search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burnt house"

    • பண்ருட்டி பிரதான சாலையில் போதை ஆசாமி வீசிய துண்டு பீடியால் வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் பிரதான சாலையான ராஜாஜி சாலையில் பாழடைந்த ஓட்டு வீடு ஒன்று போதை ஆசாமி ஒருவன் புகைத்து விட்டு வீசிய துண்டு பீடியால் தீப்பிடித்து எரிந்தது. தீமளமளவென எரிந்து அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்பரமேஸ்வர பத்மநாபன்,சப்.இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், தலைமை காவலர் சுப்பிரமணி, மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்று அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர்.

    இது பற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புநிலைய அலு வலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீமேலும் பரவாமல் அணைத்தனர்.போலீசாரின்உடனடிநடவடிக்கையால்அந்த பகுதியில்பெரும்தீவிபத்துதடுக்கப்பட்டது. சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது.

    ×