search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திங்கள்நகர்"

    • வியாபாரிகள் வாக்குவாதம் - போலீஸ் குவிப்பு
    • இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வியா பாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க பட்டதாகவும், வியாபாரிகள் யாரும் ஆக்கிரமிப்பு களை அகற்ற முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப் பட்டது. நேற்று மதியம் பேரூராட்சி செயல் அலுவ லர் அம்புஜம் தலைமையில் இளநிலை பொறியாளர் லிங்கேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றினர்.

    இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட வில்லை என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கபட்டது.

    இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி (பொறுப்பு) சப் இன்ஸ்பெக் டர் முத்துகிருஷ்ணன், ஏட்டு ஸ்டாலின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்ட னர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனால் இப்பகுதி யின் பரபரப்பு ஏற்பட்டது. அப்புறப்படுத்த பட்ட பொருட்கள் பேரூராட்சி அலுவலகம் கொண்டு செல்லபட்டது.

    • இளைஞர் காங்கிரசை கண்டித்து போராட்டம் நடந்தது
    • சோனியா, ராகுல் காந்தி உருவ படம் எரிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி ராணி உருவ பொம்மையை திங்கள் நகரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் எரித்ததை கண்டித்து திங்கள் நகர் பஸ் நிலையம் முன்பு குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சி.பி.ராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் மனோர குமார், கோபுஜி, செந்தில், கவுன்சிலர்கள் ஜெய சேகரன், முத்துக்குமார், கவுதமி, சுஜாதா உட்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் சிவகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள் ஸ்ரீகலா முருகன், விஜயலட்சுமி பாலசுப்ர மணியன், குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் அனுஷா தேவி, மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தின மணி, மற்றும் மாவட்ட, ஒன்றிய பஞ்சாயத்து பாரதிய ஜனதா பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது சோனியா, ராகுல் காந்தி உருவ படம் எரிக்க பட்டது. இதுகுறித்து இரணியல் போலீசார் ஒன்றிய தலைவர் சி.பி.ராஜ் மற்றும் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திங்கள் நகர் தினசரி காய்கறிகள் வியாபாரிகள் கோரிக்கை
    • திங்கட் கிழமை மாலை 5 மணி வரை காய்கறி, பழங்கள் வியாபாரம் முடித்து வாரச்சந்தை வாசல் இரண்டும் பூட்டு போட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் தினசரி காய்கறிகள் வியாபாரிகள், திங்கள்நகர் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் தலைவர் சுமன் ஆகியோரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப் பட்டுள்ளதாவது:-

    திங்கள் சந்தை வாரச்சந்தை யில் விவசாயி கள் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு வாழைக்குலைகள் கொண்டு வருவார்கள். அதனை மறுநாள் காலை 6.30 மணி அளவில் விற்பனை செய்வார்கள். விற்பனை முடிந்த உடன் 10 மணி அளவில் மார்க்கெட் வாசலை மூடி விடுவார்கள். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் காய்கறி வியாபாரிகள் திங்கட் கிழமை வியாபாரம் செய்ய காய்கறிகள் கொண்டு வரு வார்கள்.

    திங்கட்கிழமை காலை 4 மணி முதல் 7 மணி வரை ஆடு, மாடு, கோழி வியாபாரம் நடக்கும் காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி பழங்கள் வியாபாரம் நடக்கும். அதன் பிறகு பேரூராட்சி காவலாளி 2 வாசல்களையும் பூட்டி விடுவது நடைமுறையாக இருந்தது.

    கொேரானா பாதிப்பு ஏற்பட்ட பிறகு இப்போது இரண்டு வாசல்கள் பூட்டப்படாமல் உள்ளது. இதனால் பேரூராட்சியில் வரிகட்டி செயல்படும் தினசரி சந்தை வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் மிகுந்த கடன் தொல்லையில் அவதிப்படுகிறோம்.

    ஆகையால் தினசரி வியாபாரிகள் நலன் கருதி திங்கட் கிழமை மாலை 5 மணி வரை காய்கறி, பழங்கள் வியாபாரம் முடித்து வாரச்சந்தை வாசல் இரண்டும் பூட்டு போட்டு இதற்கு முன்னர் இருந்த நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திங்கள்நகர் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் அறிவிக்கப் பட்டது.ஒரே நாளில் 2 போராட்டங்களும் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தலைமையில் இரு தரப்பினரிடமும் தனித்தனி யாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை பா.ஜ.க. பிரமுகர் ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று திங்கள் நகரில் இன்று காலை முதல் மாலை வரை உண்ணா விரத போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க. அறிவித்தது.

    இது போன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் அறிவிக்கப் பட்டது.ஒரே நாளில் 2 போராட்டங்களும் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தலைமையில் இரு தரப்பினரிடமும் தனித்தனி யாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அதன்பிறகு இருதரப்பு போராட்டங்களும் கைவி டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருந்த போதும் திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    ×