search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makkal Iyakkam"

    • அரசியலில் வெற்றி பெற ரசிகர்களின் பலம் மட்டும் போதாது.
    • ‘‘நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா..; அப்புறம்... என் பேச்ச நானே கேட்கமாட்டேன்னு’’ வேற சொல்லி இருக்காரு.

    புலி வருது... புலி வருது... என்று கடைசியில் வந்தேவிட்டது...!

    ஆம்... தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் 'தளபதி' விஜய், ''தமிழக வெற்றி கழகம்'' என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் குதித்துவிட்டார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கு அரசியல் ஆசை இருந்ததை மறுக்க முடியாது. தனது படங்களில் 'பஞ்ச் டயலாக்' மூலம் அவ்வப்போது அவர் அதை வெளிப்படுத்த தயங்கியது இல்லை. அவரது ரசிகர்களும் தேர்தல்களின்போது தங்கள் அரசியல் ஈடுபாட்டை காட்டி வந்துள்ளனர்.

    இதுவரை 'டிரெய்லராகவே' இருந்து வந்த அவர்களுடைய அரசியல் ஆசை இப்போது, புதிய கட்சியின் வடிவில் முழுமையாக வெளியாகி இருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் வரை நடிகராக இருந்த விஜய் நேற்று முதல் அரசியல் தலைவர் ஆகி இருக்கிறார்; அவரது ரசிகர்கள் தொண்டர்கள் ஆகி இருக்கிறார்கள்.

    இந்தியாவில், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கி ஜெயித்தவர்கள் 2 பேர்தான், ஒருவர் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., மற்றொருவர் ஆந்திராவில் என்.டி.ராமராவ். ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர்தான் என்ற போதிலும் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி அந்த கட்சியை வளர்த்தெடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்தவர்.

    இவர்கள் தவிர திரைத்துறையைச் சேர்ந்த எத்தனையோ பேர் கட்சி தொடங்கி அரசியலில் மூழ்கி காணாமல் போய் இருக்கிறார்கள். சிலர் பாதி கிணறு, முக்கால் கிணறு தாண்டியதோடு சரி. இன்னும் சிலர் ''சீச்சீ இந்த பழம் புளிக்கும்'' என்று ஓடி இருக்கிறார்கள். மேலும் சிலர் சூடுகண்ட பூனையாக கடையை சாத்திவிட்டு, ''தெரிந்த தொழிலையே செய்வோம்'' என்று நடையை கட்டி இருக்கிறார்கள்.

    மேற்கண்ட அத்தனை பேருக்கு கிடைத்த அனுபவங்களையும் நன்கு அறிந்தே, நிதானமாகவும், தெளிவாகவும் விஜய் அடியெடுத்து வைத்து இருக்கிறார்.

    விஜய் யாரை எதிர்க்கப்போகிறார்? அவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்? என்பது மக்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதுவரை எல்லோருக்கும் வேண்டப்பட்டவராக-யாரையும் எதிர்க்காதவராக இருந்து வந்திருக்கலாம்.

    அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கமுடியாது? இருக்க நினைத்தால் கட்சியை வளர்க்க முடியாது. இது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

    கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க.வின் கொள்கைகள், அண்ணாயிசம் பற்றியெல்லாம் எம்.ஜி.ஆர். பேசிய போதிலும், தி.மு.க.வை எதிர்ப்பதுதான் அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கையாக இருந்தது; இப்போதும் இருக்கிறது. இதனால்தான் தி.மு.க.வுக்கு எதிரான கருத்துகளை கொண்டவர்கள் எம்.ஜி.ஆர். கட்சியின் பக்கம் நின்றனர்.

    கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அங்கே-இங்கே என்று தாவிக் கொண்டிருக்கும் கட்சிகளெல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிடுகின்றன.

    இதையெல்லாம் கூர்ந்து கவனித்து வரும் விஜய், தனது கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

    சட்டசபை தேர்தலை குறிவைத்தே ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்கும் விஜய் ''வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது'' என்று அறிவித்து இருக்கிறார். தேர்தல் பணியாற்ற அவரது தொண்டர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும்போது, விஜய்யின் இந்த முடிவு அவர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை தரக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. களத்தில் குதிப்பது என்று முடிவு செய்துவிட்டபின் தள்ளிப்போடுவது தொண்டர்களின் வேகத்தையும், உற்சாகத்தையும் குறைப்பதாக அமைந்துவிடும். ஏனெனில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது.

    1972 அக்டோபர் 17-ந்தேதி அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். அடுத்த ஆறு மாதங்களில் அதாவது 1973 மே 20-ந்தேதி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்பாளரை களம் இறக்கி மகத்தான வெற்றி கண்டது இங்கு நினைவு கூரத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று விஜய் அறிவித்து இருப்பதால், அந்த தேர்தலில் அவரது கட்சியின் நிலை என்னவாக இருக்கும்? அவரது தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? என்பதும் தற்போதைய நிலையில் தெரியவில்லை. போகப் போகத்தான் தெரியும்.

