என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nurse murder"

    • எனக்கும் சித்ராவுக்கும் சொந்த ஊர் மதுரைதான்.
    • சித்ராவின் செல்போனுக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி போன் செய்தார்.

    திருப்பூர்:

    மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 30). இவரது மனைவி சித்ரா(27). இவர்களுக்கு 9 வயதில் மகள், 1½ வயதில் மகன் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே, சித்ரா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் திருப்பூரில் வேலை பார்த்து வந்த தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    மேலும் சித்ரா திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பல் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக செவிலியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் சித்ரா தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சித்ராவை அவரது கணவர் ராஜேஷ்கண்ணா தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் இருந்து மதுரைக்கு தப்பி சென்ற ராஜேஷ் கண்ணாவை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மனைவி சித்ராவை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் சித்ராவுக்கும் சொந்த ஊர் மதுரைதான். இதனால் இருவரும் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தோம். 2 குழந்தைகள் உள்ளனர். நாங்கள் காதலித்து திருமணம் செய்ததால் எங்களது 2 குடும்பத்தினரிடையே பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக எங்கள் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் நான் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்தேன். மேலும் சித்ராவின் உறவினர்கள் யாராவது வீட்டிற்கு வந்தால் சந்தேகப்பட்டேன். இதனால் சித்ரா அவரது உறவினர்கள் யாரையும் வீட்டிற்கு அழைத்து வராமல் இருந்து வந்தார். இது எங்களுக்குள் பிரச்சனையை அதிகப்படுத்தியது.

    தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் சித்ரா என் மீது கோபப்பட்டு திருப்பூரில் வேலை பார்த்து வந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்று விட்டார். சித்ரா பிரிந்து சென்றதால் மிகவும் கவலையடைந்தேன்.

    அவரை செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்ததுடன், கருத்தடையும் செய்து கொண்டார். ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் வர மறுத்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நானே திருப்பூர் சென்றேன். அங்கு சித்ராவிடம் நான் இனிமேல் தகராறு செய்யமாட்டேன். நாம் மதுரைக்கு குழந்தைகளுடன் சென்று வாழ்வோம் என தெரிவித்தேன். அதற்கு சித்ரா கொஞ்ச நாள் கழித்து செல்வோம் என தெரிவித்தார். இது எனக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

    இதையடுத்து 3 நாட்களாக திருப்பூரில் சித்ராவுடன் இருந்தேன். குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் சென்று வந்தோம். இதனிடையே சித்ராவின் செல்போனுக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி போன் செய்தார். சந்தேகமடைந்த நான் சித்ராவின் செல்போனை பார்த்தபோது அதில் வாலிபரின் புகைப்படங்கள் இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வர நேரமாகும் என்றதால் நான் ஆஸ்பத்திரிக்கு சென்று சித்ராவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். பின்னர் மாமனார்-மாமியாரிடம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி விட்டு வருகிறோம் என்று கூறி விட்டு 2 பேரும் வெளியே சென்றோம்.

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடையில் குழந்தைகளுக்கு தேவையான இனிப்புகளை வாங்கி கொண்டு திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி பின்புறம் உள்ள மாமனார் வீட்டிற்கு சித்ராவுடன் சென்றேன். தோளில் கையை போட்டு இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு சென்றோம்.

    அப்போது வாலிபருடனான தொடர்பு குறித்து சித்ராவிடம் கேட்டேன். இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் சித்ராவை சரமாரி தாக்கினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்திற்கு சித்ராவை தூக்கிச்சென்று தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்தேன்.

    போலீசாருக்கு அடையாளம் தெரியாமல் இருக்க கல்லால் சித்ராவின் முகத்தை சிதைத்தேன். பின்னர் திருப்பூரில் இருந்து பஸ் ஏறி மதுரைக்கு சென்றேன். ஆனால் போலீசார் நாங்கள் சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவானதை வைத்து என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.

    மேலும், அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரையை சேர்ந்த சித்ரா (வயது 28) என்பதும், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

    கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்ததுள்ளது.

    சித்ரா தனது கணவன் ராஜேஷ் கண்ணாவை விட்டு பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்து வந்தார்.

    மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. ராஜேஷ் கண்ணாவும் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், செவிலியர் சித்ராவை கொலை செய்ததாக அவரது கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கொலை சம்பவம் தொடர்புடைய சிசிடிவி காட்சி உள்ளிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

    மதுரை அலங்காநல்லூரில் வைத்து ராஜேஷ் கண்ணாவை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது.இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.

