search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நான்று வழிச்சாலை"

    • தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அனைத்தலையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.

    இவர் நேற்று காலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொகுசு காரில் தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே காரில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதைப்பார்த்த கோவிந்த ராஜ் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் அவசர அவசரமாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். அதற்குள் காரின் என்ஜின் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அதைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருந்தும் கார் அதிக அளவில் தீயில் சேதமடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம், அதில் இருந்த 4 பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×