search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எருமை"

    • சமூகவலைதளத்தில் வீடியோ வைரல்
    • வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் கரடி, காட்டு எருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இவை சமீபகாலமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து, அங்கு உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இதற்கிடையே வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுஎருமை, நேற்று கோத்தகிரி குடியிருப்பு பகுதி அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வசிக்கும் ஒரு பெண், அகன்ற பாத்திரத்தில் குடிநீர் வைத்து தாகம் தணித்து உள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆபத்து நிறைந்த வன விலங்குகளுக்கு தண்ணீர் வைப்பதும், உணவளித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும் தொடர்கதயாகி விட்டது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.
    • பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அவிநாசி,ஜூலை.26-

    அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.

    லாரியில் சென்ற எருமை மாடு கட்டப்பட்ட கயிறு துண்டாகி விட்டது. இதன் காரணமாக எருமை மாடு தடுமாறு ஓடும் லாரியிலிருந்து கீேழ விழுந்தது. மிகவும் வேகமாக சென்ற லாரியிலிருந்து கீழே விழந்த சமயம் பின்னால் லாரியை தொடர்ந்து வந்த வாகனங்கள் மோதியதில் எருமை மாடு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதையறிந்த சமூக ஆா்வலா்கள், அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கால்நடை மருத்துவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

    இதையடுத்து பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் எருமை உயிரிழந்தது. 

    • தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார்.
    • நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

    வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

    ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சிஅவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்தியமகன் வேண்டும் என வேண்டினான்.

    அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்! நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்றுசாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

    மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

    எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சனை.

    மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர். தேவர்கள், மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான் அவனை சம்ஹாரம் செய்யதகுந்தவள் மகாசக்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

    மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

    தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.

    அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

    அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள்அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவிமணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

    இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. 

    ×