    மேலும் அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரையை சேர்ந்த சித்ரா (வயது 28) என்பதும், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்ததுள்ளது.

    சித்ரா தனது கணவன் ராஜேஷ் கண்ணாவை விட்டு பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்து வந்தார்.

    மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    ராஜேஷ் கண்ணாவும் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • காதல் பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீடு உள்ளது. இன்று காலை அங்கு இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.

    மேலும் அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் அவரை கொலை செய்த மர்மநபர்கள் யாரென்று தெரியவில்லை. பூம்புகார் நகர் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நேற்றிரவு பணி முடிந்து செல்லும்போது மர்மநபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த வீட்டிற்கு கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அல்லது காதல் பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையாளிகள் யாரென்று கண்டறிய அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் செவிலியர்களில் யாராவது மாயமாகி உள்ளனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலையில் கல்லைப்போட்டு செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பார்வதி வேலை முடிந்து வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடினர்.
    • இரவு முழுவதும் தேடியும் பார்வதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வால்மீகிபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (வயது 35). இவர் சித்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற பார்வதி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தார் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து பார்வதி குறித்து விசாரித்தனர். அவர்கள் பார்வதி வேலையை முடித்து வீட்டுக்கு கிளம்பி விட்டதாக தெரிவித்தனர்.

    பார்வதி வேலை முடிந்து வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இரவு முழுவதும் தேடியும் பார்வதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு வெளியே உள்ள மரத்தில் பார்வதி நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பார்வதி குடும்பத்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது பார்வதியின் கால்கள் தரையில் தொட்டபடி பிணமாக கிடந்தார். பார்வதியின் உடலில் ஆங்காங்கே நககீறல்கள் ஏற்பட்டு ரத்த காயம் இருந்தது.

    இதனால் அவரை கும்பல் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பார்வதியை மர்மகும்பல் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • அனுராதா கொடுத்த கடனை திருப்பித் தருமாறு சந்திரமவுலிக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
    • தலை கிடந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தராபத் மல்கப் பேட்டையை சேர்ந்தவர் அனுராதா (வயது 55). இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    ஐதராபாத் மலைக் பேட்டையை சேர்ந்தவர் சந்திர மவுலி. வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தையை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போது நர்சு அனுராதாவுடன் அவரது தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பிய சந்திரமவுலியின் தந்தை நர்சு அனுராதாவுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார். இதனையடுத்து அனுராதாவை அவரது வீட்டில் கீழ் தளத்தில் தங்க வைத்தார்.

    சந்திரமவுலி குடும்பத்தினர் நர்சு அனுராதா உடன் சகஜமாக பழகினர்.

    ஆன்லைன் வர்த்தகத்தில் சந்திரமவுலிக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அனுராதாவிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கினார்.

    இந்த நிலையில் அனுராதா கொடுத்த கடனை திருப்பித் தருமாறு சந்திரமவுலிக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் அனுராதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று சந்திர மவுலி அனுராதா வீட்டிற்கு சென்றார். சத்தம் கேட்காமல் இருக்க வீட்டில் உள்ள ஜன்னல், கதவுகளை மூடினார். வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அனுராதாவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் டைல்ஸ் கட்டர் கருவி மற்றும் கத்தியை கொண்டு அனுராதாவின் உடலில் இருந்து தலையை தனியாக துண்டித்தார்.

    உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். துர்நாற்றம் வீசாமல் இருக்க ரசாயனங்களை உடல் பாகங்களில் தடவினார். அனைத்து உடல் பாகங்களையும் பிரிட்ஜில் அடைத்தார். மேலும் வெளியே துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஸ்பிரே அடித்து வந்தார்.

    துண்டிக்கப்பட்ட நர்சு தலையை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து ஆட்டோவில் எடுத்துச் சென்றார். திகலகுடா, மூசி ஆற்றின் கரையில் தலையை வீசிவிட்டு வந்தார். நர்சு அனுராதா திடீரென மாயமாகி விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடல் பாகங்கள் இருந்த அறைக்கு யாரும் செல்லாதபடி பூட்டு போட்டார்.

    இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆற்றுப்பகுதிக்குச் சென்ற ஒருவர் பிளாஸ்டிக் கவரில் தலை இருப்பதை கண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அழுகிய நிலையில் இருந்த தலையை மீட்டனர்.

    கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டு பிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 750 போலீஸ் நிலையங்களில் காணாமல் போய் கண்டுபிடிக்க படாத பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.

