search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமறைவு"

    • பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
    • இந்த சம்பவம் தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தலைமறைவு ஆகியுள்ளார்.

    டி.ஜி.பி ராஜேஷ் தாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சென்ற நிலையில், அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடும் பணியை தொடங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரி ரேவதி தகவல் தெரிவித்துள்ளார்.

    தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார்.

    இந்த சம்பவம் தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அந்தத் தீர்ப்பில், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில் ராஜேஸ்தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    • ஹேமந்த் சோரன் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.
    • 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக குவிப்பு.

    ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் ராஞ்சி இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.

    இந்நிலையில், ஹேமந்த் சோரன் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் மாநில தலைநகரை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

    ஜார்கண்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கர்நாடகாவில் போலீசார் கைது செய்தனர்
    • பெயர்- விலாசம் மாற்றம்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமலகண்ணன்(வயது 42). தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

    மேலும் இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இதில் கமலக்கண்ணன் முன்விரோதம் காரணமாக

    கடந்த 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் 5-ந் தேதி வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள சக்தி நகரில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் நேதாஜி நகரை சேர்ந்த சுதாகர்(வயது 31), விஸ்வநாதன்(23) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த விஸ்வநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினார்.

    இவரைப் பிடிக்க கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வாணியம்பாடி கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் விஸ்வநாதன் வசித்து வந்த நிலையில் மீண்டும் போலிஸ் தன்னை தேடுவதை அறிந்த அவர் கர்நாடகா மாநிலத்திற்கு தப்பி ஓடி விட்டார்.

    பின்னர் கர்நாடகவில் பதுங்கியிருந்த விஸ்வநாதனை தனிப்படை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    விஸ்வநாதனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    ஜாமினில் வெளியே சென்றவர் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் தஞ்சம் அடைந்தார்.

    அங்கு தன் பெயர், விலாசம் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை மாற்றி கொண்டு, வாய் பேசாத லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

    இவருக்கு 12 வயதில் மகன் உள்ளான். நாங்கள் திருப்பதி வருவதை அறிந்த விஸ்வநாதன், கர்நாடகாவுக்கு தப்பி சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்று கைது செய்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • திருச்சியில் கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இலங்கை நபர்
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டை

    திருச்சி,

    சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56). இலங்கை அகதியான இந்த வாலிபர் செங்கல்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார். பின்னர் கடந்த 2000ல் திருச்சியில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்த் உள்பட 9 பேரை கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு திருச்சி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    கைதாகி ஜாமீனில் வந்த ஆனந்த் ஓரிரு முறை கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நிலை வந்த போது திடீரென தலைமறைவாகிவிட்டார்.கடந்த 2004 பிப்ரவரி 6ம் தேதி முதல் அவரை காணவில்லை.

    இதற்கிடையே இந்த வழக்கில் ஆனந்துடன் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஆனால் ஆனந்த் தலைமறைவாக இருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் இதுவரை தீர்ப்பு கூறப்படவில்லை.

    19 ஆண்டுகளை கடந்தும் வழக்கினை முடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.சென்னையில் வசித்து வரும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி திரும்பி உள்ளனர்.

    • அடிதடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்த தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த வேண்டும் என வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காட்டாண்டிக்குப்பம் பூவராகவமூர் த்தி(35),மாளிகம்பட்டு மணிகண்டன். இவர்கள் அடிதடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.இவர்கள்மீதானவழக்குவிசாரணை பண்ருட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இவர்கள் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த வேண்டும் என வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.கடலூர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன்ஆகியோர் இவர்களை கைது செய்து பிடியானை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 4 பேரும் பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைய வைத்துவிட்டு சென்றனர்.
    • தலைமறைவாக உள்ள ராஜகுருநாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.

