search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் லாரி மோதி தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற சிறுமி பலி
    X

    தண்ணீர் லாரி மோதி தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற சிறுமி பலி

    • தண்ணீர் லாரி மோதி தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற சிறுமி பலியானார்.
    • லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.

    மதுரை

    மதுரை அருகே மங்களக் குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது41). இவரது மனைவியும், 9 வயது மகள் அஜிதாவும் ஸ்கூட்டரில் சென்றார். பைக் மூன்றுமாவடி பகுதி யில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.

    இதில் தாயும் குழந்தையும் கீழே விழுந்தனர். இதனால் படுகாயம் அடைந்த அஜிதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசில் காளிதாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் தனஇந்திரன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×