என் மலர்
நீங்கள் தேடியது "chennai girl"
- பாலியல் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சென்னை வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
- பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது.
சென்னை:
சென்னையில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் கடந்த 2015-ம் ஆண்டு 12 வயது சிறுமியும், அவரது பெற்றோரும் வாடகைக்கு வசித்து வந்தனர். அப்போது வீட்டு உரிமையாளரின் மருமகன் அப்பாஸ் அலி (வயது 41) அந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி அப்பாஸ் அலி, அந்த சிறுமியை சென்னையில் இருந்து கடத்தி சென்றார். சிறுமியை திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அங்கு சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.
மேலும் பல்வேறு இடங்களுக்கும் சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அப்பாஸ் அலி மட்டும் சென்னை திரும்பினார்.
இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று எம்.கே.பி. நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை தேடினார்கள். 2 நாட்களுக்கு பிறகு போலீசார் சிறுமியை கண்டுபிடித்தனர். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அப்பாஸ் அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அப்பாஸ் அலி, அந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதனால் சிறுமியும், அவரது பெற்றோரும் அங்கிருந்து தலைமறைவானார்கள். அவர்கள் தென் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.
அதன்பிறகும் அப்பாஸ் அலி, சிறுமி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து அங்கு சென்று சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் தன் மீதான பாலியல் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சென்னை வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இதையடுத்து தாயும், மகளும் அங்கிருந்து வேறொரு கிராமத்துக்கு சென்றனர். பாதுகாப்பு கருதி அங்கு தங்களின் பெயர், விவரங்களை மாற்றி வாழத் தொடங்கினார்கள். பின்னர் ஒவ்வொரு ஊராக குடிபெயந்தனர்.
அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு உதவி செய்யவும், ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லை. மேலும் அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கும் செல்லவில்லை. தாயும், மகளும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். சுமார் 10 ஆண்டும் காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.
இது ஒருபுறம் இருக்க எம்.கே.பி. நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் போலீசார், தாயையும், மகளையும் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. 10 ஆண்டுகளாக அவர்களை தேடிய நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாயும், சிறுமியும் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் போலீசார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது. வழக்கு விசாரணையின் போது அவர், நீதிபதியிடம் தனக்கு நடந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்தார். அப்பாஸ் அலி செய்த கொடுமையால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். என்னுடைய கல்வியும் பறிபோனது, என் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக அப்பாஸ் அலி சீரழித்து விட்டார் என்று கூறி அந்த பெண் கதறி அழுதார்.
அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மாதம் முதல் வாரத்தில் அப்பாஸ் அலிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். அப்பாஸ் அலிக்கு தற்போது 51 வயது ஆகிறது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- படத்தை விலைக்கு வாங்கி பார்த்த, மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
- வழக்கு தொடர்பான விவரங்களை, போலீசார் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர்.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கடந்த வாரம் அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்று வந்தது. புகார் கொடுத்தவர், 2 செல்போன்களை போலீசாரிடம் கொடுத்து, அந்த செல்போனில் 'வாட்ஸ் அப்' மூலம் குறிப்பிட்ட ஒரு சிறுமியின் ஆபாச புகைப்படங்கள், ஏராளமாக இருப்பதாகவும், அந்த ஆபாச புகைப்படங்கள் ஏராளமானோருக்கு 'வாட்ஸ் அப்' மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
செல்போன் படங்களை ஆய்வு செய்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பிட்ட சிறுமி ஒருவரை, உல்லாசத்தில் ஈடுபடுத்தும் காட்சிகள், அதில் இடம் பெற்றிருந்தது. சிறுமியிடம் உல்லாசத்தில் ஈடுபடும் 2 பேரை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார், தீவிர விசாரணைக்குபின் அடையாளம் கண்டனர்.
சிறுமியிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட 2 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர். இன்னொருவர், தாம்பரத்தில் வசித்து வந்தார். அவர்கள் இருவர் மீதும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். சிறுமியை உல்லாசத்தில் ஈடுபடுத்தியதற்கு, அவரின் பெற்றோர்களே உடந்தையாக இருந்துள்ளனர்.
கைதான இருவரும், இந்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர். போக்சோ சட்டத்தில் சிறுமியின் தாய், தந்தையும் கைதானார்கள். மேலும், சிறுமியின் ஆபாச புகைப்படங்கள் 'வாட்ஸ் அப்' மூலம் விலைக்கு விற்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. பெற்றோர் சம்மதத்துடன் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த பாலியல் பட வியாபாரம், சென்னை போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை விலைக்கு வாங்கி பார்த்த, மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆஸ்பத்திரியில் ரகசியமாக சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. போலீசாரின் பாதுகாப்பில் அவர் பத்திரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள சட்டத்தின் மூலம் இந்த வழக்கில் கைதாகி உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான விவரங்களை, போலீசார் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மனைவியுடன் கைதானவர் தனது மகளின் தோழிகளை மிரட்டியே ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
- கைதான சிறுமியின் பெற்றோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை:
சென்னையில் பண ஆசையில் பெற்ற மகளையே பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோ எடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஒரு புகாரில் சிறுமிகளை ஆபாச வீடியோக்கள் எடுத்து ஒரு கும்பல் பணத்துக்காக சமூக வலைதளங்களில் விற்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.
சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது தன்னுடைய மனைவி மூலம் மகளையே பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதோடு அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்த திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த சிறுமியின் பெற்றோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
சிறுமியின் தந்தை செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது அந்த சிறுமி மட்டுமல்லாது அவரது பள்ளி தோழிகள் 6 பேரையும் உல்லாசத்துக்கு தள்ளியது தெரியவந்தது. சிறுமிகளை மிரட்டி உல்லாசமாக இருந்ததாக வீடியோவில் இடம்பெற்று இருந்த பட்டினப்பாக்கம் மற்றும் தாம்பரத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் விற்றதை தெரிவித்தனர். இவர்கள் 6 மாணவிகளை தவிர மற்ற சிறுமிகளிடமும் இதே போன்ற செயலில் ஈடுபட்டார்களா? என்பது தொடர்பாகவும் விசார ணை நடந்து வருகிறது.
போலீசார் சீரழிக்கப்பட்ட 6 மாணவிகளின் வீடியோக்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த மாணவிகளை வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்ட போலீசார் அவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். அவர்கள் தாங்கள் மிரட்டப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். அந்த மாணவிகள் இன்னும் அதிர்ச்சியின் பிடியில் இருந்து மீளாமல் இருந்து வருகின்றனர்.
இதை உணர்ந்த போலீசார் அந்த மாணவிகளுக்கு மனரீதியாக தைரியம் கொடுக்கும் வகையில் கவுன்சிலிங் கொடுத்தனர். இதன் மூலம் அந்த மாணவிகளுக்கு கொஞ்சம் அச்ச உணர்வு மீண்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மனைவியுடன் கைதானவர் தனது மகளின் தோழிகளை மிரட்டியே ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதே போல பலரையும் அவர் ஆபாச வீடியோ எடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. இதற்காக வேறு ஒரு செல்போன் எதையும் அவர் பயன்படுத்தினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சிறுமியின் பெற்றோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். தற்போது பொங்கல் தொடர் விடுமுறை என்பதால் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த பாலியல் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த பாலியல் வழக்கை நாங்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வழக்கு போலத்தான் பார்க்கிறோம். அதனால் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம். சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 80 சதவீத வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
- பெற்றோருக்கு தெரியாமல் தனியாக வரக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
- பஸ் நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் கடந்த 17-ந் தேதி அதிகாலை நேரத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், சமூக வலைதளம் மூலம் பழகிய ஒரு வாலிபரை பார்ப்பதற்காக தனியாக மதுரை வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது, கடந்த ஒரு வருடமாக அந்த வாலிபரிடம் ஷேர்சாட் மூலம் பழகி வந்ததாகவும், அவரை பார்க்க பெற்றோருக்கு தெரியாமல் வந்ததாகவும் தெரிவித்தார்.
சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் மாயமானது குறித்து அவரது பெற்றோர் சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை போலீசார் உதவியுடன் சிறுமியின் பெற்றோர் மதுரைக்கு வந்தனர். பின்பு பெற்றோருக்கு தெரியாமல் இப்படியெல்லாம் தனியாக வரக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
பஸ் நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-
தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக செல்போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களால் அனைவரும் அனைத்தும் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த சாதனங்கள் மூலம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் முகம் தெரியாத நபர் மூலம் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கைப்பேசி மற்றும் கணினி ஆகியவற்றை பயன்படுத்த கொடுக்கும்போது அவ்வப்போது அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் தேவையில்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வது தெரியவந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்துக்கூற வேண்டும்.
மேலும் அவர்கள் பயன்படுத்தும் செயலிகள் மூலம் யாரேனும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்கிறார்களா? என்பதையும் விசாரிக்க வேண்டும். அந்த செயலிகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது தெரியவந்தால் உடனே போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்.
இது தவிர போலீஸ் செயலியான எஸ்.ஓ.எஸ்., சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண் 1098, 1091, 181 மற்றும் மதுரை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0452-2530070, 2530100, வாட்ஸ்அப் எண் 83000 21100 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சன்னிதானத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சுவாமி அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதாலும், 41 நாட்கள் கடும் விரதம் இருந்து காட்டுப்பாதை வழியாக மலையேறிச் சென்றே சுவாமி அய்யப்பனை தரிக்கமுடியும் என்பதாலும் காலம், காலமாக இந்த ஐதீகம் நடை முறையில் உள்ளது.
தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங் கள் நடந்து வருகிறது.
சபரிமலைக்கு செல்லும் இளம்பெண்களும் தடுத்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால் சபரிமலையில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
அதேசமயம் பெற்றோருடன் 10 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளும் அதிகளவு சபரி மலைக்கு தற்போது வந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் சிலர் தங்கள் கைகளில் சபரிமலைக்கு எந்த வயது பெண்கள் செல்ல வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளையும் கைகளில் ஏந்திய வண்ணம் செல்கிறார்கள்.
சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற ஐ.டி. கம்பெனி ஊழியர் தனது 9 வயது மகள் பத்மபூரணியுடன் இன்று சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சாமி தரிசனத்திற்கு சென்றார். பத்மபூரணி தனது கைகளில் விழிப்புணர்வு பதாகை ஏந்திச் சென்றார். அதில் எனக்கு 9 வயது ஆகிறது. சபரிமலைக்கு 3-வது முறையாக வந்துள்ளேன். இனி 41 வருடங்கள் கழித்து எனது 50-வது வயதில்தான் சபரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நான் 20-க்கும் மேற்பட்ட முறை சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். எனது மகள் பத்மபூரணியுடன் 3-வது முறையாக இன்று சபரிமலைக்கு வந்துள்ளேன். சபரிமலையில் காலம், காலமாக உள்ள ஐதீகத்தில் கோர்ட்டு தலையிடக்கூடாது. 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வரக் கூடாது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே எனது மகள் பதாகையுடன் இங்கு வந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #Sabarimalatemple






