search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயாவதி"

    • துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 6-ந்தேதி நடக்கிறது.
    • மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

    லக்னோ :

    நமது நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாளை மறுதினம் (6-ந் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா (80) களம் காண்கிறார்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கான தேதி நெருங்கிவிட்ட தருணத்தில், பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதையொட்டி மாயாவதி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

    நாட்டின் உச்ச பதவியான ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது நன்றாக தெரிந்த ஒன்றுதான்.

    தற்போது 6-ந் தேதி நடக்கிற துணை ஜனாதிபதி தேர்தலிலும் அதே நிலைதான் நிலவுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், பரந்த பொது நலனையும், அதன் நகர்வையும் மனதில்கொண்டு, எங்கள் கட்சி ஜெதீப் தன்கருக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்களவையில் 10 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் மாயாவதியின் கட்சி, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக களம் கண்ட திரவுபதி முர்முவுக்கு தனது ஆதரவை வழங்கியது நினைவுகூரத்தக்கது.

    இதற்கிடையே எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்த கட்சி எம்.பி. சஞ்சய்சிங் அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது.
    • ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

    இதற்கிடையே, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவரும் பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவினை திரட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    உ.பி. முன்னாள் முதல் மந்திரியை மூன்றாம் பாலினத்தவர் என விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. சாதனா சிங் தலைக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக பகுஜன் சமாஜ் முன்னாள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #Sadhanasingh #Mayawati #NCW
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சாதனா சிங், மாயாவதி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் கருத்துக்களை தெரிவித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சுயமரியாதை பற்றி மாயாவதிக்கு ஒன்றும் தெரியாது. மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பினார். ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்துவிட்டார். 
     
    இப்போது, அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தனது சுயமரியாதையை விற்கத் துணிந்துவிட்டார். மாயாவதியின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறை என்று விமர்சனம் செய்திருந்தார் சாதனா சிங். 

    மேலும், மாயாவதியை பார்த்தால் ஆண் போலவும் தெரியாது, பெண் போலவும் தெரியாது. மூன்றாம் பாலினத்தவர் போல் இருப்பார் எனவும் தெரிவித்திருந்த அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

    கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால், தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக பாஜக எம்.எல்.ஏ. சாதனா சிங் நேற்று மாலை குறிப்பிட்டிருந்தார்.

    சாதனா சிங்
    மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த சாதனா சிங்குக்கு தேசிய மகளிர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மாயவதியிடமும் இந்த நாட்டு மக்களிடமும் சாதனா சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜய் யாதவ் இன்று வலியுறுத்தியுள்ளார்.

    அப்படி மன்னிப்பு கேட்க தவறினால் சாதனா சிங்கின் தலையை வெட்டி கொண்டுவந்து என்னிடம் ஒப்படைப்பவர்களுக்கு எங்கள் கட்சி தொண்டர்களிடம் இருந்து வசூலித்து 50 லட்சம் ரூபாய் சன்மானமாக தருவேன் எனவும் விஜய் யாதவ் உறுதியளித்துள்ளார். #Sadhanasingh #Mayawati #NCW
    வாரணாசியில் பிரதமர் மோடிக்கு வாக்களித்த மக்கள் மீது குஜராத்தில் தாக்குதல் நடைபெற்று வருகிறது, இதை மாநில அரசு வேடிக்கை பார்த்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். #Mayawati
    புதுடெல்லி :

    குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, உ.பி. மற்றும் பீகார் மாநிலத்தவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. 

    குற்றத்தை செய்தவர் பிழைப்புக்காக குஜராத்திற்கு வந்தவர் என தெரிந்ததும், குடிபெயர்ந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. 6 மாவட்டங்களில் பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தவர்களை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டுள்ளது.

     450 பேர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்வர்கள், குஜராத் முதல்வரிடம் பேசியுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் குஜராத் உள்துறை அறிக்கையை அளித்துள்ளது. 6 மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பீகார், உத்தரபிரதேச மக்கள் பயம் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இத்தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேசுகையில், பிரதமர் மோடிக்கு வாக்களித்த உத்தரபிரதேசம், பீகார் மாநில மக்கள் தாக்கப்படுகிறார்கள், குஜராத் அரசு வேடிக்கை பார்க்கிறது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். 
     
