search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் நெடுங்காட்டில் தலைமறைவாக இருந்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது
    X

    காரைக்கால் நெடுங்காட்டில் தலைமறைவாக இருந்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது

    • 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது
    • போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. தலைமறைவுஇதுகுறித்து சிறுமியின் தந்தை நெருங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அன்புசெல்வனை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 13-ந்தேதி அன்புசெல்வன் வீட்டில் பதுங்கி இருப்பதாக நெடுங்காடு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆபத்தானநிலையில் இருந்த அன்பு செல்வனை போலீசார் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 4 நாட்கள் சிகிச்சையில் இருந்த அன்பு செல்வன் உடல்நிலை சரியானதை அடுத்து போலீசார் போக்சோ வழக்கில் அன்புசெல்வனை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×