search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதிய ஜனதா"

    • விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்
    • சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    கன்னியாகுமரி:

    தமிழக பா.ஜ.க. தலை வர் அண்ணாமலை வருகிற 12-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    இதையொட்டி கன்னி யாகுமரிக்கு வரும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோ சிப்பதற்காக அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.

    கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வ ரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் சுயம்பு லிங்கம், தெற்கு வட்டாரத் தலைவர் சுயம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    கன்னியாகுமரிக்கு வருகிற 12-ந்தேதி வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • தக்கலையில் காவடி கட்டத் தடை-அனுமதியால் பரபரப்பு
    • இன்று காலை தாமதமாக தொடங்கியது ஊர்வலம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தக்கலை குமார கோவிலில் அமைந்துள்ள வேளிமலை முருகன் கோவில்.

    இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஊர்வலத்தில் போலீஸ், பொதுப்பணி என அரசு துறைகள் சார்பிலும் காவடி எடுப்பது உண்டு.

    காவடி கட்டிய பின்னர் அதனை யானை மீது வைத்து ஊர்வலம் நடைபெறும். இந்த ஆண்டு ஊர்வலம் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை நடை பெற்றது.முன்னதாக ஊர்வலம் செல்லும் சாலையோரம் காவடிகளை வரவேற்கும் விதமாக வாழைக்குலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    ஊர்வலத்தில் பங்கேற்ப தற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காவடி கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தக்கலை போலீஸ் நிலையத்திலும் காவடி கட்டுவதற்கான பணிகள் மற்றும் பூஜை ஏற்பாடுகள் நேற்று மாலை யில் தொடங்கியது.

    ஆனால் இரவு 9 மணிக்கு மேல் பணிகள் எதுவும் நடைபெறாமல் ேபாலீஸ் நிலையம் களையிழந்து காணப்பட்டது. இந்த சூழலில் போலீஸ் நிலையம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இங்கு வைத்து காவடி கட்டக் கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதனால் பாரதிய ஜனதா வினர் அதிருப்தி அடைந்த னர். அவர்களும், இந்து முன்னணி அமைப்பினரும் நள்ளிரவு 12 மணிக்கு தக்கலை போலீஸ் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இன்று அதிகாலை 2 மணி வரை அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமர சம் செய்ய முயன்றனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதே நேரம் போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணியும் நடைபெறவில்லை. இத னால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் போலீஸ் காவடி இல்லாமல், வேளி மலை முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் செல்லக் கூடாது. நாளை (இன்று) காலை அனைத்து பகுதி களில் இருந்து எடுக்கப்படும் காவடிகளும் தக்கலை போலீஸ் நிலையம் முன்பு வரவேண்டும் என போரா ட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த சூழலில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் இருந்து யானையுடன் காவடி ஊர்வலங்கள் புறப்பட்டன. அவை தக்கலை போலீஸ் முன்பு வரக்கூடும் என்பதால் பல இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலங் காலமாக செந்தூர் முருகன் காவடி, தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வேளிமலை முருகன் சந்நிதியில் நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சி னையால் இன்று அதிகாலை தொடங்க வேண்டிய பூஜை சடங்குகள் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படவில்லை.

    எனவே அனைத்து முருக பக்தர்களும், பாரதிய ஜனதா நிர்வாகிகளும், பொது மக்களும் தக்கலை காவல் நிலையம் முன்பு நியாயம் கேட்க திரள வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

    ஆண்டு தோறும் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய காவடி ஊர்வலம் இன்று தொடங்கப்படாதது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் போலீஸ் காவடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணிகள் தொடங்கின.

    இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் புறப்பட்ட காவடிகள், வேளிமலை முருகன் கோவிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றன.

    இந்த நிலையில் தக்கலைக்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் பாரம்பரியமாக தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ்பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசு அமைப்புகள் சார்பில் குமாரகோவிலுக்கு காவடிக்கட்டு செல்வது பாரம்பரியமாக நடை பெற்று வருகிறது

    ஆனால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மேடைகளிலும் பொது வெளியிலும் மத ஒற்றுமையை பற்றி பேசி விட்டு இது போன்ற பாரம்பரியமான நிகழ்ச்சி களுக்கு திட்டமிட்டு தடை ஏற்படுத்தி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல் படுகின்றனர். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்ற அதிகாரிகள் குறைந்த கால கட்டங்களில் மாவட்டத்தில் பணிபுரிவார்கள். ஆனால் உள்ளூர் அமைச்சர் அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

    • தக்கலை - ராமன்பரம்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
    • உண்ணாவிரதம் இருக்கலாம் ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்த போலீசாருடன் கடும் வாக்கு வாதம்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள பத்மனாபபுரம் நகரட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தக்கலை - ராமன்பரம்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிபட்டு வந்தனர், சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கவுன்சிலர் கீதா பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை.

    இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தக்கலை பஸ் நிலையம் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாரதிய ஜனதாவினர் பேராட்டத்திற்கு திரண்ட னர். உண்ணாவிரதம் இருப்பவர் வசதிக்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்தனர்.

    இதற்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பந்தலை அகற்ற பாரதிய ஜனதாவினர் மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உன்னி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்துக்கு பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் குமாரதாஸ், மாவட்ட நிர்வாகிகள் குமரி ரமேஷ், டாக்டர் சுகுமாரன், ஷண்முகம், துளசிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன் விரோதம் காரணமாக தாக்குதல்
    • ண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது37). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜென்சிமலர் (35). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரபுராஜ் (38). கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிரிஜா (35). இவர் இரணியல் பேரூராட்சியில் 4-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலராக இருந்து வருகிறார்.

    ஜென்சிமலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரணியல் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்திருந்தார். இதனால் இவருக்கும் கிரிஜாவுக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜென்சிமலர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். கிரிஜா வீட்டு அருகில் வந்தபோது அங்கு நின்ற பிரபுராஜ், ஜென்சிமலரை தடுத்து நிறுத்தி எங்களுக்கு தெரியாமல் குடிநீர் இணைப்பு கேட்பாயா என அவதூறாக பேசி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் இருவரும் ஜென்சிமலரிடம் இருந்த செல்போன் மற்றும் ஸ்கூட்டரையும் சேதப்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இவற்றின் சேதமதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் இருக்கும்.

    காயம் அடைந்த ஜென்சி மலர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பிரபுராஜ், கிரிஜா ஆகிய இருவர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள அவர்களைதேடி வரு கின்றனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.
    • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில்:

    பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா வினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளையாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார்.

    அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் பாரத் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திர ளான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறை வில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தக்கலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் இரணியல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பேரூர் பாஜக தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் பத்மநாபன் பேரூர் தலைவர் ஸ்ரீகலாமுருகன் மாவட்ட செயலாளர் பிரியா சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணகுமார் மாவட்ட பார்வையாளர் குமார் தாஸ் பொது செயலாளர் வக்கீல் பத்மகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்திற்கு குமரி பா. ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் சிவக்குமார், ராஜக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயஸ்ரீ, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, பாஜக ஒன்றிய செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தாமோதரன் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் செல்லத்துரை, ரமேஷ் முன்னாள் வந்திய கவுன்சிலர் சுகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆசாரிபள்ளம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மேற்கு மாநகர பாஜக தலைவர் சிவசீலன் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஆன்றோடைல்ஸ்டைனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    போராட்டத்தில் மாநகர பொதுச்செயலாளர்கள் வேலானந்தன், பிரஜாபதி, பொருளாளர் ராஜுவ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ பிரசாத் மாநகர தொழில் பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

    குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் குமாரதாஸ், நகர பார்வையாளர் சிவகுமார் பிரபு, மாவட்ட பிரசார அணி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், நகர பொதுச்செயலாளர் ஜெனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் பிரதீப்குமார் வரவேற்று பேசினார்.மாவட்ட முன்னாள் தலைவர் பொன் ரெத்தினமணி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுஜித்திரா, முன்னாள் கவுன்சிலர் விஜயராணி மற்றும் ஜஸ்டின் செல்வகுமார், பகவதியப்பன், ஜெயச்சந்திரன், ராஜன், சூர்யா முருகன், அல்போன்ஸ், ஜாண்சன், டிக்சன், பெருமாள், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞர் காங்கிரசை கண்டித்து போராட்டம் நடந்தது
    • சோனியா, ராகுல் காந்தி உருவ படம் எரிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி ராணி உருவ பொம்மையை திங்கள் நகரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் எரித்ததை கண்டித்து திங்கள் நகர் பஸ் நிலையம் முன்பு குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சி.பி.ராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் மனோர குமார், கோபுஜி, செந்தில், கவுன்சிலர்கள் ஜெய சேகரன், முத்துக்குமார், கவுதமி, சுஜாதா உட்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் சிவகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள் ஸ்ரீகலா முருகன், விஜயலட்சுமி பாலசுப்ர மணியன், குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் அனுஷா தேவி, மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தின மணி, மற்றும் மாவட்ட, ஒன்றிய பஞ்சாயத்து பாரதிய ஜனதா பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது சோனியா, ராகுல் காந்தி உருவ படம் எரிக்க பட்டது. இதுகுறித்து இரணியல் போலீசார் ஒன்றிய தலைவர் சி.பி.ராஜ் மற்றும் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • தோட்டக்கலை மூலம், ஒட்டுண்ணி இலவசமாக மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கிட இந்த செயற்குழு வேளாண் துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு அணிகளின் சார்பாக பலர் கலந்து கொண்டனர்.

    சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சொட்டு நீர் அமைப்பதற்கான மானியம் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதால் மேலும் சொட்டு நீர் அமைக்கும் நிறுவனங்களுக்கான அனுமதி இன்னும் தரப்படா ததால் விவசாயிகள் அவதி பட்டு வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

    கள்ளிப்பூச்சி எனப்படும் மாவு பூச்சிகளால் ஏறக்குறைய ஈரோடு மாவ ட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிடும் பரப்பளவு குறைந்து விட்டது.

    எனவே அதற்கான நடவடிக்கைகளை தோட்டக்கலை மூலம், ஒட்டுண்ணி இலவசமாக மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கிட இந்த செயற்குழு வேளாண் துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது.

    ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர்.ரகுகுமார் இந்த தீர்மானங்களை முன்மொழி ந்தார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார், நீராபாலு, மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சிவகுமார் மற்றும்நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போராட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது
    • காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை வரை நடந்தது

    நாகர்கோவில் :

    தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்ட பார திய ஜனதா சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ஜெகநாதன், வினோத், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பொருளாளர் முத்துராமன், துணை தலைவர்கள் தேவ், சொக்கலிங்கம் அமைப்புச் செயலாளர்கள் கிருஷ்ணன், கிருஷ்ணகுமார் மாநகர பார்வையாளர்கள் அஜித்குமார், நாகராஜன் மாநகராட்சி கவுன்சிலர்கள் சுனில், ரமேஷ், அய்யப்பன் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் மாவட்ட தலைவர் தர்மராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மனசாட்சியில்லாத அரசாக இந்த அரசு விளங்குகிறது.

    மத்திய அரசு 2 முறை பெட்ரோல்-டீசல் விலையை குறைத்த பிறகும் கூட தி.மு.க. அரசு குறைக்கவில்லை. தமிழகத்தை காக்க தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

    நம்மை வருத்தி இந்த போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும்.தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக 60 மாவட்டங்களில் உண்ணா விரதம் நடந்து வரும் நிலையில் அங்கு அனுமதிகள் அளிக்கப்பட்டது. ஆனால் குமரி மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு பந்தல் அமைக்க நேற்று இரவு கூட அனுமதி மறுக்கப்பட்டது.பல போராட்டத்துக்கு பிறகு இன்று காலை தான் பந்தல் அமைக்க அனுமதி அளித்தார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 613 பேர் மீது வழக்கு
    • தேரை வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு

    நாகர்கோவில்:

    வேளிமலை முருகன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் ஈடு பட்ட 63 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்க ப்பட்டனர். கைது செய்யப்பட்ட 63 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. உள்பட 63 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எம்.ஆர். காந்தி மற்றும் பாரதிய ஜனதாவினர் கைது செய்யப்பட்டதை அறிந்த கட்சி நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் அண்ணா சிலை முன்பு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஜெகநாதன் தலைமையில் போராட்டம் நடந்தது. மாநிலச் செயலாளர் மீனாதேவ், மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பாரதிய ஜனதாவினர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குலசேகரம் சந்திப்பில் மாவட்ட துணை தலைவர் முருகன் தலைமையிலும், தக்கலை பஸ் நிலையம் பகுதியில் விவசாய அணி தலைவர் முருகராஜன் தலைமையிலும், கொல்லங்கோடு கண்ண நாகம் சந்திப்பு பகுதியில் கொல்லங்கோடு நகராட்சி உறுப்பினர் பத்மகுமார் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.

    புதுக்கடை பகுதியில் பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார் தலைமை யிலும், திங்கள்நகர் பஸ் நிலையம் முன்பு மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.மறியல் போராட்டத்தில் வில்லுகுறி பஞ்சாயத்து தலைவர் விஜயலட்சுமி, கவுன்சிலர்கள் சரவணன், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தோவாளையில் மாவட்ட பொதுச் செயலாளரின் சொக்கலிங்கம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. சுசீந்திரம், மேல்புறம், மார்த்தாண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 613 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் அமைத்துள்ள மெகா கூட்டணியில் ஜார்க்கண்ட் மாநில கட்சிகளும் இணைகிறது.
    புதுடெல்லி:

    2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தயாராகி வருகின்றன.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனது பழைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து பேசி கூட்டணியை புதுப்பித்து வருகிறார். இது தவிர புதிதாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறிய கட்சிகளையும் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதேபோல் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரசும் மெகா கூட்டணி அமைத்து வருகிறது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த கர்நாடக மந்திரிசபை பதவி ஏற்பு விழாவில் சோனியா, ராகுல் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று திரண்டனர்.

    தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து அளித்து எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜனதாவுக்கு எதிராக திரட்டியது. அடுத்து இந்த கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறது. இதுதவிர ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மாநில கட்சியான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகளை மெகா கூட்டணிக்கு இழுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுடன் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதிலும் கூட்டணி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளது.

    இங்கு சமீபத்தில் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான அகில இந்திய பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங் கூறும்போது 2019 பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது என்றார்.
    ×