search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியை கன்னத்தில் அறைந்த போதை ஆசாமி
    X

    ஆசிரியை கன்னத்தில் அறைந்த போதை ஆசாமி

    • ஆசிரியை கன்னத்தில் அறைந்த போதை ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
    • வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.


    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாணக்கன்காட்டை சேர்ந்தவரும் தற்போது ஆலங்குடி மாருதி நகரில் வசித்து வரும் கலையரசன் மனைவி சித்திராதேவி (வயது 47 ) இவர் ஆலங்குடி அருகே உள்ள கனியான்கொல்லை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    வழக்கம்போல் இவர் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வாணக்கன்காடு வடக்கு பகுதியை சேர்ந்த சித்திரைவேல் (44), என்பவர் குடிபோதையில் பளளியில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அங்கு நாற்காலியில் அமர்நது இருந்த ஆசிரியை சித்ராதேவியை எழுந்திரு என்று கூறி கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சித்ராதேவி வடகாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சித்திரவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×