search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பல்"

    • ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சேதுராமனை தாக்கினர்.
    • தாக்குதல் காட்சிகள் அனைத்தும் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவானது.

    ஈரோடு:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி, நாகப்பட்டியை சேர்ந்தவர் சேதுராமன் (27). இவர் ஈரோடு பகுதியில் தங்கியிருந்து சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள ஓட்டலில் கடந்த 2 வருடங்களாக பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஓட்டலுக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் கடையில் அமர்ந்து சாப்பிடும் நேரம் முடிந்து விட்டதால் பார்சலில் மட்டும் உணவு வழங்க முடியும் என சேதுராமன் கூறியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக சேதுராமனுக்கும், அந்த 4 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சேதுராமனை தாக்கினர். மேலும் அதில் ஒருவர் கீழே கிடந்த தேங்காயை எடுத்து சேதுராமன் மீது வீசினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த சேதுராமன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் காட்சிகள் அனைத்தும் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த கும்பல் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    • நாகரில் கைதானவர்கள் ‘திடுக்’ தகவல்
    • திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்தி கள்ள சந்தையில் விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    நாகர்கோவில்:

    திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் ஆம்பர் கிரீசில் இருந்து உயர்ரக வாசனை திரவியங்கள் வெளிநாடு களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருந்து பொரு ளாகவும், மூலப்பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. எனவே திமிங்கல உமிழ்நீர் கட்டிக்கு கள்ள சந்தையில் மதிப்பு அதிகமாகும். இதனால் திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்தி கள்ள சந்தையில் விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் அவ்வப்போது திமிங்கலம் உமிழ்நீர் கட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் போது வனத்துறையினரும், போலீசாரும் பிடித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நெல்லையிலிருந்து குமரி மாவட்டத்திற்கு திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கும், வனத்துறையின ருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து வடசேரி பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது காரில் வந்த அவர் கும்பலை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 10 கிலோ திமிங்கலம் உமிழ்நீர் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. போலீசார் அதை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் விசாரித்தபோது உமிழ்நீர் கட்டியை கடத்தி வந்தது நெல்லை மாவட்டம் மேல கருங்குளத்தை சேர்ந்த அருணாச்சலம், மேல முன்னீர் பள்ளத்தை சேர்ந்த நாராயணன், மேலப்பாளை யத்தை சேர்ந்த வேலாயுதம், நாங்குநேரியை சேர்ந்த சுந்தர் என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து காரும் பறிமுதல் செய்யப் பட்டது. பறிமுதல் செய்யப் பட்ட திமிங்கல உமிழ்நீரின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உமிழ்நீர் கட்டியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் ரூ.2 லட்சத்திற்கு வாங்கியதாகவும் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கி வைத்த தாகவும் கூறினர். தற்பொழுது அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரி வித்தனர். யாரிடம் விற்பனை செய்ய கொண்டு வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • நண்பர்களுடன் வந்த சஞ்சய், முன் விரோதத்தில் விக்னேஷ் மற்றும் மாரிச்செல்வத்தை அரிவாளால் ஓட ஓட வெட்டினார்.
    • பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (22). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர் கத்தியை மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு பொது மக்களை பயமுறுத்தும் வகையில் வீதிகளில் சென்று வந்தார். இதனை பார்த்த விக்னேஷ் நண்பர்களுடன் சேர்ந்து சஞ்சயை போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டி அனுப்பினார்.

    இதன் காரணமாக அவருக்கு விக்னேஷ் மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று விக்னேஷ் அவரது நண்பர் மாரிச்செல்வம் என்பவருடன் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு தனது நண்பர்களுடன் வந்த சஞ்சய், முன் விரோதத்தில் விக்னேஷ் மற்றும் மாரிச்செல்வத்தை அரிவாளால் ஓட ஓட வெட்டினார். இதில் நிலை குலைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஞ்சய் உள்பட அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தக்காளி, கீரை உள்ளிட்ட ரகங்களை பறித்து கொண்டு வந்து விற்பனை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது.
    • உழவர்சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் மிகவும் பிரபலமானது தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை. இங்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யும் வகையில் உழவர் சந்தை அமைக்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகிறது. இச்சந்தைக்கு பல்லடம், பொங்கலூர், கொடுவாய், கோவில்வழி, ஊத்துக்குளி, அவினாசி போன்ற ஊர்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் தக்காளி, கீரை உள்ளிட்ட ரகங்களை பறித்து கொண்டு வந்து விற்பனை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதனால் திருப்பூர் மாநகர மக்களின் அன்றாட தேவையை இந்த உழவர் சந்தை பூர்த்தி செய்து வருகிறது.

