிபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக அக்கம் பக்கத்தினர் லாரியிலிருந்து டிரைவரை மீட்டனர். லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் பேரளியில் கட்டுப்பாட்டை இழந்த காய்கறி லோடு லாரி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது
    • அதிர்ஷ்டவசமாக ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்தினர் உயிர்தப்பினர்

    குன்னம்,

    பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள பேரளி கிராமத்தில், ரியல் எஸ்டேட், தனியார் பேருந்து அதிபர் மனோகரன் என்பரின், சகோதரி வசந்தா என்பவரின் வீடு உள்ளது. வசந்தாவின் கணவர் சிதம்பரம் இறந்து விட்ட நிலையில் தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார். வழக்கம்போல இவர்கள் இரவு நேரத்தில் உணவு உண்டபின்னர் தூங்கி உள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இடி விழுந்தது போல சத்தத்துடன் வீடு அதிர்ந்துள்ளது. அலறி அடித்து எழுந்த வந்து பார்த்தபோது காய்கறி ஏற்றிய லோடு லாரி ஒன்று அவர்களது காம்பவுண்ட் சுவரை உடைத்து, ஆஸ்பெஸ்டாஸ் கூரையையும் உடைத்துக்கொண்டு உள்ளே நின்றதை பார்த்து அதிர்ந்துள்ளனர். இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அரியலூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி அடுத்த சென்னகிரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (23), லாரி டிரைவர்.
    • லாரி எதிர்பாராத விதமாக நவீன் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி அடுத்த சென்னகிரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (23), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேம்படிதாளம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக நவீன் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    • பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.
    • 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 43).

    இவர் தனது மனைவி வெண்ணிலா (40), உறவினர்கள் நடராஜன், ரஞ்சிதா ஆகியோருடன் காரில் வீட்டிலிருந்து தஞ்சை நோக்கி புறப்பட்டார்.

    காரை மேகநாதன் ஒட்டி வந்தார்.

    அந்த கார் தஞ்சை- பட்டுக்கோட்டை புறவழிச் சாலையில் வந்து கொண்டி ருந்தது.

    அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.

    இந்த விபத்தில் வெண்ணிலா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேகநாதன், நடராஜன், ரஞ்சிதா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த மேகநாதன் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    • பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பானது சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் ஆலைக்கு எடுத்து செல்வது வழக்கம்.

    இதேபோல் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையம் பகுதியில் இருந்து வந்த கரும்பு லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி செல்லும் சாலையில் சத்தியமங்கலம் முக்கிய வீதியில் கரும்பு பாரம் திடீரென ரோட்டில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ஆனாலும் நடுரோட்டில் கரும்பு சரிந்து விழுந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    பிறகு சிறிது நேரத்தில் கரும்புகளை முற்றிலு மாக அகற்றி கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை தனியார் ஆலைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×