search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drunken man"

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
    • தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

    உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.ஏரிப்பாளையம்,தளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று மாலை தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.அப்போது தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மதுபானக் கடையில் இருந்து மது அருந்திய நிலையில் வெளியே வந்த "மதுப்பிரியர்" ஒருவர்,மழை பெய்வதை பார்த்தவுடன் சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே அருவி போல் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

    தொடர்ந்து அவர் சிறிது நேரம் அமர்ந்தபடி நடன ஆக்சன்களை செய்தபடி மழையில் நனைந்தபடி இருந்ததை,அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    ராயப்பேட்டையில் மது போதையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    சென்னை:

    ராயப்பேட்டை சைவ முத்தையா 4-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய நண்பர் தினேஷ். பெயிண்டர். நேற்று இரவு நண்பர்கள் இருவரும் வீட்டின் 2-வது மாடியில் இருந்து மது அருந்தினார்கள் 11.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

    அப்போது மது போதையில் தள்ளாடிய தினேஷ் அங்கிருந்து தவறி விழுந்தார். இதில் அருகில் உள்ள வீட்டின் ஓட்டு கூரை உடைந்து வீட்டுக்குள் விழுந்துவிட்டார்.

    அந்த வீட்டுக்குள் நடேஷ் பாபு என்பவரின் மனைவி ஜெயந்தி (25), அவருடைய மகன் சாரதி (1) ஆகியோர் தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் மீது தினேஷ் விழுந்தார். இதில் தாய், மகன் இருவரும் காயம் அடைந்தனர்.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷ், காயம் அடைந்த ஜெயந்தி, சிறுவன் சாரதி ஆகியோர் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதில், 2-வது மாடியில் இருந்து விழுந்த பெயிண்டர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இவர் விழுந்ததால் காயம் அடைந்த தாய், மகன் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×