    மேலும் திருப்பூர் டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிறு மளிகை கடைக்காரர்கள் மற்றும் மொத்த காய்கறி கடைக்காரர்கள் தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் உள்ள காய்கறிகளை கொள்முதல் செய்து வருவது வழக்கம். தற்போது திருப்பூர் பழைய பஸ் நிலையம் மேம்பாலம் இறக்கத்தில் இருந்து தென்னம்பாளையம் மார்க்கெட் வரை சாலையோர கடைகள் பெருகிவிட்டது. இதனால் அவசர அவசரமாக வரும் வியாபாரிகள் சாலையோர கடைகளில் காய்கறிகள் மற்றும் தக்காளி பழங்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் பாதிப்பதாக விவசாயிகள் மனக்குமுறலை வெளிப்படுத்தி, அதற்கான நடவடிக்கையிலும் இறங்கினர். அதாவது சாலையோரம் உள்ள கடைகளை மாநகராட்சி மூலம் அகற்றினர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் சாலையோர கடைகள் புற்றீசல் போல வரும். இப்படியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் உழவர் சந்தையில் தக்காளி வாங்குவதற்காக உள்ளே செல்லும் போது மோட்டார் சைக்கிளை பாதுகாப்பாக நிறுத்த முன் பக்க நுழைவு வாயிலில் கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது. இதன்மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கு வசூல் செய்யும் கட்டண அதிகாரிகள் தான் ெபாறுப்பாகிறார்கள். அத்துடன் பார்க்கிங் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மீது ஒவ்வொரு முறையாக கொள்முதல் செய்யும் தக்காளிகளை கொண்டு வந்து வைத்து விட்டு பின்னர் திரும்ப வாங்க செல்வது வழக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தக்காளியை ஒரு பையில் வாங்கி வைத்து விட்டு செல்வார்கள்.

    இந்தநிலையில் திருடுவதற்காக ஒரு கும்பல செயல்படுகிறது. காய்கறிகளை வைத்து விட்டு செல்வதை நோட்டமிடும் கும்பல்,அவர்கள் திரும்ப வருவதற்குள் காய்கறிகளை அலேக்காக பையுடன் தூக்கி செல்கிறார்கள். அதுமட்டும் இன்றி சாக்கு மூட்டையில் காய்கறி வாங்கி வைத்திருந்தாலும் அதற்கும் உத்தரவாதம் கிடையாது. இது அருகில் வண்டியை நிறுத்துபவர்களுக்கும் தெரிவது இல்லை. இதனால் திருடர்களுக்கு தக்காளி திருடுவது கைவந்த கலையாக அமைந்து விடுகிறது. மேலும் நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் செய்பவர்களுக்கும் இதுபற்றி தெரிவது இல்லை. கண்காணிப்பு கேமராவும் இல்லை. பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் இந்த உழவர் சந்தையில் பொருட்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் உழவர் சந்தைக்கு வெளியிலும் இதே சூழ்நிலை தான். கடந்த சில நாட்களுக்கு முன் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிள் அதிகாலை 2.30 மணி அளவில் திருட்டு போனது. பின்னர் போலீசாரால் அது மடக்கி பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. ஆகவே உழவர்சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போலீசார் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.மேலும் மாநகராட்சி அதிகாரிகள் உழவர் சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு பொருட்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த கும்பல், குடும்பத்தினரை கட்டிப் போட்டது
    • பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்து சென்றது

    அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக்கூடிய கூர்மையான பெருட்கள் ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

    வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் பெண்களை தவிர்த்து மற்ற குடும்ப உறுப்பினர்களின் கைகளை கட்டி, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் சத்தம் போடவில்லை. பின்னர் அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்களையும், அவர்கள் கண்முன்னே கற்பழித்துள்ளனர். அதன்பின் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடியுள்ளது.

    இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து அருகில் உள்ள மற்றொரு இடத்திலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவி வசித்து வந்த வீட்டில் நுழைந்த கும்பல், கணவரை கடத்த முயன்றுள்ளது. அப்போது உடல்நலம் சரியில்லாத மனைவி, தனது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் கும்பலால் அந்த பெண் தாக்கப்பட்டுள்ளார். இதில் காயம் அடைந்த அந்த பெண் உயிரிழந்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட அவரது கணவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு சம்பவத்திலும் ஒரே கும்பல் செயல்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரண்டு சம்பவங்களும் ஒரே கிராமத்தில் நடைபெற்றுள்ள நிலையில், போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால், இச்சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    • சந்தேகத்திற்கிடமாக சென்றுகொண்டிருந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • கும்பலை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் வனப்பாதுகாப்பு படைக்குழு உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசனுக்கு கொடைக்கானல் மலை கிராமங்களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ரேஞ்சர் கிருஷ்ணகுமார், வனவர் ராஜேஷ்கண்ணன், வன காப்பாளர்கள் சரவணன், மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழுவினர் தாண்டிக்குடி-பண்ணைக்காடு ரோட்டில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்றுகொண்டிருந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தினர். ஜீப்பில் இருந்த பண்ணைக்காட்டை சேர்ந்த கருணாகரன் (வயது40) என்பவர் அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பி ஓடினார். கூடம் நகரை சேர்ந்த சந்திரன் (44), பண்ணைக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணி (43) ஆகியோர் நாட்டு துப்பாக்கியுடன் சிக்கினர். ஜீப்பில் சோதனையிட்டபோது துப்பாக்கியால் சுடப்பட்ட காட்டுச்சேவல், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள், வேட்டையாட பயன்படுத்திய கத்தி, டார்ச் லைட், சுருக்கு கம்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    அதன்பின்னர் தப்பி ஓடிய கருணாகரனையும் வனத்துறையினர் பிடித்தனர். 3 பேரும் பெரும்பள்ளம் ரேஞ்சர் குமரேசனிடம் ஒப்படைக்கப்பட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    கொடைக்கானல் வனப்பகுதியில் இதுபோல கள்ளத்துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாடும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணி நடத்தி இதுபோன்ற கும்பலை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன்.
    • மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.

    காங்கயம்,

    நண்பர்கள் போல எஸ்.எம்.எஸ்.., அனுப்பி மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்படுவதாக மோசடி செய்வது அதிகரித்துள்ளது.இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசில் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நண்பர் போல மொபைல் போனில், நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன். செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது' என்று கூறி ரூ.5ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அனுப்பி வைக்க கோரி மோசடி செய்து வருகின்றனர்.இதனை மோசடி நபர்கள் இரவு 10 மணிக்கு மேல் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் ஆக அனுப்புகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒருவரிடம் பணத்தை மோசடி செய்து உள்ளனர். அவரின் நண்பர் லண்டனில் உள்ளார்.

    அந்த வெளிநாட்டு நண்பரின் வாட்ஸ் ஆப், டி.பி., படத்தை வைத்து அவரின் செல்போன் எண்ணுக்கு ரூ.1 லட்சம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது.அவரது நண்பர் ஏற்கனவே அவரிடம் தனக்கு உடல்நலக்குறைவு என்று கூறியிருந்ததால், அதை உண்மை என்று நம்பி ரூ.1 லட்சம் அனுப்பி வைத்தார். மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.அவர் அளித்த புகாரின்படி, விசாரித்து வருகிறோம்.

    எனவே இதுபோன்று மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்பவேண்டாம்.சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு உண்மை தன்மை அறிந்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் 

    • போலீசார் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
    • போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆல்வார்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராம்புரா கிராமத்தில் 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்கள் சென்ற காரை வழிமறித்தது.

    பின்னர் அந்த கும்பல் காரில் பயணம் செய்த 3 பேரையும் உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். இருந்த போதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர்.சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் வனத்துறை அதிகாரிகளும் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    உடனே போலீசார் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

    அங்கு வாசிம் என்பவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதற்காக அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நண்பர்கள் காயம் அடைந்த கார்த்திகேயனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • விக்னேஷ் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த கும்பல் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டினர்.

    சூலூர்,

    கோவை மாவட்டம் சூலூர் அருகே வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (24).

    இவர் தென்னம்பாளையத்தில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் லோகநாதன், அருண், கார்த்திகேயன்.

    சம்பவத்தன்று நள்ளிரவு விக்னேஷ் தனது நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    விக்னேஷ், லோகநாதன் ஒரு வாகனத்திலும், அருண் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்தனர்.

    இவர்கள் தென்னம்பாளையம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஓட்டல் அருகே வந்த போது, 3 பேர் கும்பல் நின்று கொண்டிருந்தனர். திடீரென அந்த கும்பல் இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

    அப்போது, விக்னேஷ் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த கும்பல் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டினர்.

