என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bahujan samaj"
- பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது.
- இதில் மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோ:
உத்தரப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியான மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாயாவதி தனது அரசியல் வாரிசை அறிவித்தார்.
இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான உதய்வீர் சிங் கூறுகையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை அவர் அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.
- புதுவை பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், மாநில மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி.யும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் சித்தார்த், மத்திய ஒருங்கிணைப்பாளர், நித்தின் சிங் தலைமையேற்று கலந்துகொண்டனர்.
- நிகழ்ச்சியில் 200 இளைஞர்களுடன் சீஷப்பிள்ளை கட்சியில் இணைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், மாநில மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி.யும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் சித்தார்த், மத்திய ஒருங்கிணைப்பாளர், நித்தின் சிங் தலைமையேற்று கலந்துகொண்டனர்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின் 150 வாகனங்களில் 300 பேர்கள் யானைக்கொடியேந்தி பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளராக பாவானி இளவேனிலை தேசிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்தனர். இளைஞர்கள் அனைவரும் ஜெய் பீம் முழக்கமிட்டனர்.
அதனை தொடர்ந்து ஏற்புரை வழங்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் பவானி இளவேனில் புதுவையில் பாபாசாகேப் அம்பேத்கர் கொள்கையை வெற்றியடைய செய்வதே லட்சியம் என பேசினார்.
நிகழ்ச்சியில் 200 இளைஞர்களுடன் சீஷப்பிள்ளை கட்சியில் இணைந்தனர். கூட்டத்தில் புதுவை மாநில தலைவர் மூர்த்தி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பறை இசை மற்றும் கொள்கை பாடலுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர்கள் கி.கோ.மதிவதணன் மற்றும் உதயகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் 2012-ல் இருந்து 2017 வரை அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்து வந்தார். அப்போது 2012-ல் இருந்து 2013 வரை சுரங்கத்துறை மந்திரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர் வேறு மந்திரி நியமிக்கப்பட்டார்.
இந்த காலக்கட்டத்தில் விதிமுறைகளை மீறி சுரங்கங்களை அனுமதித்து முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஏற்கனவே சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, சமாஜ்வாடி எம்.எல்.சி. ரமேஷ்குமார் மிஸ்ரா உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆட்சியில் சுரங்கத் துறை மந்திரியாக இருந்தவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இது சம்பந்தமாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதால் அதை உடைக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணையை மத்திய பாரதீய ஜனதா அரசு ஏவி விட்டுள்ளது.
பழைய வழக்கை மீண்டும் தோண்டி விசாரிக்கிறார்கள். இதன்மூலம் பாரதீய ஜனதா தனது உண்மையான முகத்தை காட்டுகிறது.
சி.பி.ஐ.யை தனது கைப்பாவையாக வைத்து கொண்டு பாரதீய ஜனதா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.
நாங்கள் கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க செல்கிறோம். எங்களை தடுத்து விடலாம் என்று பார்க்கிறார்கள். சி.பி.ஐ. என்ன செய்ய முடியுமோ? செய்யட்டும்.
அவர்கள் எங்களிடம் கேள்வி கேட்டால் நாங்கள் பதில் சொல்ல தயார். நாங்கள் சொல்லும் பதில் மட்டும் அல்ல, இந்த நாட்டின் மக்களும் பாரதீய ஜனதாவுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள்.
பாரதீய ஜனதா தனது உண்மை முகத்தை காட்டியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு காலத்தில் காங்கிரஸ் இதை செய்தது. இப்போது பாரதீய ஜனதா செய்கிறது.
பாரதீய ஜனதாவின் இந்த செயலுக்கு எதிர் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #akhileshyadav #Samajwadi Bahujansamaji
அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இதற்காக இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் பல்வேறு மாநில கட்சிகளுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப இந்த கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து பா.ஜனதாவை எதிர்த்து வருகின்றன.
ஆனால் விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் முடிவை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எடுத்துள்ளார். அதன்படி சத்தீஷ்கார் மாநில தேர்தலில், அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் அவர் இறுதி செய்துள்ளார்.
அதேநேரம் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தங்கள் மரியாதைக்கு குறைவாக எதையும் ஏற்கமாட்டோம் எனவும் அவர் கூறினார்.
மாயாவதியின் இந்த திடீர் நடவடிக்கையால் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது. அப்படி 3-வது அணி உருவானால் மாநில தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கே வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். #Mayawati #BahujanSamaj
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்