    கள்ளக்குறிச்சி,அக்.22-

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஜா. ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுருநாதன் (வயது 61). விவசாயி. இவருக்கு தியாக துருகம் அருகே அசகளத்தூர் கிராம எல்லையில் விவசாய நிலம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் ஜா.ஏந்தல் பகுதி யைச் சேர்ந்த பெரியசாமி (40), மணிகண்டன் (41) அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (55), ராஜேந்திரன் (46) ஆகியோ ரை தனது விவசாய நிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். வேலை முடிந்ததும் அனை வரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜகுருநாதன் மின் மோட்டாரில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் எடுத்துச் சென்று அருகில் உள்ள மயூரா ஆற்றில் மின்சாரம் செலுத்தி 5 பேரும் மீன்பிடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி யதில் பெரியசாமி கீழே கல்லின் மீது விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக கூறப்படு கிறது. 

    இதனைத் தொடர்ந்து ராஜகுருநாதன், மணி கண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகிய 4 பேரும் பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைய வைத்துவிட்டு சென்றனர். மீண்டும் நள்ளிரவில் ராஜகுருநாதன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மயூரா ஆற்றிற்கு சென்று அங்கு முட்புதரில் மறைய வைத்திருந்த பெரியசாமி யின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவே உட்கார வைத்துக்கொண்டு சென்றனர். ராஜகுருநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து கொண்டு உடலை பிடித்துக் கொண்டு அசகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் உடலை போட்டுவிட்டு சென்று விட்டனர். இறந்து கிடந்த பெரிய சாமி யின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பெரிய சாமியின் உடலை கைப்பற்றி கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை செய்ததில் ராஜகுரு நாதன் நிலத்திற்கு விவசாய வேலைக்கு ஆட்களை அழைத்து சென்றதும். வேலை முடிந்ததும் ஆற்றில் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்கும் போது இறந்து போனதும் தெரியவந்தது. இதுகுறித்து பெரியசாமி மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் காமராஜ், ராஜேந்திரன், மணிகண்டன் ஆகிய 3- பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள ராஜகுருநாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.

    • சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39).
    • சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி பிடி ஆணை பிறப்பித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த ஜெயபிரகாஷ் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி பிடி ஆணை பிறப்பித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷை கன்னங்குறிச்சி போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

    • குறைவான விலையில் முந்திரிகள் அனுப்பி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.
    • பல தவணைகளாக ரூ.64.74 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் தொழில் சம்பந்தமான வங்கி கணக்கு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வைத்துள்ளார். அப்போது உதவி மேலாளராக பணிபுரியும் ஜெயா கிறிஸ்ட் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இவர் ஆப்பிரிக்காவில் முந்திரி வியாபாரம் செய்யும் கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதியை சேர்ந்த ஆஸ்டின்ராய் என்ற ராய் பெர்ணான்டோ (65) என்பவரை அறிமுகம் செய்துவைத்துள்ளார். அவர் ஆப்பிரிக்காவில் வியாபாரம் செய்து வருவதாகவும் தமிழ்நாட்டை விட அங்கு விலை குறைவாக கிடைக்கும் என்று கூறி உங்களுக்கும் குறைவான விலையில் முந்திரிகள் அனுப்பி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.

    இதனை நம்பி பல தவணைகளாக ரூ.64.74 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் பணத்தை வாங்கி விட்டு முந்திரி அனுப்பி வைக்காமல் மோசடி செய்துள்ளார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

    இந்த தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்டின் ராய் என்பவரை தேடி வந்தனர். ஆனால் ஆஸ்டின் ராய் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். அவர் எப்போது வந்தாலும் கைது செய்வதற்காக ஆஸ்டின் ராய் தொடர்பான விபரங்களையும் அவரது புகைப்படத்தையும் திருவனந்தபுரம், சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு குற்றப்பிரிவு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்டின் ராய் நேற்று வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது ஆஸ்டின் ராய் போலீசாரால் தேடப்பட்டு வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே விமான நிலைய அதிகாரிகள் குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சென்னைக்கு சென்று அவரை கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். ஆஸ்டின் ராயிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆஸ்டின் ராய் மனைவி மேக்லின் ராய், அவரது மகன் டான் ரினால்டா ராய், வங்கி உதவி மேலாளர் ஜெயா கிறிஸ்ட் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெயங்கொண்டம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவு
    • தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான கணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் அடுத்த கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(வயது35). இவரது மனைவி பானு ப்பிரியா(29). இவர்களுக்கு 3 வயதில் ஆண் ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர்கள் இலையூர் கண்டி யங்கொல்லையிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மனோகரன் பானுப்பிரியா அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