    இதுவரை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள் பணியாற்றிய அவரது ரசிகர்கள், இப்போது கட்சி தொண்டர்களாகி மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறார்கள். அவர்களுடைய நற்செயல்களால் வரும் பெருமைகள் அனைத்தும் விஜய்யை வந்து சேரும். அதேசமயம், ஏதாவது குறைபாடுகள் என்றாலும், அதனால் வீசப்படும் கணைகளையும் அவர்தான் தாங்கிக்கொள்ள நேரிடும். இதையெல்லாம் நன்கு உணர்ந்திருக்கும் 'தளபதி' விஜய் தனது 'சிப்பாய்களை' நல்வழியில் நடத்திச்செல்வார் என்று உறுதியாக நம்பலாம்.

    அரசியலில் வெற்றி பெற ரசிகர்களின் பலம் மட்டும் போதாது. ரசிகர்கள் வட்டத்தை தாண்டி சமானிய மக்களின் ஆதரவையும் பெற்றால்தான் கோட்டைக்கு செல்ல முடியும். தனது செயல்கள்-அணுகுமுறைகள் மூலம் மக்கள் மனங்களை வெல்லும் திட்டங்களை அவர் வைத்திருக்கக்கூடும்.

    சினிமாவில் விஜய் 'புலி'தான் என்பதில் சந்தேகமே இல்லை. அவரது படங்கள் நல்ல வசூலை கொடுக்கின்றன.

    வெள்ளித்திரையில் உச்சத்தில் இருக்கும் அவர், அரசியலில் குதித்து இருப்பதால், சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக அறிவித்து இருப்பது எதிர்பாராத ஒன்றுதான்.

    ஏனெனில், முதலமைச்சர் ஆகும் வரை எம்.ஜி.ஆர்., சினிமா-அரசியல் என்ற இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்தார். முதலமைச்சர் பதவி, சினிமாவில் நடிக்க அனுமதிக்காததால்தான் வேறு வழியில்லாமல் அவர், திரையுலகத்தை விட்டு விலகினார். அப்படி இருக்கும் போது விஜய், சினிமாவுக்கு 'பேக்கப்' சொல்ல தீர்மானித்து இருப்பது திரைத்துறையினருக்கு ஒருபுறம் ஆச்சரியம் அளிப்பதாகவும், மற்றொருபுறம் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

    என்றாலும் அவர் நன்றாக யோசித்தே முடிவு எடுத்து இருப்பார் என்று நம்புவோம். ஏன்னா?... ''நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா..; அப்புறம்... என் பேச்ச நானே கேட்கமாட்டேன்னு'' வேற சொல்லி இருக்காரு. எனவே அவரது இந்த முடிவு தீர்க்கமானதாகத்தான் இருக்கும்.

    ஓகே... சினிமா புலி விஜய், அரசியலிலும் தான் புலிதான் என்பதை நிரூபிப்பாரா? அல்லது....; வேண்டாம்..., வேண்டாம்.... பொறுத்திருந்து பார்ப்போம். 

    • கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்றுள்ளார்.

    சென்னை:

    நடிகர் விஜய் இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்தார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்றுள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர், நடிகர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • தனக்குப் பின்னால் இருப்பவர்களும் முன்னால் வரவேண்டும் என நினைப்பவர் விஜய்.
    • தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்ற மாதிரி தமிழகத்தில் வெற்றி பெறும் என்றார்.

    சென்னை:

    நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விஜயின் தாயாரான ஷோபா சந்திரசேகர் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஷோபா கூறியதாவது:

    தனக்குப் பின்னால் இருப்பவர்களும் முன்னால் வரவேண்டும் என நினைப்பவர் விஜய்.

    ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் அரசியல் பொறுப்பு இருக்கிறது.

    மதம், சாதி என்பதில் எல்லாம் விஜய்க்கு உடன்பாடு இல்லை.

    தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்ற மாதிரி தமிழகத்தில் வெற்றி பெறும்

    வாகை சூடு விஜய் என தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
    • கட்சி அறிவிப்பை தொடர்ந்து, விஜய்யை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    கட்சி அறிவிப்பை தொடர்ந்து, விஜய்யை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் விஜய் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தகவலையடுத்து நடிகர் விஜய்யை காண ஒரகடத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

    • விஜய் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.
    • விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மண் ஆள்வதற்கு முன்னால், தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அ.தி.மு.க.வின் வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. யாரும் கை வைக்க முடியாது விஜய் தன் அறிக்கையில் தி.மு.க., பா.ஜ.க. குறித்தே விமர்சனங்களை முன் வைத்துள்ளார். புதிய, நடுநிலை வாக்காளர்களின் ஓட்டு நிச்சயம் அ.தி.மு.க.வுக்கே என்று தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் கடந்த 25-ந்தேதி ஆலோசனை நடத்தினார்.
    • நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

    இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் கடந்த 25-ந்தேதி ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது. பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார்.

    நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் விஜயிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்றும் கட்சி கொடி, சின்னம் மற்றும் வண்ணங்கள் முடிவு செய்யும் பணி தொடங்கியதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்கி உள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் விஜய் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார்.


    இந்நிலையில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

    இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


    வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

    இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க


    பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    நடிகராக இருந்த விஜய் இதன் மூலம் முழுநேர அரசியல்வாதியாக மாறியுள்ளார்.


    • நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல சேவைகளை செய்து வந்தார்.
    • இவர் தற்போது தன் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று செய்தி பரவி வந்தது. இதையடுத்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    • கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
    • வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

    நடிகர் விஜய் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் `மிச்சாங்' புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும், போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

    வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

    இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம்... துயர்துடைப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×