search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே தேங்காய் பறிக்கும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
    X

    கோப்புபடம்.

    பல்லடம் அருகே தேங்காய் பறிக்கும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

    • தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கம்பியால் தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
    • அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வினோபா நகரை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் பழனிசாமி (வயது 47). இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கம்பியால் தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரும்பு கம்பி அருகில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக பட்டதில் பழனிசாமி மீது மின்சாரம் பயந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×