    இதனிடையே மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த மனோகரன் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட பானுப்பிரியா, வாரியங்காவில் வசிக்கும் தனது தந்தை நீலமேகம் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து வேலைக்குச் சென்றுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று உணவகத்தில் வேலை செய்து கொ ண்டிருந்த பானுப்பிரி யாவை, இனி வேலைக்கு செல்லக்கூடாது என மனோ கரன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மனோகரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பானுப்பிரியாவின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தகவலறிந்து வந்த பானுப்பி ரியாவின் தந்தை நீலமேகம், ரத்த வெள்ளத்தில் கிடந்த பானுப்பிரியாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து நீலமேகம் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மனோகரனை தேடி வருகின்றனர்.

    • இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
    • ஆந்திர மாநில வனச்சரகர் வெங்கட் ரமணா தலைமையில், வனத்துறை அதிகாரிகள் வெளாம்பள்ளி, சித்தேரி மலை கிராமங்களுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அரூர்,

    ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் வெட்டி கடத்தியதாக தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வெளாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுந்தரவேலு (21), அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அருணாசலம் (32) ஆகியோரை அந்த மாநில வனத்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர்.

    இந்த நிலையில் , நீதிமன்ற காவலில் இருந்து ஜாமீனில் இருவரும் வெளி வந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, ஆந்திர மாநில வனச்சரகர் வெங்கட் ரமணா தலைமையில், 5 பேர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் வெளாம்பள்ளி, சித்தேரி மலை கிராமங்களுக்கு வந்து தலைமறைவாக இருப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையின் போது அரூர் வனச்சரகர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழக வனத்துறையினர் உடனிருந்தனர்.

    • கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக கர்நாடகா மாநிலத்திற்கும், ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் வெளி மாநிலத்தவர்களுக்கும் ரேஷன் அரிசியை அதிகளவில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    எனவே இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலையில் ஏரகனஹள்ளி -திகினாரை சாலையில் தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் மூட்டையுடன் வந்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அருகில் இருந்த புதரில் சென்று தப்பி சென்று விட்டனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்டது திகினாரையை சேர்ந்த மாதேவா, ஜெயலட்சுமி என தெரிய வந்தது. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • ராதாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • கோபம் கலந்த பாசத்தை வெளிப்படுத்தி கதறி அழுதனர்

    கன்னியாகுமரி :

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் பண்டாரக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவரும், இவரது மனைவி முத்துபேச்சியும் கடந்த ஒரு வருடமாக குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பெரியவிளை கடற்கரை பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களது 14 வயது சிறுமி ராதாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு சிறுமி பெரியவிளை வந்து பெற்றொருடன் தங்கினாள். இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி இரவு பெற்றோருடன் படுத்து தூங்கிய சிறுமியை காணவில்லை. சிறுமியை ஈத்தாமொழி அருகே சுண்டபற்றி விளையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி செல்வகுமார் (35) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்பட்டது.

    இதுகுறித்து தாயார் முத்துபேச்சி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். போலீசார் இருவரையும் தேடுவதை அறிந்த செல்வகுமார் நேற்று மாணவியை மணவாளக்குறிச்சிக்கு பஸ் ஏற்றி விட்டு தலைமறைவானார்.

    இந்நிலையில் நேற்று காலை மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா மண்டைக்காடு அருகே பரப்பற்று பகுதியில் ரோந்து செல்லும்போது, அங்கு தனியாக ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள். போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த சிறுமி பெரியவிளை கூடாரத்திலிருந்து காணாமல் போனவர் என தெரியவந்தது. உடனே போலீசார் சிறுமியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி மீட்கப்பட்ட தகவலறிந்த உறவினர்கள் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்திலேயே சிறுமியை பேசி, கோபம் கலந்த பாசத்தை வெளிப்படுத்தி கதறி அழுதனர். இது காண்போரின் நெஞ்சை உருக்கியது.

    ×