என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரோலில் வந்த கைதி தலைமறைவு
- மோகன் (வயது 54). இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர்.
- இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.
சேலம்:
சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் சித்தாகவுண்டனூர் தெரு, டி.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 54).
இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு கோவை சிங்காநல்லூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.
இதையடுத்து சிங்காநல்லூர் ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா, நேற்று இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து, மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






