search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villupuram court"

    • பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
    • இந்த சம்பவம் தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தலைமறைவு ஆகியுள்ளார்.

    டி.ஜி.பி ராஜேஷ் தாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சென்ற நிலையில், அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடும் பணியை தொடங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரி ரேவதி தகவல் தெரிவித்துள்ளார்.

    தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார்.

    இந்த சம்பவம் தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அந்தத் தீர்ப்பில், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில் ராஜேஸ்தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    • செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர்.
    • ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, பாக்ரா பேட்டை உள்ளிட்ட ஷேஷாசலம் வனப்பகுதியில் விலையுயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன. இந்த செம்மரங்கள் வெளிநாடுகளில் அதிக அளவு விலைபோவதால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செம்மர வியாபாரிகள் தமிழக பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களை கொண்டு செம்மரங்களை வெட்டி எடுத்து கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டம் குண்ட்ரவாரி பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர். அப்போது அந்த கார் நிற்காமல் வழிமறித்த போலீஸ்காரர் மீது மோதி சென்றுவிட்டது. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக செம்மர கடத்தல் கும்பல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கீழ்நிலவூர் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 31) உள்ளிட்ட 8 பேர் மீது ஆந்திர மாநிலம் கே.வி.பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள 6 பேரை தனிப்படை அமைத்து ஆந்திர மாநில போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2 தினங்களாக கல்வராயன்மலையில் முகாமிட்டு ஆந்திர மாநில போலீசார் தேடி வரும் நிலையில், முக்கிய குற்றவாளியான ராமன், விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக இன்று சரணடைந்தார்.

    • கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    விழுப்புரம்:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 2 பேரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ்தாஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, பிப்ரவரி 23-ந்தேதிக்குள்ளாகவோ அதற்கு முன்னரோ விசாரித்து முடிக்க வேண்டுமென விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து ராஜேஷ்தாஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பவம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தற்போது தனி மாவட்டமாகி விட்டது என்பதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, அம்மனுவை தள்ளுபடி செய்ததோடு ராஜேஷ்தாசின் மேல்முறையீட்டு மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமாவே விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    இதில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் இன்று (12-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ராஜேஷ்தாஸ் தரப்பில் வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன், ஹேமசந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள். நாங்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளோம். எனவே, காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அதனை நீதிபதி பூர்ணிமா ஏற்கவில்லை.

    அதற்கான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.500 அபராத தொகையையும் உறுதி செய்து உத்தரவிட்டார்.

    • வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • 4 பேர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.


    இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

    மேலும் நேற்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் அம்மனு மீதான உத்தரவு தெரிவிப்பதற்காக நாளை (அதாவது இன்று) இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயக்குமாரின் கோரிக்கையை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நிராகரித்தார். மேலும் ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை உள்ளது.
    • மனு மீதான விசாரணை கடந்த வாரம் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இங்கு அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 24 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக அப்போது கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது அப்போதைய வானூர் தாசில்தாராக இருந்த குமாரபாலன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2017-ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின்போது சில சாட்சிகள் பிறள் சாட்சிகளாக மாறினர்.

    இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வக்கீல் சீனிவாசன் மூலமாக மனுதாக்கல் செய்துள்ளார்.

    அதில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த நீதிபதி, இன்று (திங்கட்கிழமை) ஜெயக்குமார் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை ஆஜரானார்.

    முன்னதாக அவர் விழுப்புரத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., லோகநாதன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி இன்று ஆஜராகவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., லோகநாதன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் 5 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

    குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே இறந்து விட்டார். அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி இன்று ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததற்காக காரணத்தை அவரது வக்கீல்கள் மனுவாக தாக்கல் செய்தனர்.

    தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூரணி அம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் கலவரம் வெடித்தது.
    • கலவரத்தை தொடர்ந்து சுமார் 600 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

    விழுப்புரம்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது தாய் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை தொடர்ந்து சுமார் 600 பேர் வரை கைது செய்யப்பட்டனர். மாணவி உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை ஆகஸ்ட் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ரூ.500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி.

    இவர் கடந்த 2008-ம் ஆண்டு மின் இணைப்பு வழங்ககோரி மதுரபாக்கத்தில் உள்ள துணைமின்நிலையத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் திருஞான சம்மந்திடம் விண்ணப்ப மனு கொடுத்திருந்தார்.

    அப்போது அவர் ரூ.500 லஞ்சம் தரவேண்டும் என்று கூறினார். லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத வீராசாமி விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைபடி வீராசாமி லஞ்ச பணம் ரூ.500 மின்வாரிய அதிகாரி திருஞானசம்மந்தத்திடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் திருஞானசம்மந்தத்தை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    நீதிபதி பிரியா வழக்கை விசாரித்தார். லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி திருஞானசம்மந்தத்துக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
    செம்மண் குவாரி வழக்கு நேற்று விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ.ஆஜராகவில்லை. விசாரணையை நீதிபதி 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #ponmudimla

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக பொன்முடி எம்.எல்.ஏ., ராஜமகேந்திரன், கவுதமசிகாமணி, லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ. உள்பட 8 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி 8 பேரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர்.

    இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.

    இதேபோல் பொன்முடி எம்.எல்.ஏ., அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கும் இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ., விசாலாட்சி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் 6 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கின் விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.  #ponmudimla

    சொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பொன்முடி வழக்கின் விசாரணை வரும் 31-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
    விழுப்புரம்:

    முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    பொன்முடி இன்று கோர்ட்டில் ஆஜராகினார். அதன்பின்பு வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் பொன்முடி ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் மணல் அள்ளியதில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் உள்பட 8 பேர் மீது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும் இன்று இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கோர்ட்டில் ஆஜரானார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிரியா இந்த வழக்கையும் 31-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று பொன்முடி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
    திருக்கோவிலூர் அருகே 4-ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் தில்லைநாதன் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆராயி, அவரது மகள் தனம், மகன் 4-ம் வகுப்பு படித்து வந்த சமயன் ஆகிய 3 பேர் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் மாணவன் சமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். படுகாயமடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை கொலை செய்ததாக கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்த தில்லைநாதனையும், இவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது கள்ளக்காதலி அம்பிகாவையும் கைது செய்தனர்.

    மேலும் விசாரணையில் கைதான தில்லைநாதன், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கடலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வீடு புகுந்து தனியாக இருக்கும் பெண்களை தாக்கி நகை பறித்தல், பலாத்காரம் செய்தல் என 81 குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இவருடைய செயல்களை தடுக்கும் வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தில்லைநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புலன் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தில்லைநாதன் மீது விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்துமாணிக்கம் மற்றும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

    விரைவில் இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #Tamilnews
    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான வேல்முருகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. #VelMurugan
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தின்போது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்திகுமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி (பொறுப்பு) திருமகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த ஜாமீன்மனு விசாரணையை வருகிற ஜூன் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #VelMurugan
    ×