search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை ஆசாமி"

    • காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் 108 ஆம்புலன்சை விடாமல் வழிமறித்தார்.
    • நீண்ட நேரமாக நடுரோட்டில் நின்று கொண்டு 108 ஆம்புலன்ஸை விடாமல் தடுத்து நிறுத்தினார்.

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திற்கு வந்து கர்ப்பிணி பெண்ணை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக சேர்த்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் 108 ஆம்புலன்சை விடாமல் வழிமறித்தார்.

    நீண்ட நேரமாக நடுரோட்டில் நின்று கொண்டு 108 ஆம்புலன்ஸை விடாமல் தடுத்து நிறுத்தினார். டிரைவரை அவதூறாக வசை பாடினார்.

    இதை பார்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் அந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்தார். இதற்கிடையில் ஆம்புலன்சில் இருந்த செவிலியர் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரித்தபோது அந்த நபர் குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திலும் வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளை ஈடுபட்டார். தற்பொழுது 108 ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸில் நோயாளிகள் இல்லாததால் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    • போதை ஆசாமிகள் தொல்லையால் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து மதுரை, தூத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி, நாகர் கோவில் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதி களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் பின் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு மது அருந்து பவர்களில் சிலர் பஸ் நிலையம் வளாகத்திற்குள் வந்து பயணிகளிடம் வம்பு செய்கின்றனர்.

    போதை தலைக்கேறிய சிலர் பஸ்சிற்குள் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் பணம் கேட்டும் தொல்லை செய்கின்றனர். இதை கண்டிக்கும் கண்டக்டர், டிரைவர்களிடம் தகராறு செய்கின்றனர்.

    இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே பஸ் ஸ்டாண்டிற்குள் போதையில் குறிப்பாக இரவில் அரைநிர்வாணமாக திரிவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தினர்.

    • கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் தொல்லை நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர்.

    எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அந்த நபரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • திருப்பூர், கோர்ட் ரோட்டில் இளம்பெண் ஒருவர், கணவருடன் நேற்றுமாலை நடந்து சென்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர், கோர்ட் ரோட்டில் இளம்பெண் ஒருவர், கணவருடன் நேற்றுமாலை நடந்து சென்றார். அங்கு ரோட்டில் வலம் வந்த போதை ஆசாமி ஒருவர் பெண்ணிடம் அத்துமீற முயற்சி செய்தார். ஆத்திரமடைந்த அப்பெண், அந்த நபரை பிடித்து அடி வெளுத்து எடுத்தார். இதே போல் மற்றொரு பெண்ணையும் அந்த ஆசாமி கையைப் பிடித்து இழுத்து அத்திமீறி நடந்துள்ளார்.

    இதனைப்பார்த்த பொதுமக்களும் 'தர்மஅடி' கொடுத்தனர். அப்போது அந்த ஆசாமி பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றார். அப்போது பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, தகவலறிந்து சென்ற வடக்கு போலீசாரிடம், நக்கலாக பேசியபடி அந்த நபர் அமர்ந்திருந்தார்.

    'கூலிங் கிளாஸ்' போட்டு கொண்டு, 'நான் பாட்ஷா ரஜினி தெரியுமா' என, தலைமுடியை ஸ்டைலாக கோதி விட்டார். அந்த நபரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் போதையின் இருப்பதும் லேசான மனநிலை பாதிக்கப்ப ட்டிருப்பதும் தெரியவந்தது இதனையடுத்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    • கார் வேகமாக ஓட்டி செல்லப்பட்டது. போலீஸ்காரர் மாலி தனது கைளால் வாகனத்தை பற்றிக் கொண்டார்
    • மற்ற போலீசார் வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர் போதையில் இருந்த டிரைவர் ஆதித்யா பெம்டேயை கைது செய்தனர்.

    மும்பை:

    மும்பை அருகே உள்ள நவி மும்பை சாலையில் போக்குவரத்து போலீசாரான நாயக் சித்தேஷ்வர் மாலி பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது சந்தேகம் அடைந்த ஒரு காரை நிறுத்தினார். அவரும், மற்றொரு போலீசாரரும் சோதனையிட முயன்றனர். போதையில் இருந்த டிரைவர் காரை கிளப்பினார். மாலி காரின் முன்பகுதியில் சக்கி கொண்டார். கார் வேகமாக ஓட்டி செல்லப்பட்டது. போலீஸ்காரர் மாலி தனது கைளால் வாகனத்தை பற்றிக் கொண்டார். பாெனட்டில் அவர் ஆபத்தான முறையில் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டார்.

