search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Four lane road"

    • தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அனைத்தலையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.

    இவர் நேற்று காலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொகுசு காரில் தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே காரில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதைப்பார்த்த கோவிந்த ராஜ் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் அவசர அவசரமாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். அதற்குள் காரின் என்ஜின் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அதைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருந்தும் கார் அதிக அளவில் தீயில் சேதமடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம், அதில் இருந்த 4 பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நெல்லை-தென்காசி இடையே 50 கிலோமீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நெல்லை மாவட்ட கனிம வளத்துறை சார்பில் குளத்தில் மண் எடுக்க 11 மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இரு நகரங்களுக்குமிடையே உள்ள 50 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெறும் இந்த சாலை பணியானது மந்தமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சாலை அமைக்க சரள் மண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய நிலையில் இச்சாலையில் செம்மண் மற்றும் களிமண் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த மண்ணை பயன்படுத்தினால் சாலையில் வழுக்கும் திறன் அதிகரிக்கும் அதன் மேல் தார் பயன்படுத்தினால் சாலையின் தரம் நீண்ட நாள்களுக்கு உழைக்காமல் போகக்கூடிய நிலை உருவாகும். இந்த மண், அருகில் உள்ள சாலையோரத்திலும், சிவலார்குளத்தில் உள்ள குளத்திலும் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத் தப்பட்டு வருகிறது.

    இந்த குளத்தில் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும் என அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நெல்லை மாவட்ட கனிம வளத்துறை சார்பில் இக்குளத்தில் மண் எடுக்க 11 மாதம் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

    தொடர்ந்து 11 மாதம் மண் எடுத்தால் கிராம வளம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர். எனவே நான்கு வழிச்சாலைக்கு குளத்து மண்ணை பயன் படுத்தாமல் சரள் மண்ணை எடுத்து பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×