search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Relation Camp"

    • திருப்பூர் மாவட்ட சப் - கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
    • முகாமில் 41 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு நாள் முகாம் திருப்பூர் மாவட்ட சப் - கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    பல்லடம் தாசில்தார் நந்தகோபால், வடுகபாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 41 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 24 மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.17 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வில்சன்,அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்டாக்டர் ராமசாமி, மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×