    தலை கிடந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றித்திரிந்தது கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து சந்திர மவுலியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுராதா கடனை திருப்பி கேட்டதால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் சந்திர மவுலியை கைது செய்தனர். பிரிட்ஜில் அடைத்து வைத்திருந்த உடல் பாகங்களை மீட்டனர். அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கைதான சந்திரமவுலியை ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கை என்று கூட பார்க்காமல் நர்சை சரமாரியாக தாக்கினார்.
    • தலையில் மாறி மாறி தாக்கியதால் நர்சு மயங்கி விழுந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கோத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்.

    நர்சிங் படிப்பு முடித்த இவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் டிக்டாக் போன்ற வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வந்தார்.

    இவரது வீடியோவிற்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இது பற்றி அறிந்த அவரது அண்ணன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட வேண்டாம். அது நல்லதல்ல ஒரு சிலர் ஆபாச கருத்துகளையும் வெளியிடலாம் என கூறி எச்சரித்தார்.

    ஆனாலும் நர்சு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். நேற்று முன்தினம் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை கண்ட அவரது அண்ணன் கடுமையாக எச்சரித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கை என்று கூட பார்க்காமல் நர்சை சரமாரியாக தாக்கினார். தலையில் அவர் மாறி மாறி தாக்கியதால் நர்சு மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்டு திடுக்கிட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நர்சை கம்மத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாரங்கல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நர்சின் அண்ணனை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாயமான நர்சை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிலாஸ்பூர்:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய நர்சு ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் திப்திபா கிராமத்தை சேர்ந்த 30 வயதான நர்சு ஒருவர் தனது 11 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 30-ந் தேதி மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட நர்ஸ் மறுநாள் வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் நர்சை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான நர்சை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் ருத்ராப்பூரின் இந்திராசவுக் பகுதியில் இ-ரிக்சாவில் ஏறும் காட்சி கடைசியாக சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி அந்த நர்சின் வீட்டில் இருந்து 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலிமனைப்பகுதியில் நர்ஸ் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    அவரது செல்போன் மற்றும் மணிபர்ஸ் ஆகியவை திருட்டு போய் இருந்தது. நர்சின் செல்போன் எண் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் பரேலியை சேர்ந்த தர்மேந்திரகுமார் என்ற தொழிலாளி அந்த நர்சை கற்பழித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்ட்டது.

    கடந்த 30-ந் தேதி நர்சு ஆஸ்பத்திரியில் பணி முடிந்து தனியாக வீட்டிற்கு சென்ற போது தர்மேந்திரகுமார் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் நர்சை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று கற்பழித்த அவர் நர்சின் கைக்குட்டையாலேயே மூச்சு திணற செய்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜஸ்தானில் பதுங்கி இருந்த தர்மேந்திரகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் நர்சிடம் இருந்து அவர் திருடி இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான தர்மேந்திரகுமார் போதைக்கு அடிமையானவர் என்றும் அவர் நர்சை கழுத்தை நெரித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆண்டிபட்டி அருகே அரசு ஆஸ்பத்திரி செவிலியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (43). இவர் ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 17 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை பிரிந்து திண்டுக்கல்லில் தனியாக வசித்து வருகிறார். அவருடன் குழந்தைகளும் வசித்து வருகின்றனர். ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் செல்வி தனியாக வசித்து வந்தார். இருந்தபோதும் கணவன்-மனைவி 2 பேரும் தனது குழந்தைகள் குறித்து அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று இரவு சுரேஷ் அவரது மனைவி செல்விக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்போன் சுவிட்ச்ஆப் ஆன நிலையில் இருந்தது. இதனையடுத்து அவரது உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்கு சென்று செல்வியை பார்த்து வருமாறு கூறி உள்ளார்.

    வீடு பூட்டி இருந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தனர். அப்போது செல்வி வீட்டில் உள்ள பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக இறந்து கிடந்துள்ளார். உறவினர்கள் செல்வி இறப்பு குறித்து சுரேசிடம் தெரிவிக்கவே அவர் அலறி துடித்து குழந்தைகளுடன் ஓடி வந்தார்.

    இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    தடயவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. டி.எஸ்.பி. தங்ககிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? குடும்ப பிரச்சனையால் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய நர்ஸ் கொலையில் கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன். இவரது மனைவி மேரி ஏஞ்சலின் (வயது 70). ஓய்வு பெற்ற நர்ஸ்.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் வசித்து வருகிறார்கள்.

