search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிஞ்சிப்பாடியில் கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணி
    X

    ஜல்லி மட்டும் கொட்டப்பட்டுள்ள சாலை.

    குறிஞ்சிப்பாடியில் கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணி

    • 2 வருட ங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டும் கொட்டி சென்றனர்.
    • இருசக்கர வாகனங்களில் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி தாலுகா விற்கு உட்பட்ட பஸ் நிலை யத்தி லிருந்து குறிஞ்சிப்பாடி முதல் எம்.ஆர்.கே. நகர் வழியாக சென்று வரதரா ஜன்பேட்டை, கல்குணம், கிருஷ்ணாபுரம் வரை செல்ல சுமார் 2 கிலோ மீட்ட ருக்கு மேல் உள்ள பழுத டைந்த கிராமசாலையை தார் சாலையாக போடு வதற்காக, சுமார் 2 வருட ங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டும் கொட்டி சென்றனர்.

    ஆனால் இது நாள் வரையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலையை போடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் சுமார் 2000 ஏக்கர் விவ சாய நிலங்களுக்கு செல்ல பயன்படும் இந்த சாலை யில் பயிர்களுக்கு உரம் இடு வதற்கு மாட்டு வண்டிகளை பயன்படுத்த முடியாமலும், இருசக்கர வாகனங்களில் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுகிறது.

    இதனால் ஒவ்வொரு மூட்டையாக தலையில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயி களும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். உடனடி யாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கிடப்பில் போடப்பட்ட இந்த தார் சாலையை அமைத்து தர விவசாயிகளும், பொதுமக்க ளும் கோரிக்கை வைக்கின்ற னர். கிராம வளர்ச்சியே நம் இந்திய நாட்டின் வளர்ச்சி, விவசாயமே நம் உயிர் நாடி ஆகையால் மாவட்ட நிர்வாக மும், சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளும் காலம் தாழ்த்தாமல் சாலை போடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

    Next Story
    ×