search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் தொல்லை
    X

    பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் தொல்லை

    • போதை ஆசாமிகள் தொல்லையால் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து மதுரை, தூத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி, நாகர் கோவில் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதி களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் பின் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு மது அருந்து பவர்களில் சிலர் பஸ் நிலையம் வளாகத்திற்குள் வந்து பயணிகளிடம் வம்பு செய்கின்றனர்.

    போதை தலைக்கேறிய சிலர் பஸ்சிற்குள் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் பணம் கேட்டும் தொல்லை செய்கின்றனர். இதை கண்டிக்கும் கண்டக்டர், டிரைவர்களிடம் தகராறு செய்கின்றனர்.

    இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே பஸ் ஸ்டாண்டிற்குள் போதையில் குறிப்பாக இரவில் அரைநிர்வாணமாக திரிவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தினர்.

    Next Story
    ×