என் மலர்
நீங்கள் தேடியது "porkodi"
- ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார்.
- புதிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடந்தது.
அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார். கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்த பொற்கொடி 32 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார்.
யானை தனது துதிக்கையில் பேனாவை பிடித்து எடுத்து செல்வதுபோல் உள்ள நீலம், வெண்மை நிறத்திலான கொடியை அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், த.வெ.க. கொடியில் யானை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று நடந்த நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் சமாஜ் தரப்பு பதில் அளித்தது.
இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- ஆம்ஸ்ட்ராங் மனைவி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம்.
- உச்சநீதிமன்றம் நீதிபதி பி. ஆனந்தன் மாநில தலைவராக நியமனம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கொலையில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
- மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கொலையில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், என்னை பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் என்ற பெயரை பயன்படுத்தாமல், திருமதி ஆம்ஸ்ட்ராங் என்று பயன்படுத்துங்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் பெயரை நினைவூட்டவே இது போன்று மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன்.
- என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கொலையில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியும், மாநிலத் தலைவராக வழக்கறிஞர் பி. ஆனந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பா. ரஞ்சித் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் பி. ஆனந்தன் அவர்களையும், மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
மறைந்த சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் தன்னலமற்ற கள செயற்பாட்டைப் போல தலித் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் எவ்விதமான சமரசமும் பின்வாங்கலும் இல்லாமல் சித்தாந்தத் தெளிவுடன் பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
- மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கொலையில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி வழக்கறிஞர் ஆனந்தன் அவர்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தங்கை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
நம்முடைய தாத்தாக்கள் இரட்டைமலை சீனிவாசனார், அயோத்திதாச பண்டிதர், 'புரட்சியாளர்' சட்டமேதை அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் காட்டிய வழியில் பயணித்து, ஒடுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டிருக்கும் ஆதித்தமிழ்க்குடி மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் பாடுபடவும், மறைந்த அன்பிற்குரிய தம்பி ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






