search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat workers"

    • தெருநாய்களை ஊராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர்.
    • இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவ தாகவும், சிலரை நாய்கள் கடித்ததாகவும் ஊராட்சி நிர்வாகித்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து வெறிநாய்களை கட்டுப்படுத்துவதற்கான மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட லெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த நிலையில் நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை நரிக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊழியர்கள் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட னர். 45-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடித்து செல்லப்பட்டதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    • பல்லடம் நகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் நகராட்சி பணியாளர்கள் 350 பேருக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபாவளி பரிசை நகராட்சி தலைவர் கவிதா மணி ராஜேந்திரகுமார் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், நகராட்சி பொறியாளர் ஜான் பிரபு,வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார், மதிமுக. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் அருள்புரத்தில் உள்ள தி.மு.க. கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில். ஒன்றிய திமுக. செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் 126 கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு உள்ளிட்ட தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணைத் தலைவர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாணவரணி சேகர்,திமுக. நிர்வாகிகள் மேனகா துரைசாமி, ஸ்ரீ சிவா, கந்தசாமி, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி ஊராட்சியை சேர்ந்த கரடிவாவிபுதூர் ஏ.டி. காலனி, இந்திரா நகர், கிருஷ்ணாநகர் உள்ளிட் பகுதியில் வசிக்கும் 500 குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து60 ஆயிரம் மதிப்பில் வேட்டி,சட்டை, சேலை, இனிப்பு, காரம் அடங்கிய தீபாவளி பரிசு தொகுப்பை கரடிவாவி ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன் தனது சொந்த செலவில் வழங்கினார்.

    ×