search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய மின்சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து
    X

    பழைய மின்சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து

    • கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அண்ணா மடுவு கண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் அந்த பகுதியில் மின் சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அருகே உள்ள ஒரு வீட்டுக்கு மின்சாதன பொருட்களை பழுது பார்ப்பதற்காக துரைசாமி கடையை திறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் கடையில் பழுது பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின் உள்பட பழைய மின் சாதன பொருட்களிலும் தீ பிடித்து மள மளவென எரிய தொடங்கியது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை உற்றி தீயை அணைத்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் கடையில் இருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பழைய மின் சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.

    பின்னர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×