    விஜய்ஆனந்தன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேரி ஏஞ்சலின் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக அருகிலேயே மேலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர். கடந்த 17-ந்தேதி கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மேரி ஏஞ்சலனிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டு விசாரித்துள்ளனர்.

    பின்னர் 18-ந்தேதி இரவு 9.30 மணிக்கு அந்த பெண்ணும், வாலிபரும் மீண்டும் வீட்டுக்கு வந்து மேரி ஏஞ்சலினிடம் வீட்டை பார்க்கவேண்டும் என கேட்டனர். உடனே மேரி ஏஞ்சலின் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை காட்டுவதற்கு சென்றார்.

    வெகுநேரமாகியும் மேரி ஏஞ்சலின் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விஜய் ஆனந்தன் அவரை தேடிச் சென்றார். அப்போது வீட்டுக்குள் மேரிஏஞ்சலின் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 1 பவுன் கம்மல் என 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனையும் காணவில்லை. கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு வீட்டில் சி.சி.டி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    போலீசார் அந்த கேமிராவை ஆய்வு செய்தபோது கொலை நடந்த அன்று இரவு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மொபட்டில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீடியோவை போட்டோவாக பிரிண்ட் எடுத்து அந்த பகுதியில் உள்ள வீடு புரோக்கர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் காட்டி விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் இந்த கொலை- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சூலூர் பாரதி நகரை சேர்ந்த ரமேஷ்(39), அவரது மனைவி காஞ்சனாதேவி(35) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை தேடி சென்றனர். ஆனால் அவர்கள் கர்நாடகாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். அவர்களை தொடர்ந்து தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் அவர்கள் இன்று சூலூர் வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேஷ், அவரது மனைவி காஞ்சனாதேவி ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த கொலை குறித்து ரமேஷ் கூறியதாவது,

    காஞ்சனாதேவி எனக்கு 2-வது மனைவி ஆவார். நாங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நர்ஸ் மேரி ஏஞ்சலின் வீட்டு அருகே வாடகைக்கு குடியிருந்தோம். அப்போது அவரது கணவர் விஜய் ஆனந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியும். இந்த நிலையில் நாங்கள் அங்கிருந்து சூலூருக்கே வந்து விட்டோம். எங்களுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் நர்ஸ் மேரி ஏஞ்சலின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க திட்டமிட்டோம். அதன்படி நாங்கள் வீடு பார்ப்பது போல் சென்றோம். மேரி ஏஞ்சலின் மட்டும் வீட்டை காண்பிக்க எங்களுடன் வந்தார். அந்த நேரத்தில் நான் அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்து கொண்டு கீழே தள்ளிவிட்டேன். அப்போது மேரி ஏஞ்சலின் சத்தம் போட்டார்.

    எனவே நாங்கள் மாட்டி கொள்வோம் என்பதால் கழுத்தை அறுத்து மேரி ஏஞ்சலினை கொன்றேன். பின்னர் நாங்கள் மொபட்டில் சென்று விட்டோம். போலீசார் எங்களை தேடுவதை அறிந்து கர்நாடகாவுக்கு தப்பினோம். தற்போது போலீசார் பிடி விலகியதாக கருதி சூலூர் வந்தபோது சிக்கிக் கொண்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். மேரி ஏஞ்சலினை கொன்று கொள்ளையடித்த நகைகளை சூலூரில் ஒருவரிடம் அடமானம் வைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டனர். அவர்களது மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில் போலீசார் சாதுரியமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்துள்ளனர். #tamilnews
    கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து நர்சை படுகொலை செய்து 6 பவுன் நகையுடன் தப்பிய தம்பதியினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன். இவரது மனைவி மேரி ஏஞ்சலின் (வயது 70).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் வசித்து வருகிறார்கள்.

    விஜய்ஆனந்தன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேரி ஏஞ்சலின் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக அருகிலேயே மேலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மேரி ஏஞ்சலனிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டு விசாரித்துள்ளனர்.

    பின்னர் நேற்று இரவு 9.30 மணிக்கு அந்த பெண்ணும், வாலிபரும் மீண்டும் வீட்டுக்கு வந்து மேரி ஏஞ்சலினிடம் வீட்டை பார்க்கவேண்டும் என கேட்டனர். உடனே மேரி ஏஞ்சலின் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை காட்டுவதற்கு சென்றார்.

