search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லடம்"

    • வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பொது மக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும்.

    பல்லடம் :

    பல்லடம்,கொசு உற்பத்தியை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார ஆய்வாளர் விளக்கம் அளித்தார். இதுகுறித்து பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர் கூறியதாவது:-

    பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனினும் பொது மக்களது ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்தப் பணியை முழுமையாக செயல்படுத்த முடியும். வீட்டில் குப்பைகள்,பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும் பொது மக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். அந்த தண்ணீரை அப்புறப்படுத்துமாறு கூறினாலும், பொது மக்கள் கேட்பதில்லை நிறைய வீடுகளில வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் 'டயர்'களில் தண்ணீர் தேங்கி, அதில் கொசு உற்பத்தியாகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற சாக்கடைகள் உள்ளன. ஆனால், பல இடங்களில் சாக்கடையில் குப்பை போன்றவற்றை போட்டுவிடுவதால் அங்கு கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாகி விடுகிறது. இதுபோன்ற நிலையை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கம்பியால் தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
    • அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வினோபா நகரை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் பழனிசாமி (வயது 47). இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கம்பியால் தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரும்பு கம்பி அருகில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக பட்டதில் பழனிசாமி மீது மின்சாரம் பயந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி.
    • தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    பல்லடம் :

    பல்லடம், சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி. பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி .தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப் போனது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது நகரின் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை ஏற்கனவே திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ள பல்லடம் நகரின் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

    பல்லடம் :

    பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.
    • இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும் இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிபேர் இருக்கையிலும் மீதி பேர் தரையில் அமர்ந்தும் படித்து வருவதாகவும்,பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் ஒரு கட்டிடத்தின் முகப்பு இடிபாடுகளுடன் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்வதாகவும் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லை என்றும், எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை பராமரித்தும்,சத்துணவு திட்டத்திற்கு தரமான அரிசி வழங்கவேண்டும். இவ்வாறு கரைப்புதூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தி யுள்ளனர்.
    • பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதனை சம்பவத்தன்று சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தி யுள்ளனர்.

    இதையடுத்து கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.இதேபோல பா.ஜ.க. சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதேபோல பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன் சார்பில் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்ட சப் - கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
    • முகாமில் 41 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு நாள் முகாம் திருப்பூர் மாவட்ட சப் - கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    பல்லடம் தாசில்தார் நந்தகோபால், வடுகபாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 41 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 24 மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.17 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வில்சன்,அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்டாக்டர் ராமசாமி, மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாதுவங்கியது.
    • முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    பல்லடம் :

    பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாதுவங்கியது.பல்லடத்தில் உள்ள தண்டாயுத பாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.வருடம்தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்கள். 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரவிழா நடைபெறும். நேற்று சஷ்டி விரதம் ஆரம்பநாள்.

    இதன்படி பல்லடத்தில் உள்ள தண்டாயுத பாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சுவாமிக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர், மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாராதனை நடைபெற்றது இதன் பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டனர்.

    • பல்லடம் நகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் நகராட்சி பணியாளர்கள் 350 பேருக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபாவளி பரிசை நகராட்சி தலைவர் கவிதா மணி ராஜேந்திரகுமார் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், நகராட்சி பொறியாளர் ஜான் பிரபு,வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார், மதிமுக. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் அருள்புரத்தில் உள்ள தி.மு.க. கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில். ஒன்றிய திமுக. செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் 126 கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு உள்ளிட்ட தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணைத் தலைவர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாணவரணி சேகர்,திமுக. நிர்வாகிகள் மேனகா துரைசாமி, ஸ்ரீ சிவா, கந்தசாமி, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி ஊராட்சியை சேர்ந்த கரடிவாவிபுதூர் ஏ.டி. காலனி, இந்திரா நகர், கிருஷ்ணாநகர் உள்ளிட் பகுதியில் வசிக்கும் 500 குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து60 ஆயிரம் மதிப்பில் வேட்டி,சட்டை, சேலை, இனிப்பு, காரம் அடங்கிய தீபாவளி பரிசு தொகுப்பை கரடிவாவி ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன் தனது சொந்த செலவில் வழங்கினார்.

    • 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • 320 மாணவன் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அவினாசிபாளையத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை கல்லூரி முதல்வர் ரமேஷ் குமார் வரவேற்றார். கல்லூரியின் தாளாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் துணைத் தலைவர் டி. கே. கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தார். விழாவில் கோவை அக்வா சப்என்ஜினீயரிங் நிறுவனத்தின் நரேந்திரன் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார்.

    விழாவில் 286 இளநிலை பிரிவு மாணவ- மாணவிகளுக்கும், 34 முதுநிலை பிரிவு மற்றும் மேலாண்மை துறை மாணவன் மாணவிகளுக்கும் என மொத்தம் 320 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நாஸ்காம் துணைத் தலைவர் உதயசங்கர் மற்றும் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேர்வுத்துறை தலைவர் லட்சுமி பிரியா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், பிரதீப் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் கல்லூரியின் நிர்வாக அதிகாரி அன்பரசு நன்றி கூறினார்.

    • குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன.
    • 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,62,600 வசூலிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.

    இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில், பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 204 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 14 பேர், மேலும் சிக்னலை மதிக்காமல் செல்வது, நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,62,600 வசூலிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 93 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகரில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அதனை சரி செய்ய போலீசார் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளன. குறிப்பாக பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது. இதனால் குற்றசம்பவங்கள், விபத்துகளை ஏற்படுத்தி விட்டுச் செல்லும் வாகனங்களை கண்டறிய முடியாத நிலை உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், கண்காணிப்பு கேமராக்களின் உதவியால் பல்வேறு இடங்களை போலீசார் கண்காணிக்கலாம். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து பழுதாகி உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×