search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
    X

    ராயப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

    ராயப்பேட்டையில் மது போதையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    சென்னை:

    ராயப்பேட்டை சைவ முத்தையா 4-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய நண்பர் தினேஷ். பெயிண்டர். நேற்று இரவு நண்பர்கள் இருவரும் வீட்டின் 2-வது மாடியில் இருந்து மது அருந்தினார்கள் 11.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

    அப்போது மது போதையில் தள்ளாடிய தினேஷ் அங்கிருந்து தவறி விழுந்தார். இதில் அருகில் உள்ள வீட்டின் ஓட்டு கூரை உடைந்து வீட்டுக்குள் விழுந்துவிட்டார்.

    அந்த வீட்டுக்குள் நடேஷ் பாபு என்பவரின் மனைவி ஜெயந்தி (25), அவருடைய மகன் சாரதி (1) ஆகியோர் தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் மீது தினேஷ் விழுந்தார். இதில் தாய், மகன் இருவரும் காயம் அடைந்தனர்.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷ், காயம் அடைந்த ஜெயந்தி, சிறுவன் சாரதி ஆகியோர் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதில், 2-வது மாடியில் இருந்து விழுந்த பெயிண்டர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இவர் விழுந்ததால் காயம் அடைந்த தாய், மகன் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×