    வெகுநேரமாகியும் மேரி ஏஞ்சலின் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விஜய் ஆனந்தன் அவரை தேடிச் சென்றார். அப்போது வீட்டுக்குள் மேரிஏஞ்சலின் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 1 பவுன் கம்மல் என 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனையும் காணவில்லை.

    இதுகுறித்து தகவலறிந்ததும் குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாள், உதவி கமி‌ஷனர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சம்பவஇடத்தின் அருகே சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டிருந்தது. இதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    விஜய் ஆனந்தன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரால் சரியாக பேச முடியவில்லை. வீடு வாடகைக்கு வந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கு தெரியவில்லை.

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூரில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது,

    இந்நிலையில் பீளமேட்டில் பெண்ணை கொன்று நகை கள் கொள்ளையடிக்கப்பட் டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    குழித்துறை ஆற்றில் தள்ளி நர்சு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான வேன் டிரைவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    நாகர்கோவில்:

    குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23).

    ஸ்ரீஜா, தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 21- ந் தேதி இவர் குழித்துறை ஆற்றில் பிணமாக மிதந்தார்.

    களியக்காவிளை போலீசார் ஸ்ரீஜாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஸ்ரீஜா, 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    ஸ்ரீஜாவின் கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் களியக்காவிளை போலீசார் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீஜாவுக்கும் எஸ்.டி.மங்காட்டை சேர்ந்த விபின் (26) என்பவருக்கும் காதல் இருந்ததும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த தகவலும் தெரியவந்தது.போலீசார் விபினை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் ஸ்ரீஜாவை குழித்துறை ஆற்றில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கு சொந்தமாக வேன் உள்ளது. அதனை நானே ஓட்டி வந்தேன். எனது வேனில் அடிக்கடி ஸ்ரீஜா பயணம் செய்வார். அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது.

    பகல் நேரத்தில் என் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே நான் ஸ்ரீஜாவை வீட்டிற்கு அழைத்து செல்வேன். அங்கு அவருடன் உல்லாசமாக இருக்க விரும்பினேன். அதற்கு ஸ்ரீஜா மறுத்து விட்டார்.

    எனவே நான் ஸ்ரீஜாவுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அவர் மயங்கியதும், ஸ்ரீஜாவை பாலியல் பலாத்காரம் செய்தேன். அதன்பின்பு இந்த சம்பவத்தை கூறியே அவருடன் நான் உல்லாசமாக இருந்தேன். இதில் ஸ்ரீஜா கர்ப்பமானார்.

    கர்ப்பம் ஆனதும் உடனே திருமணம் செய்யும்படி ஸ்ரீஜா, என்னை வற்புறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த நான், சம்பவத்தன்று அவரை தாலி வாங்க வரும்படி குழித்துறைக்கு அழைத்து சென்றேன். அங்கு பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஸ்ரீஜாவை ஆற்றில் தள்ளி விட்டேன்.

    இதில் ஸ்ரீஜா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    இதையடுத்து போலீசார் விபினை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு, கைதான விபின் பற்றி சில ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதில் விபினுக்கு நெருங்கிய நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களிடம் ஸ்ரீஜா கொலை தொடர்பான பல ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், விபினின் நண்பர்களை தேடினர். இத்தகவல் வெளியானதும் நேற்று தையாலுமூடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரை சந்தித்து ஒரு செல்போனை கொடுத்தனர்.

    அந்த செல்போன், ஸ்ரீஜாவுக்கு சொந்தமானது என்றும், அதனை ஸ்ரீஜாவுக்கு வாங்கி கொடுத்தது விபின் என்றும் தெரியவந்தது. அந்த செல்போனில் விபின் மட்டுமே ஸ்ரீஜாவுடன் பேசுவார். அந்த செல்போனை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்று விபின் கூறியதால், ஸ்ரீஜா அந்த செல்போனில் வேறு யாருடனும் பேசவில்லை. அந்த செல்போனை கிடைத்தால் அதனை போலீசார் அதனை ஆய்வு செய்தனர். அதில் விபின், ஸ்ரீஜாவுடன் மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரியவந்தது. இது வழக்கின் முக்கிய ஆதாரம் என்பதால் போலீசார் அந்த செல்போனை உடனே கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே கைதான விபினுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. விபின், வேனில் அழைத்து செல்லும் பெண்களிடம் சிரித்து, சிரித்து பேசுவார் என்றும், அவருடன் பல பெண்கள் தொடர்பில் இருந்து வந்த தாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்களை விபின் பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ரகசிய விசாரணையும் தொடங்கி உள்ளது. #tamilnews
    ×