search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை தீ விபத்து"

    • கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.
    • போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் போக்கு வரத்து நிறைந்து இருக்கும்.

    இப்பகுதியில் சாலையில் ஒருபுறம் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவர் சாலை ஓரத்தில் மாலை நேர டிபன் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சல்மான் பாரிஸ் வழக்கம்போல் வியாபாரத்தை நடத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.

    உடனே சாலை ஓரத்தில் உணவருந்தி கொண்டு இருந்தவர்கள், உணவை கீழே போட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள போக்குவரத்தை நிறுத்தினர்.

    அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் கடையநல்லூர் தீயணைப்புத்துறையில் இருந்த வண்டி அருகில் உள்ள ஊருக்கு பூக்குழி திருவிழாவிற்கு சென்றதால் அதற்கு பதிலாக 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறை வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் வாகனம் வருவதற்கு தாமதமானதால் அங்கே இருந்த இளைஞர்கள் முகமது காலித், அக்பர், ஹாஜி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் எதிரே இருந்த ஹார்டுவேர்ஸ் கடையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். பொது மக்களும், வாலிபர்களும் துரிதமாக செயல்பட்டதால் கடையநல்லூரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    • கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அண்ணா மடுவு கண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் அந்த பகுதியில் மின் சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அருகே உள்ள ஒரு வீட்டுக்கு மின்சாதன பொருட்களை பழுது பார்ப்பதற்காக துரைசாமி கடையை திறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் கடையில் பழுது பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின் உள்பட பழைய மின் சாதன பொருட்களிலும் தீ பிடித்து மள மளவென எரிய தொடங்கியது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை உற்றி தீயை அணைத்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் கடையில் இருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பழைய மின் சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.

    பின்னர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 தீ விபத்தையும் சேர்த்து லட்சக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி அருகே கோவிந்தராஜன் தோட்டத்தை சேர்ந்தவர் சேகர் (52). இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு திருமணமான 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை சேகரும், அவரது மகனும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த குமாரி இன்று காலை சுமார் 6 மணியளவில் காய்கறி வாங்க வெளியே சென்றிருந்தார். அவர் அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து கரும்புகை வந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.

    இந்த விபத்தில் வீட்டிற்குள் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (47). இவர் கிருஷ்ணம்பாளையம் சாலையில் மேத்யூ டிரஸ் மேக்கர்ஸ் என்ற பெயரில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடித்து விட்டு மேத்யூ கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் மேத்யூவின் டெய்லர் கடையில் இருந்து புகை வெளி வந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் கடையில் இருந்த 3 தையல் மிஷின்கள், தைத்து வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் தைக்காமல் வைத்திருந்த துணிகள் என பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 தீ விபத்தையும் சேர்த்து லட்சக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

    • மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை மார்க்கெட், ராதா நகர் நாயுடு ஷாப் சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவர் ரமேஷ்.நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றார். இன்று அதிகாலை பூட்டி இருந்த செல்போன் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும், சிட்லபாக்கம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.எனினும் கடையில் இருந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×