search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "awareness banner"

    • சந்தேகப்படும்படியான நபர்களை செல்போனில் படம்பிடிக்க போலீசார் அறிவுறுத்தல்
    • சீனியர் போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் நிலையம் வெளியே வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பேனரை பார்வையிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த திருக்கனூர் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளான செட்டிப் பட்டை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சண்முகம் வீடு உள்ளிட்ட ஆண்டியார் பாளையம், வாதானூர், மண்ணாடிப் பட்டு, சந்தை புதுகுப்பம் கிராமங்களில் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

     தொடர் கொள்ளை சம்பவங்கள் அந்தபகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தியும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசாருக்கு இதுவரையில் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    போலீசார் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போலீஸ் நிலையம் முன்பு விழிப்புண்வு அறிவிப்பு பேனர் வைக்கப் பட்டுள்ளது. சீனியர் ேபாலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, தொடர் திருட்டு சம்பவங்களுகான காரணங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜா ஆகியோரிடம் கேட்டறிந்தார். பின்னர், போலீஸ் நிலையத்தில் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் நிலையம் வெளியே வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பேனரை பார்வையிட்டார்.

    மேலும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு டைய மர்ம நபர்களை விரைந்து பிடிப்பதற்கான நட வடிக்கையை தீவி ரப்படுத்த உத்தரவிட்டார்.

    சபரிமலை கோவிலுக்கு இன்று விழிப்புணர்வு பதாகையுடன் சென்ற சென்னை சிறுமி, இனி 50 வயதில்தான் வருவேன் என உறுதி அளித்துள்ளார். #Sabarimala #Sabarimalatemple

    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சன்னிதானத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சுவாமி அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதாலும், 41 நாட்கள் கடும் விரதம் இருந்து காட்டுப்பாதை வழியாக மலையேறிச் சென்றே சுவாமி அய்யப்பனை தரிக்கமுடியும் என்பதாலும் காலம், காலமாக இந்த ஐதீகம் நடை முறையில் உள்ளது.

    தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங் கள் நடந்து வருகிறது.

    சபரிமலைக்கு செல்லும் இளம்பெண்களும் தடுத்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால் சபரிமலையில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    அதேசமயம் பெற்றோருடன் 10 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளும் அதிகளவு சபரி மலைக்கு தற்போது வந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் சிலர் தங்கள் கைகளில் சபரிமலைக்கு எந்த வயது பெண்கள் செல்ல வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளையும் கைகளில் ஏந்திய வண்ணம் செல்கிறார்கள்.

    சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற ஐ.டி. கம்பெனி ஊழியர் தனது 9 வயது மகள் பத்மபூரணியுடன் இன்று சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சாமி தரிசனத்திற்கு சென்றார். பத்மபூரணி தனது கைகளில் விழிப்புணர்வு பதாகை ஏந்திச் சென்றார். அதில் எனக்கு 9 வயது ஆகிறது. சபரிமலைக்கு 3-வது முறையாக வந்துள்ளேன். இனி 41 வருடங்கள் கழித்து எனது 50-வது வயதில்தான் சபரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    நான் 20-க்கும் மேற்பட்ட முறை சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். எனது மகள் பத்மபூரணியுடன் 3-வது முறையாக இன்று சபரிமலைக்கு வந்துள்ளேன். சபரிமலையில் காலம், காலமாக உள்ள ஐதீகத்தில் கோர்ட்டு தலையிடக்கூடாது. 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வரக் கூடாது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே எனது மகள் பதாகையுடன் இங்கு வந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #Sabarimalatemple

    ×