search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயக்குமார்"

    • எங்களை பொருத்தவரை பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது.
    • தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்து விட்டார்.

    ஆனாலும் அ.தி.மு.க.வை, தங்கள் கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. மேலிடம் முயன்று வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன'என்று கூறினார்.

    ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


    இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி இருப்பது அவரது நல்ல எண்ணத்தை காட்டுகிறது.

    எங்களை பொருத்தவரை பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு காலத்தில் பா.ஜனதாவுடன், அ.தி.மு.க. தோழமையாக இருந்தது.
    • இதுதான் அ.தி.மு.க. நிலைப்பாடு. எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.

    தஞ்சாவூா்:

    பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த குழுவினர் தஞ்சை மண்டலத்துக்கு உட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கருத்துக்களைக் கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதாவுடன் கூட்டணிக்காக அ.தி.மு.க.வுக்கு கதவுகள் திறந்தே இருப்பதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளது அவரது நிலைப்பாடாகும்.


    ஒரு காலத்தில் பா.ஜனதாவுடன், அ.தி.மு.க. தோழமையாக இருந்தது. இப்போது அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்க்கிறோம். எங்களோட முன்னோடிகள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக பா.ஜனதா மாநில தலைவர் கடுமையான அளவிற்கு விமர்சனம் செய்திருந்தார் .

    தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்களை சிறுமைப்படுத்தி பேசும் பா.ஜனதா மாநில தலைவரை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தொண்டர்களும் சரி , பொதுமக்களும் சரி பா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைமை அறிவித்தபோது ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


    எந்த காலத்திலும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாடு முழுவதும் வரவேற்பு உள்ளது.

    எங்கள் நிலைப்பாட்டை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கான கதவு சாத்தப்பட்டு விட்டது. அவர்கள் திறந்து வைத்திருக்கலாம். அவர்கள் வரக்கூடாது என்று நாங்கள் கதவை சாத்தி விட்டோம்.

    இதுதான் அ.தி.மு.க. நிலைப்பாடு. எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5-ந்தேதி வேலூர் மண்டலம், 6-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.
    • மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாளை முதல் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம்.

    * மண்டலம் வாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்கிறோம்.

    * 5-ந்தேதி வேலூர் மண்டலம், 6-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.

    * மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.

    * 10 பேர் கொண்ட குழுவும், நேரடியாக சென்று மக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளோம்.

    * நாளை சென்னை, வேலூர் மண்டலங்களில் கருத்து கேட்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

    • தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    • தமிழகத்தில் மோடியை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள்.

    சென்னை:

    மெரினா அண்ணா சமாதியில் மரியாதை செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் அண்ணா. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் தி.மு.க. மாநில உரிமைகளை தாரை வார்த்து விட்டு அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டது. இவர்களுக்கு அண்ணாவின் பெயரை சொல்ல எந்த தகுதியும் இல்லை. அண்ணா வழியில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்தார்கள்.

    இப்போது அதே வழியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் வேலைகளை அ.தி.மு.க. ஏற்கனவே தொங்கி விட்டது. எங்கள் தலைமையை ஏற்று கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். தி.மு.க. தொகுதி பங்கீடு செய்வதற்கு அவசரப்பட காரணம் யாரும் அவர்களை விட்டு பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.


    அதற்காகவே அவர்கள் கூட்டணி கட்சியினரை வாங்க... வாங்க.... சீக்கிரம் வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று அவரசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்கள் அணிக்கும் வருபவர்கள் வரத்தான் செய்வார்கள். அதனை தடுக்க முடியாது. இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் கால அவகாசம் உள்ளது. கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் அ.தி.மு.க. அணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மோடியை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் மறைமுகமாக ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.
    • விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மண் ஆள்வதற்கு முன்னால், தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அ.தி.மு.க.வின் வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. யாரும் கை வைக்க முடியாது விஜய் தன் அறிக்கையில் தி.மு.க., பா.ஜ.க. குறித்தே விமர்சனங்களை முன் வைத்துள்ளார். புதிய, நடுநிலை வாக்காளர்களின் ஓட்டு நிச்சயம் அ.தி.மு.க.வுக்கே என்று தெரிவித்துள்ளார்.

    • மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை தோலுரித்து காட்டுவோம்.
    • தி.மு.க. கூட்டணி கட்சிக்குள் பல முரண்பாடுகள் உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரக் குழு, விளம்பரக் குழுவினர் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டம் முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. உரிய நேரத்தில் அறிவிப்போம். மத்திய, மாநில அரசுகள் தவறு செய்தால் சுட்டிகாட்டுவோம்.

