என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீ விபத்து"
- தீயணைப்பு வண்டிகள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
- தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கஜுவாகாவில் 3 மாடி கட்டிடத்தில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2-வது, 3-வது மாடியில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வண்டிகள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. கல்வி நிறுவன கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
#WATCH | Andhra Pradesh: A fire broke out at an educational institute in Gajuwaka, Visakhapatnam. Fire tenders are at the spot and efforts to douse the fire underway. pic.twitter.com/0DbcCjuk05
— ANI (@ANI) February 27, 2024
- தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
- 8 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் பத்திரமாக மீட்பு.
உத்தரபிரதேச மாநிலம் கோக்ராஜ் அருகே கான்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இதில் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.
இதில் 5 பேர் தீயில் கருகி பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
தீயணைப்பு படையினர் பல வண்டிகளில் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பலர் தீ மற்றும் புகை மூட்டதில் சிக்கி கொண்டனர்.
- மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சீனாவின் கிழக்கில் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர்.
இந்த தீ விபத்தில் 15 பேர் பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது.
- மாத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள டயர் சேமிப்பு கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- புகைமூட்டம் அருகில் இருந்த மருத்துவமனையை சூழ்ந்ததால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை:
சென்னை மாதவரம் அருகே மாத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள டயர் சேமிப்பு கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ வேகமாக பரவியதால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இந்த புகைமூட்டம் அருகில் இருந்த மருத்துவமனையை சூழ்ந்ததால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- திடீரென மார்க்கெட் யார்டில் பங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் உள்ள பலன்பூரில் பெரிய மார்க்கெட் யார்டு உள்ளது. இன்று காலையில் இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்னர். பல நேரம் ஆகியும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளன.
இந்த பயங்கர தீவிபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
- தீ விபத்தில் 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- அரவிந்த் கெஜ்ரிவால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
டெல்லி மாநிலம் அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில், 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணியில் ஈடுட்ட போலீசார் உள்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், விபத்து குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக மிகுந்த கவலை அடைகிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். சிறிய காயம் அடைந்தோரும் தலா ரூ.20 ஆயிரமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.
தீ விபத்தில் சேதடைந்த கடைகளுக்கும், வீடுகளுக்கும் அரசு கொள்கையின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.
மேலும், தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. குடியிருப்பு பகுதியில் இந்த தொழிற்சாலை எப்படி இயங்கியது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். விரைவில் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெயின்ட் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- ரசாயனப் பொருட்கள் தீ விபத்தால் வெடித்து சிதறியதால் கட்டடம் இடிந்து விழுந்தது.
டெல்லி மாநிலம் அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பெயின்ட் தொழிற்சாலையில் ரசாயனப் பொருட்கள் இருந்ததால் வெடித்து சிதறின. இதனால் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மூலம் வீரர்கள் தீயை அணைத்தனர். பல மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர்.
அதற்குள் 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணியில் ஈடுட்ட போலீசார் உள்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர். இன்னும் இரண்டு பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
"தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கும் பரவியது. ரசாயன பொருட்கள் வெடித்ததில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 11 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம்" என டெல்லி தீயணைப்பு சர்வீஸ் இயக்குனர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார்.
- படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.
- அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், உப்பாடாவை சேர்ந்தவர் சுரதா ராமராவ். இவர் சொந்தமாக படகு வைத்து கொண்டு கடலில் மீன் பிடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒப்படைவை சேர்ந்த சக மீனவர்கள் 11 பேருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார். பைரவ பாலம் என்ற இடத்தில் நடுக்கடலில் சுரதா ராமராவ் உள்ளிட்டவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சுரதா ராமாராவின் படகில் திடீரென புகை வந்து தீப்பிடித்து எறிய தொடங்கியது.
இதனைக் கண்ட படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் படகில் சிக்கி இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். தீப்பிடித்த படகில் இருந்து 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
- மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.
புதுச்சேரி:
சேதராப்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் புதுவை காவல் துறையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு ராஜேஷ் தனது வீட்டின் முதல் தளத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது அறையில் தீப்பிடித்து எரிந்து அறையில் இருந்த பிரிட்ஜ் பீரோ மற்றும் மரத்திலான மேசை நாற்காலி, உடைகள் உள்ளிட்ட பொருள்கள் மளமளவென எரிந்தது.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அவர்களால் வீடு எரிந்தது தெரியவில்லை. புகை மூட்டத்தில் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட பின்னரே வீடு தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்தனர் ஆனால் புகை மூட்டத்தால் அவர்களால் வெளியேற முடியவில்லை.
வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டது.
புகை மூட்டத்தில் மூச்சு திணறி சிக்கிக் கொண்ட போலீசாரின் குடும்பத்தினரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.
இந்த சம்பவத்தால் சேதராப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.
- போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் போக்கு வரத்து நிறைந்து இருக்கும்.
இப்பகுதியில் சாலையில் ஒருபுறம் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவர் சாலை ஓரத்தில் மாலை நேர டிபன் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சல்மான் பாரிஸ் வழக்கம்போல் வியாபாரத்தை நடத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.
உடனே சாலை ஓரத்தில் உணவருந்தி கொண்டு இருந்தவர்கள், உணவை கீழே போட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள போக்குவரத்தை நிறுத்தினர்.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் கடையநல்லூர் தீயணைப்புத்துறையில் இருந்த வண்டி அருகில் உள்ள ஊருக்கு பூக்குழி திருவிழாவிற்கு சென்றதால் அதற்கு பதிலாக 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறை வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் வாகனம் வருவதற்கு தாமதமானதால் அங்கே இருந்த இளைஞர்கள் முகமது காலித், அக்பர், ஹாஜி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் எதிரே இருந்த ஹார்டுவேர்ஸ் கடையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். பொது மக்களும், வாலிபர்களும் துரிதமாக செயல்பட்டதால் கடையநல்லூரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
- சாலையில் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- காரில் நெருப்பு பரவியதும், உள்ளே இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் நெருப்பு பரவியதும், உள்ளே இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை அணைத்தனர். இதில் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது.
- தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்துங்கநல்லூர்:
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அனைத்தலையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.
இவர் நேற்று காலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொகுசு காரில் தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே காரில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதைப்பார்த்த கோவிந்த ராஜ் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் அவசர அவசரமாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். அதற்குள் காரின் என்ஜின் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அதைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருந்தும் கார் அதிக அளவில் தீயில் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம், அதில் இருந்த 4 பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்