    மற்ற போலீசார் வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர் போதையில் இருந்த டிரைவர் ஆதித்யா பெம்டேயை கைது செய்தனர்.

    போலீஸ்காரரை போதை ஆசாமி காரில் முன்புற பகுதியில் வைத்து 20 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்வது வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக, மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இட ங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தை களில் கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ் நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

    பல்லடம் :

    பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆசிரியை கன்னத்தில் அறைந்த போதை ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
    • வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.


    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாணக்கன்காட்டை சேர்ந்தவரும் தற்போது ஆலங்குடி மாருதி நகரில் வசித்து வரும் கலையரசன் மனைவி சித்திராதேவி (வயது 47 ) இவர் ஆலங்குடி அருகே உள்ள கனியான்கொல்லை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    வழக்கம்போல் இவர் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வாணக்கன்காடு வடக்கு பகுதியை சேர்ந்த சித்திரைவேல் (44), என்பவர் குடிபோதையில் பளளியில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அங்கு நாற்காலியில் அமர்நது இருந்த ஆசிரியை சித்ராதேவியை எழுந்திரு என்று கூறி கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சித்ராதேவி வடகாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சித்திரவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டி பிரதான சாலையில் போதை ஆசாமி வீசிய துண்டு பீடியால் வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் பிரதான சாலையான ராஜாஜி சாலையில் பாழடைந்த ஓட்டு வீடு ஒன்று போதை ஆசாமி ஒருவன் புகைத்து விட்டு வீசிய துண்டு பீடியால் தீப்பிடித்து எரிந்தது. தீமளமளவென எரிந்து அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்பரமேஸ்வர பத்மநாபன்,சப்.இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், தலைமை காவலர் சுப்பிரமணி, மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்று அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர்.

    இது பற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புநிலைய அலு வலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீமேலும் பரவாமல் அணைத்தனர்.போலீசாரின்உடனடிநடவடிக்கையால்அந்த பகுதியில்பெரும்தீவிபத்துதடுக்கப்பட்டது. சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது.

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
    • தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

    உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.ஏரிப்பாளையம்,தளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று மாலை தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.அப்போது தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மதுபானக் கடையில் இருந்து மது அருந்திய நிலையில் வெளியே வந்த "மதுப்பிரியர்" ஒருவர்,மழை பெய்வதை பார்த்தவுடன் சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே அருவி போல் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

    தொடர்ந்து அவர் சிறிது நேரம் அமர்ந்தபடி நடன ஆக்சன்களை செய்தபடி மழையில் நனைந்தபடி இருந்ததை,அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    • ஓசூரில் உள்ள பாகலூர் சர்க்கில் பகுதியில் நேற்று 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
    • வாகனத்தில் பின்னால் இருந்த ஒருவர் இறங்கி மதுபோதையில் சாலையில் தள்ளாடினார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் நேற்றுமாலை கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மதுபோதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் ஒருவர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் வீடியோ மூலம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் ஓசூரில் உள்ள பாகலூர் சர்க்கில் பகுதியில் நேற்று 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அந்த வாகனத்தில் பின்னால் இருந்த ஒருவர் இறங்கி மதுபோதையில் சாலையில் தள்ளாடினார்.

    எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்த அவர் மெதுவாக அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி கழிவுநீர் கால்வாய்க்குள் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற விழுந்தார்.

    இதில் மழைவெள்ளம் அவரை கால்வாய்க்குள் அடித்து செல்லப்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே ஓடி வந்து அவரை பிடித்து இழுக்க முயன்றனர். ஆனால் தண்ணீர் அடித்து செல்லப்பட்டது. இதனால் கால்வாய் மறுபுறம் வழியாக அவரை துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

    மதுபோதையில் இருந்த அவர் மயக்கம் அடைந்தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனால் அவருக்கு போதை சற்று தெளிந்தது. கழிவுநீர் கால்வாயிக்குள் விழுந்த அவருக்கு தலை, முகம், கால் உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மதுபோதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை,போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ் நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்லடம் பஸ் நிலையத்தில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:-பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள், ஆகிய 3 நாட்கள் அதிகளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும், இந்த நிலையில் திங்கட்கிழமையில் பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×