என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அமித்ஷாவின் நல்ல எண்ணத்தை காட்டுகிறது- ஓ.பன்னீர்செல்வம்
- எங்களை பொருத்தவரை பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது.
- தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.
பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்து விட்டார்.
ஆனாலும் அ.தி.மு.க.வை, தங்கள் கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. மேலிடம் முயன்று வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன'என்று கூறினார்.
ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி இருப்பது அவரது நல்ல எண்ணத்தை காட்டுகிறது.
எங்களை பொருத்தவரை பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்