    அ.தி.மு.க. யாருக்கும் பயப்படாது. கூட்டணிக்காக அ.தி.மு.க.வினர் டெல்லி சென்று காலில் விழுந்ததாக அண்ணாமலை கூறுகிறார். இதனை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    பா.ஜ.க.வில் தன்னை முன்நிறுத்தி கொள்ள அண்ணாமலை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். நடக்காத விஷயத்தை அவர் கூறுகிறார்.

    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை தோலுரித்து காட்டுவோம். கடந்த 10 ஆண்டுகளில் மாநில நலன்களை பா.ஜ.க. மறந்து விட்டது. பா.ஜ.க.வுடன் இனி ஒட்டும் இல்லை... உறவும் இல்லை.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். இந்தயா கூட்டணியை போல தி.மு.க. கூட்டணியும் சிதறும். தி.மு.க. கூட்டணி கட்சிக்குள் பல முரண்பாடுகள் உள்ளன. நெல்லிக்காய் மூட்டை போல சிதறும்.

    அண்ணாமலை, அண்ணே... அண்ணே... என்று ஊளை கும்மிடு போடும் நபர்கள் நாங்கள் இல்லை. மத்திய, மாநில அரசுகள் தவறு செய்தால் அவர்களை அடையாளப்படுத்துவது அ.தி.மு.க.வின் வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • 4 பேர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.


    இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

    மேலும் நேற்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் அம்மனு மீதான உத்தரவு தெரிவிப்பதற்காக நாளை (அதாவது இன்று) இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயக்குமாரின் கோரிக்கையை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நிராகரித்தார். மேலும் ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

    • ஜல்லிக்கட்டு ஒரு சனாதன திருவிழா என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார்.
    • 2026-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் புரட்சி ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும் என்பது தான் விதி.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாபெரும் தலைவரான எம்.ஜி.ஆருக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது நல்ல விஷயம்தானே. அதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. இப்போது அல்ல, எப்போதும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்திவிட்டாரே...

    ஜல்லிக்கட்டு ஒரு சனாதன திருவிழா என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். தமிழர்களின் பெருமையே வீரமும், காதலும்தான். வீரத்தின் சின்னம் ஜல்லிக்கட்டு.

    அண்ணாமலையை முதலமைச்சராக்க ரஜினிகாந்த் விருப்பப்பட்டதாக துக்ளக் குருமூர்த்தி கூறியிருக்கிறாரே.... இதற்கான பதிலை ரஜினிகாந்த்தான் சொல்ல வேண்டும். ரஜினிகாந்த் எதுவுமே சொல்லாத சூழலில், அவர் சொன்னதாக குருமூர்த்திதான் இதனை கூறியுள்ளார். ரஜினி சொல்லட்டும், அதன்பிறகு நான் சொல்கிறேன். அறையில் நடந்ததை அம்பலத்தில் சொல்லட்டும். நாங்கள் பதில் அளிக்கிறோம். எது எப்படி இருந்தாலும், அது இலவு காத்த கிளி, அது நடக்காத விஷயம். 2026-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் புரட்சி ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும் என்பது தான் விதி.

    தமிழகத்தில் தாமரையை மலர வைக்க எவ்வளவோ முயற்சிக்கிறார்கள். அது அவர்களது ஆசை. ஆனால் இரட்டை இலை பெரியளவில் துளிர்த்து பசுமையாக காட்சியளிக்கிறது. அதுகிட்ட எதுவுமே எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவித்தவர் அவர்.
    • கோர்ட்டு மூலமாக கிடைத்த தண்டனையாகவே இதனை பார்க்கிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயப்பேட்டை தலைமைக்கழகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என்பதுடன் அ.தி.மு.க. கரை வேட்டியையும் கட்டக்கூடாது என்று ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது. இந்த தடையை அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள்.



    அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவித்தவர் அவர். அடியாட்கள் மற்றும் குண்டர்களோடு சென்று தலைமைக்கழகத்தை அடித்து நொறுக்கி, கொள்ளையடித்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடியை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.

