search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public complaints"

    • 2 வருட ங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டும் கொட்டி சென்றனர்.
    • இருசக்கர வாகனங்களில் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி தாலுகா விற்கு உட்பட்ட பஸ் நிலை யத்தி லிருந்து குறிஞ்சிப்பாடி முதல் எம்.ஆர்.கே. நகர் வழியாக சென்று வரதரா ஜன்பேட்டை, கல்குணம், கிருஷ்ணாபுரம் வரை செல்ல சுமார் 2 கிலோ மீட்ட ருக்கு மேல் உள்ள பழுத டைந்த கிராமசாலையை தார் சாலையாக போடு வதற்காக, சுமார் 2 வருட ங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டும் கொட்டி சென்றனர். 

    ஆனால் இது நாள் வரையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலையை போடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் சுமார் 2000 ஏக்கர் விவ சாய நிலங்களுக்கு செல்ல பயன்படும் இந்த சாலை யில் பயிர்களுக்கு உரம் இடு வதற்கு மாட்டு வண்டிகளை பயன்படுத்த முடியாமலும், இருசக்கர வாகனங்களில் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுகிறது. 

    இதனால் ஒவ்வொரு மூட்டையாக தலையில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயி களும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். உடனடி யாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கிடப்பில் போடப்பட்ட இந்த தார் சாலையை அமைத்து தர விவசாயிகளும், பொதுமக்க ளும் கோரிக்கை வைக்கின்ற னர். கிராம வளர்ச்சியே நம் இந்திய நாட்டின் வளர்ச்சி, விவசாயமே நம் உயிர் நாடி ஆகையால் மாவட்ட நிர்வாக மும், சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளும் காலம் தாழ்த்தாமல் சாலை போடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர். 

    • நெல்லை-தென்காசி இடையே 50 கிலோமீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நெல்லை மாவட்ட கனிம வளத்துறை சார்பில் குளத்தில் மண் எடுக்க 11 மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இரு நகரங்களுக்குமிடையே உள்ள 50 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெறும் இந்த சாலை பணியானது மந்தமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சாலை அமைக்க சரள் மண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய நிலையில் இச்சாலையில் செம்மண் மற்றும் களிமண் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த மண்ணை பயன்படுத்தினால் சாலையில் வழுக்கும் திறன் அதிகரிக்கும் அதன் மேல் தார் பயன்படுத்தினால் சாலையின் தரம் நீண்ட நாள்களுக்கு உழைக்காமல் போகக்கூடிய நிலை உருவாகும். இந்த மண், அருகில் உள்ள சாலையோரத்திலும், சிவலார்குளத்தில் உள்ள குளத்திலும் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத் தப்பட்டு வருகிறது.

    இந்த குளத்தில் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும் என அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நெல்லை மாவட்ட கனிம வளத்துறை சார்பில் இக்குளத்தில் மண் எடுக்க 11 மாதம் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

    தொடர்ந்து 11 மாதம் மண் எடுத்தால் கிராம வளம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர். எனவே நான்கு வழிச்சாலைக்கு குளத்து மண்ணை பயன் படுத்தாமல் சரள் மண்ணை எடுத்து பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×