search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nurse Dead"

    • தண்டவாள பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து வந்ததால் கொச்சுவேலி பயணிகள் ரெயில் வந்ததை ஐஸ்வர்யா கவனிக்கவில்லை.
    • சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    இரணியல்-பள்ளியாடிக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையிலான ரெயில்வே போலீசார் விரைந்து சென்று ரெயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேக்கோடு பழவந்தான் கோணம் அய்யாதுரை மகள் ஐஸ்வர்யா (வயது 19) என்பது தெரியவந்தது.

    இவர் நேற்று மாலை தண்டவாள பகுதியில் நடந்து வரும்போது செல்போனில் பேசி கொண்டு வந்ததாகவும், இதனால் அவர் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்த கொச்சுவேலி பயணிகள் ரெயில் வந்ததை கவனிக்கவில்லை. இதனால் அந்த ரெயிலில் எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

    பலியான ஐஸ்வர்யா சுங்கான்கடை அருகே களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஐஸ்வர்யா உடலை மீட்டு ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×