    கோர்ட்டு மூலமாக கிடைத்த தண்டனையாகவே இதனை பார்க்கிறோம். குழம்பிய குட்டையில் ஓ.பி.எஸ். மீன்பிடிக்க நினைக்கிறார். அது பலிக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம்.
    • முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற பிரச்சனை வந்தபோது, எல்லோரும் நாவலர் நெடுஞ்செழியனை சொல்லும்போது, எம்.ஜி.ஆர்.தான், முரசொலி மாறன் உள்ளிட்டோர் வந்து கேட்டதற்கு இணங்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோரிடம் பேசி கருணாநிதியை முதலமைச்சராக தேர்வு செய்ய செய்தார்.

    எனவே, கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம். இதை கருணாநிதி எங்கள் தங்கம் திரைப்பட விழாவிலேயே சொல்லி இருக்கிறார். இது தான் வரலாறு.

    ஆனால், கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஏதோ கருணாநிதியை புகழ வேண்டும் என்பதற்காக தவறாக வரலாற்றை மறைத்து பேசியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதே போன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்தினார்கள். அங்கு 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்ட நிலையில் 899 பேர் தான் விழாவிற்கு வந்துள்ளனர். இதைவிட கருணாநிதியை கேவலப்படுத்தியது உலகத்தில் எதுவுமே இருக்காது. இந்த விழாவில், முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள். அதாவது, கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுகிறார்கள். இதனை தமிழ்நாடு ஏற்குமா? எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்பார்களா?

    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருக்கும் வரை கருணாநிதி பதவியில் இருந்தார். தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு கருணாநிதியால் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ ஆகமுடியவில்லை. 11 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்த மாபெரும் தலைவர் தான் எம்.ஜி.ஆர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார்.
    • ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது!

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கருணாநிதியால்தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நேற்றுமுன்திளம் நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்.

    இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று!

    புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது!

    அவரது உதவியால்தான் கருணாநிதியே முதலமைச்சரானார். சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே?.

    இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர். #TheGOATMGR

    இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. என்பது முரண்பாடு உடைய ஒட்டு மொத்த உருவம்.
    • தி.மு.க. 17 ஆண்டுகள் மத்தியில் இருந்தது அப்பொழுது பூனை குட்டிகள் எல்லாம் என்ன செய்தது.

    தருமபுரி:

    தருமபுரியில் நடைபெற்ற அ.தி.மு.க.பிரமுகா் இல்லத்திருமணவிழாவில் கலந்துக்கொண்ட அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவா் பேசியதாவது:-

    தி.மு.க. என்பது முரண்பாடு உடைய ஒட்டு மொத்த உருவம். சட்டமன்றத்தில் கவர்னர் தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். தி.மு.க.விற்கு ஒத்திசை பாடி எல்லோவற்றுக்கும் தலையாட்டுகின்ற கவர்னர் இருந்தால் நாட்டுக்கு தேவை என்பார்கள்.

    17 ஆண்டுகள் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள். சர்க்காரியா ஒரு கமிஷனை நியமனம் செய்து மாநிலங்களில் இருந்து கருத்து கேட்டு கவர்னருக்கு என்னென்ன அதிகாரம் வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தினார். அமல்படுத்தியிருந்தாலே போதும் பிரச்சனை வந்திருக்காது.

    17ஆண்டுகள் காலம் ஆட்சியில் இருந்து விட்டு அப்பொழுது அமல்படுத்தியிருந்தால் பிரச்சனை இல்லை. கவர்னருக்கும், அரசுக்கும் மோதல் போக்கு உருவாகி இருக்காது.

    கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதுதான் விதி அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடும் என தேவைக்கு ஏற்றார் போல் பச்சோந்தி தனமாக முறைகளை கையாள்வதில் கில்லாடிகள் இந்த தி.மு.க. அரசு.

    சட்டமன்றத்தில் பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்று துரைமுருகன் பேசினாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தி.மு.க. 17 ஆண்டுகள் மத்தியில் இருந்தது அப்பொழுது பூனை குட்டிகள் எல்லாம் என்ன செய்தது. அப்போது அந்த பூனை குட்டிகள் எதுவும் செய்யவில்லை. அதிகாரத்தில் இருக்கும் பொழுது மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்காமல் மாநில உரிமைக்கு குரல் கொடுக்காமல் தனது குடும்ப நலன்களுக்காக உரிமையை விற்றவர்கள் பேசலாமா?, இவர்களைப் போல நாங்கள் இரட்டை வேடம் போடுவது இல்லை தனித் தன்மையுடன் தான் இருக்கிறோம்.

    இவ்வாறு அதி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியின் போது தெரிவித்தார்.

    ×