    மாயாவதி பேசுகையில், “ குஜராத்தில் உத்தரபிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது மிகவும் வருந்ததக்கது. இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்யக்கூடாது. தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற வாக்களித்த மக்கள் தற்போது குஜராத்தில் தாக்கப்படுகிறார்கள்.

     ஆனால் குஜராத் பா.ஜனதா அரசு, இதனை வேடிக்கை பார்க்கிறது. பீகார், உத்தரபிரதேசம் மக்கள் வெளிநாட்டவர் கிடையாது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குஜராத் அரசின் கடமையாகும்’’ என கூறினார். #Mayawati
    காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். #Mayawati
    லக்னோ:

    2019 பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு பா.ஜ.கவை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் பெரும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் கையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    2019 தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 

    பா.ஜ.க. ஆட்சியில் உள்ள சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரசுடன் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் மாயாவதி கூட்டணி வைத்துள்ளார். இப்போது இதே நிலையை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முன்னெடுத்துள்ளார் மாயாவதி.

    மாயாவதி இதுதொடர்பாக பேசுகையில், “திக்விஜய் சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கூட்டணியை விரும்பவில்லை. அவர்கள் அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளுக்கு பயப்படுகிறார்கள். மாயாவதிக்கு மத்திய அரசிடம் இருந்து நெருக்கடி என்று திக்விஜய் சிங் கூறுவதில் எந்த ஒரு அடிப்படையும் கிடையாது. காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி தொடர்பான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நோக்கம் நேர்மையானது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூட்டணிக்கு நெருக்கடியான நிலையே ஏற்படுத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சியும் மிகவும் ஆணவமாக உள்ளது. தனியாகவே பா.ஜ.கவை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான நிலை அவர்களுடைய (காங்கிரஸ்) ஊழல் மற்றும் தவறுகளை இன்னும் மக்கள் மறக்கவில்லை. தவறை சரிசெய்யுவும் அவர்கள் விரும்பவில்லை,” என கூறியுள்ளார். 

    ‘பா.ஜ.கவை போன்று காங்கிரசும் எங்களுடைய கட்சியை அழித்துவிட வேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகிறது. எனவே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம்’ என கூறியுள்ளார் மாயாவதி. 

    மாயாவதியின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் காங்கிரசுக்கு நேரிட்டுள்ள மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
    உத்தரபிரதேச பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைய மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #ParliamentElection2019
    லக்னோ:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மத்தியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்றும், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    அரசியல் கட்சிகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மத்தியில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

    உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. இது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இதுபற்றி சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆக்ராவில் நிருபர்களிடம் கூறுகையில், சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது மெகா கூட்டணியாக மாறும். காங்கிரஸ் கட்சி எங்கள் நண்பன் என்றார்.


    கூட்டணி தொடர்பாக மாயாவதி, அகிலேஷ் யாதவ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்டமாக காங்கிரசின் மெகா கூட்டணியில் இணையும் என்றும் காங்கிரஸ் தலைமை ஆதரிக்கும் என்றும் இந்த இரு கட்சி நிர்வாகிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதில் முதல் கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோரை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று முடிவு எடுத்துள்ளன.

    மற்ற தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் ராஷ்டீரிய லோக் தளம், நிஷாத் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க சமாஜ்வாடி கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ், முலாயம்சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். மாயாவதி 2004-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். தற்போது 10 ஆண்டுகளுக்கு பின்பு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection2019 #Congress #Mayawati #AkhileshYadav
    சோனியா காந்தி, மாயாவதியை போல் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மேல்சபை எம்.பி.யாக இருந்தும் பாராளுமன்ற நிலை குழுவில் இடம் பெறாமல் ஒதுங்கியே இருக்கிறார். #BJP #AmitShah
    புதுடெல்லி:

    நாட்டின் பல்வேறு துறைகளின் பணிகளை ஆய்வு செய்வதற்காகவும், உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பாராளுமன்ற எம்.பி.க்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

    இவ்வாறு பாராளுமன்றத்தில் 24 குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் மக்களவைக்கு 16 குழுக்களும், மேல்-சபைக்கு 8 குழுக்களும் அமைக்கப்படும்.

    இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் மூத்த எம்.பி.க்கள் தலைவராகவும், மற்றவர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இந்த குழுவுக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்படும்.

    எங்குவேண்டுமானாலும் ஆய்வு நடத்தலாம், எந்த அதிகாரியை வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம் என்ற அளவிற்கு உயர்ந்தபட்ச அதிகாரங்கள் இந்த குழுக்களுக்கு உண்டு.

