search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போக்குவரத்து போலீஸ்காரரை 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் இழுத்து சென்ற போதை ஆசாமி
    X

    போக்குவரத்து போலீஸ்காரரை 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் இழுத்து சென்ற போதை ஆசாமி

    • கார் வேகமாக ஓட்டி செல்லப்பட்டது. போலீஸ்காரர் மாலி தனது கைளால் வாகனத்தை பற்றிக் கொண்டார்
    • மற்ற போலீசார் வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர் போதையில் இருந்த டிரைவர் ஆதித்யா பெம்டேயை கைது செய்தனர்.

    மும்பை:

    மும்பை அருகே உள்ள நவி மும்பை சாலையில் போக்குவரத்து போலீசாரான நாயக் சித்தேஷ்வர் மாலி பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது சந்தேகம் அடைந்த ஒரு காரை நிறுத்தினார். அவரும், மற்றொரு போலீசாரரும் சோதனையிட முயன்றனர். போதையில் இருந்த டிரைவர் காரை கிளப்பினார். மாலி காரின் முன்பகுதியில் சக்கி கொண்டார். கார் வேகமாக ஓட்டி செல்லப்பட்டது. போலீஸ்காரர் மாலி தனது கைளால் வாகனத்தை பற்றிக் கொண்டார். பாெனட்டில் அவர் ஆபத்தான முறையில் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டார்.

    மற்ற போலீசார் வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர் போதையில் இருந்த டிரைவர் ஆதித்யா பெம்டேயை கைது செய்தனர்.

    போலீஸ்காரரை போதை ஆசாமி காரில் முன்புற பகுதியில் வைத்து 20 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்வது வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

    Next Story
    ×