என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்:  பலன்பூர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
    X

    குஜராத்: பலன்பூர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

    • திடீரென மார்க்கெட் யார்டில் பங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் உள்ள பலன்பூரில் பெரிய மார்க்கெட் யார்டு உள்ளது. இன்று காலையில் இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்னர். பல நேரம் ஆகியும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    மேலும் தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளன.

    இந்த பயங்கர தீவிபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

    Next Story
    ×