    எனவே இந்த குழுக்களில் இடம் பெறுவதற்கு எம்.பி.க்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் மேல்சபை எம்.பி.யாக உள்ள பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா எந்த குழுவிலும் இடம் பெறாமல் ஒதுங்கியே இருக்கிறார்.

    மேல்-சபையில் எம்.பி.க்களின் பதவி காலம் முடிவு மற்றும் மரணம் காரணமாக 50 எம்.பி.க்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். எனவே 8 நிலைக்குழுக்களும், மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு குழுவிலும் கூட அமித்ஷா இடம் பெறவில்லை. ஏன் அவர் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவில்லை.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட அவர் தலைவராக இருந்த காலத்தில் எந்த நிலைக் குழுவிலும் இடம் பெறவில்லை. இப்போது தலைவர் பதவி இல்லாத நேரத்திலும் குழுவில் இடம் பெறவில்லை. அதே போல பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் எந்த குழுவிலும் இடம் பெறவில்லை.

    அதே நேரத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி பல்வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளார்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட நிதி கமிட்டியில் இடம் பெற்று இருக்கிறார். அதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளி விவகார கமிட்டியில் இடம் பெற்றுள்ளார். #BJP #AmitShah
    கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்பு விழாவில் அகிலேஷ் யாதவ், மாயாவதி, சந்திரசேகர ராவ் மற்றும் நவீன்பட்நாயக் ஆகியோர் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். #Kumarasamy #AkhileshYadav #Mayawati
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். தலைவர் குமாரசவாமி காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறார். இன்று மாலை பெங்களூரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.

    பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ்கட்சி, மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். ஆனால் அங்கு பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு இந்த இரு கட்சி தலைவர்களும் கைக்கோர்த்து செயல்படும் நிலை உருவானது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவும், மாயாவதி கூட்டணி அமைத்து போட்டி போட்டு பா.ஜனதா வேட்பாளர்களை தோற்கடித்தார். ஆனாலும் இருகட்சி தலைவர்களும் இதுவரை ஒரே மேடையில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது.

    இந்த நிலையில் குமாரசாமி பதவியேற்பு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் பங்கேற்கிறார்கள். இது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்ச்சியாகவே குமாரசாமியின் பதவியேற்பு விழா அமைய இருக்கிறது.

    பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. தனக்கு முக்கிய அரசு அலுவல் பணி இருப்பதால் நேற்றே அவர் பெங்களூர் வந்து தேவேகவுடாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சென்றுவிட்டார்.


    இதேபோல் பா.ஜனதாவின் முன்னாள் கூட்டணி தலைவரான ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தேவேகவுடா தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரும் பதவி ஏற்பு விழாவுக்கு வரவில்லை. கடந்த ஜனவரி மாதம், நவீன் பட்நாயக் தனது தந்தை பிஜின் பட்நாயக் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தேவேகவுடாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை இதன்காரணமாக தற்போது தேவேகவுடா அமைப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு செல்லவில்லை. அவருக்கு பதில் 4 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தி.மு.க. குழு பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கும் குமாரசாமி அழைப்பு விடுத்து இருந்தார். இதை ஏற்று கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். காவிரிக்காக கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவதற்காக முதல் அடியாகவே இதில் கலந்து கொள்வதாக கமல்ஹாசன் கூறினார். #KarnatakaFloorTest #Kumarasamy #AkhileshYadav #Mayawati #ChandrashekarRao #NaveenPatnaik
    பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும்,உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையில் குடியேற உள்ளார். #Mayawati
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தற்போது உள்ள அரசு பங்களாவிலிருந்து, தனக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவிற்கு குடியேற உள்ளார்.
           
    உச்சநீதிமன்றம் முன்னாள் முதல்-மந்திரிகள் 6 பேர் அரசு மாளிகையிலிருந்து 15 நாட்களில் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் சென்ற வாரம் அனுப்பியிருந்தது. இதையடுத்து, மாயாவதி 2010-ம் ஆண்டில் வாங்கிய புதிய பங்களாவிற்கு மாற வேண்டும் என தனது கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் விரைவில் அங்கு குடியேற உள்ளார்.


    உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து முலாயம் சிங் யாதவ் உட்பட பல தலைவர்கள் தங்கள் அரசு இருப்பிடங்களை காலி செய்கின்றனர்.  #Mayawati
    ×