    அப்போது திடீரென அதில் இருந்த ஒருவர் கார்த்திகேயனின் (25) கையை வெட்டினார். மேலும் மற்றவர்களை அரிவாளை காட்டி மிரட்டியதுடன், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

    இதையடுத்து நண்பர்கள் காயம் அடைந்த கார்த்திகேயனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்கள் அதிர்ச்சி
    • இந்த கும்பல் மாபெரும் மோசடி கும்பல் என தெரியவந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட விவசாயி ஒருவரின் மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் மாணவிடம் இருந்த செல்போனுக்கு அவ்வப்போது குறுந்தகவல்கள் வந்து கொண்டிருந்துள்ளது. அந்த குறுந் தகவலில் நீ அழகாக இருக்கிறாய் என்றும், உன்னை நான் காதலிக்கிறேன் என்றும் தகவல்கள் வந்து கொண்டே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் மாணவியும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தனது பங்கிற்கு பதிலை அனுப்பி உள்ளார்.

    ஒரு கட்டத்தில் இருவரும் பல மணி நேரம் தங்களது தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு, காதலையும் வளர்த்து கொண்டனர். மேலும் அந்த வாலிபர் தான் சாப்ட்வேர் என்ஜினீயர் என்றும் தனது நண்பர்களிடமும் நீ நட்பாக பேசு எனவும், கூறி அவரது நம்பரை சக நண்பர்களுக்கும் போன் நம்பரை பகிர்ந்து உள்ளார். சக நண்பர்களும் இவரிடம் ஆபாசமாக பேச தொடங்கியுள்ளனர்.

    இதில் மிரண்டு போன மாணவி தனது ஆண் நண்பரிடம் தகவலை கூறியுள்ளார். இதற்கு அந்த ஆண் நண்பர் கவலைப்படாதே உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, வீட்டை விட்டு வந்து விடு என கூறியுள்ளார். மேலும் வீட்டிலிருந்து பணத்தையும் நகையையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    மாலையில் வீடு வந்து சேராத மாணவியின் தந்தை, உறவினர்கள் வீடுகள் மற்றும் தெரிந்தவர்கள் வீடு ஆகியவற்றில் தேடிப் பார்த்துள்ளார். மாணவி எங்கு சென்றார் என எந்த துப்பும் துலங்கவில்லை. அவரது போனுக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வேறு வழி இல்லாமல் மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக விரைந்து சென்று அந்த வாலிபரின் வீட்டை சோதனை செய்தபோது வாலிபர் சர்வ சாதாரணமாக தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், தான் வீட்டில் இருப்பதாகவும் கூறினர்.

    அதேபோன்று அந்த வாலிபரின் பெற்றோரும் உறுதியாக தங்களது மகன் வீட்டில் தான் இருக்கிறான் என தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசார் விசாரணையில் இறங்கியபோது தான் தெரிந்தது. அது ஒரு தனி நபர் அல்ல அது ஒரு கும்பல், அந்த கும்பல் இளம்பெண்களை மற்றும் மாணவிகளை காதலித்து ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் என தெரியவந்தது.

    இதையடுத்து அந்த கும்பலை கைது செய்ய மாணவி இருக்கும் இடமான சென்னை நோக்கி போலீஸ் படை விரைந்தது. இதை தெரிந்து கொண்ட அந்த கும்பல் மாணவியை அங்கு விட்டு விட்டு தலைமறைவானது. மாணவியை மீட்ட போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அந்த வாலிபர் நண்பர்களின் போன் நம்பர்களை கொடுத்து வாலிபர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் மாபெரும் மோசடி கும்பல் எனவும் தெரியவந்துள்ளது. மாணவியை பெற்றோருடன் அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீசார், அந்த கும்பல்களை சேர்ந்தவர்கனின் முழு விவரங்களையும் சேகரித்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண்கள் மற்றும் மாணவிகளை குறிவைத்து காதலித்து ஏமாற்றும் கும்பலால் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பக்காளியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் நியூட்ரிசன் வேலை செய்து வருகிறார். நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன், மர்ம நபர் கூறிய ராயலூர் என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர். ராஜேந்திரன் வலியால் கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ராஜேந்திரன் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பல்லடம் நகராட்சி அலுவலக சுகாதார வளாக பகுதியில் காலி மதுபான பாட்டில்கள் போடப்பட்டுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி அலுவலக சுகாதார வளாக பகுதியில் காலி மதுபான பாட்டில்கள் போடப்பட்டுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள பழைய விளம்பர பதாகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தின் மீது காலி மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது விடுமுறை நாளில் மதுபான பாட்டில்கள் போட்டது யார் என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×