search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai girl"

    • பெற்றோருக்கு தெரியாமல் தனியாக வரக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • பஸ் நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் கடந்த 17-ந் தேதி அதிகாலை நேரத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், சமூக வலைதளம் மூலம் பழகிய ஒரு வாலிபரை பார்ப்பதற்காக தனியாக மதுரை வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது, கடந்த ஒரு வருடமாக அந்த வாலிபரிடம் ஷேர்சாட் மூலம் பழகி வந்ததாகவும், அவரை பார்க்க பெற்றோருக்கு தெரியாமல் வந்ததாகவும் தெரிவித்தார்.

    சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் மாயமானது குறித்து அவரது பெற்றோர் சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சென்னை போலீசார் உதவியுடன் சிறுமியின் பெற்றோர் மதுரைக்கு வந்தனர். பின்பு பெற்றோருக்கு தெரியாமல் இப்படியெல்லாம் தனியாக வரக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பஸ் நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-

    தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக செல்போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களால் அனைவரும் அனைத்தும் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த சாதனங்கள் மூலம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் முகம் தெரியாத நபர் மூலம் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கைப்பேசி மற்றும் கணினி ஆகியவற்றை பயன்படுத்த கொடுக்கும்போது அவ்வப்போது அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் தேவையில்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வது தெரியவந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்துக்கூற வேண்டும்.

    மேலும் அவர்கள் பயன்படுத்தும் செயலிகள் மூலம் யாரேனும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்கிறார்களா? என்பதையும் விசாரிக்க வேண்டும். அந்த செயலிகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது தெரியவந்தால் உடனே போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்.

    இது தவிர போலீஸ் செயலியான எஸ்.ஓ.எஸ்., சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண் 1098, 1091, 181 மற்றும் மதுரை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0452-2530070, 2530100, வாட்ஸ்அப் எண் 83000 21100 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சபரிமலை கோவிலுக்கு இன்று விழிப்புணர்வு பதாகையுடன் சென்ற சென்னை சிறுமி, இனி 50 வயதில்தான் வருவேன் என உறுதி அளித்துள்ளார். #Sabarimala #Sabarimalatemple

    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சன்னிதானத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சுவாமி அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதாலும், 41 நாட்கள் கடும் விரதம் இருந்து காட்டுப்பாதை வழியாக மலையேறிச் சென்றே சுவாமி அய்யப்பனை தரிக்கமுடியும் என்பதாலும் காலம், காலமாக இந்த ஐதீகம் நடை முறையில் உள்ளது.

    தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங் கள் நடந்து வருகிறது.

    சபரிமலைக்கு செல்லும் இளம்பெண்களும் தடுத்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால் சபரிமலையில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    அதேசமயம் பெற்றோருடன் 10 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளும் அதிகளவு சபரி மலைக்கு தற்போது வந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் சிலர் தங்கள் கைகளில் சபரிமலைக்கு எந்த வயது பெண்கள் செல்ல வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளையும் கைகளில் ஏந்திய வண்ணம் செல்கிறார்கள்.

    சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற ஐ.டி. கம்பெனி ஊழியர் தனது 9 வயது மகள் பத்மபூரணியுடன் இன்று சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சாமி தரிசனத்திற்கு சென்றார். பத்மபூரணி தனது கைகளில் விழிப்புணர்வு பதாகை ஏந்திச் சென்றார். அதில் எனக்கு 9 வயது ஆகிறது. சபரிமலைக்கு 3-வது முறையாக வந்துள்ளேன். இனி 41 வருடங்கள் கழித்து எனது 50-வது வயதில்தான் சபரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    நான் 20-க்கும் மேற்பட்ட முறை சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். எனது மகள் பத்மபூரணியுடன் 3-வது முறையாக இன்று சபரிமலைக்கு வந்துள்ளேன். சபரிமலையில் காலம், காலமாக உள்ள ஐதீகத்தில் கோர்ட்டு தலையிடக்கூடாது. 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வரக் கூடாது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே எனது மகள் பதாகையுடன் இங்கு வந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #Sabarimalatemple

    ×