search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay politics"

    • லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
    • விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.



    இந்நிலையில் தளபதி 68 படத்தை முடித்த பிறகு விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 மே மாதத்திற்குள் வெங்கட் பிரபு உடனான படத்தை நிறைவு செய்துவிட்டு 2025 ஆம் ஆண்டு முழுவதும், மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.



    சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், விஜய் கவனம் செலுத்தப் போவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாக உள்ளதகவும் கூறப்படுகிறது.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் யாருக்கும் இங்கு காய்ச்சல் வரவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். #MinisterUdhayakumar #VijayPolitics
    சென்னை:

    நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்த தகவலை சர்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சூசகமாக தெரிவித்தார். அவரது பேச்சுக்கு சிலர் ஆதரவு அளித்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர். அதன்பின்னர் சமீபத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுவதாக கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தால் அச்சத்தில் யாருக்கும் காய்ச்சல் ஒன்றும் வரவில்லை’ என்றார்.


    மேலும் குடிநீர் பிரச்சனை குறித்து கமல் கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், ‘ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான விஷன்-2023 திட்டத்தை பற்றி முழுமையாக படித்திருந்தால் கமல் இப்படி உளறமாட்டார்’ என்றார்.

    ‘சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவிற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் கிடையாது. விஜய் அரசியலில் குதித்து அடிபடாமல் தப்பினால் சரி’ என ஏற்கனவே உதயகுமார் கூறியது குறிப்பிடத்தக்கது. #MinisterUdhayakumar #VijayPolitics
    நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். #ActorVijay #SAChandrasekhar #Vijaypolitics
    சிங்கை:

    இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று காலை பாபநாசம் வந்தார்.

    அங்கு நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து தத்துவத்தை பின்பற்றுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான். தற்போது ஆன்மீக பயணமாக நான் வந்துள்ளேன்.

    நான் இந்த நிலைக்கு வருவதற்கு 45 ஆண்டுகள் கஷ்டப்பட்டுள்ளேன். ஊழலற்ற நிர்வாகத்தை அமைக்க யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். டாக்டர்கள், வக்கீல்கள் அரசியலுக்கு வருவது போல நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை.


    நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும். இதை நான் அவரது தந்தையாக கூறவில்லை. பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவர் நல்லது செய்ய வேண்டும்.

    இந்த புகழ் எல்லாம் தமிழக மக்களால் வந்தது. நான் மட்டும் சந்தோ‌ஷமாக இருப்பதை விட தன் அருகில் இருப்பவர்களையும் மகிழ்வோடு வைத்து கொள்ள வேண்டும் என்பதால் தான் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளேன்.

    25 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் சீடராக உள்ளேன். இதுவரை 69 படங்கள் இயக்கி உள்ளேன். மன மகிழ்வுக்கு ஜாதி, மத வேறுபாடின்றி ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். 3 முறை காசிக்கு சென்றுள்ளேன். கைலாய யாத்திரையும் மேற்கொண்டுள்ளேன். தினமும் காலையில் யோகா செய்து வருகிறேன்.

    பாபநாசம் மிக முக்கியமான தலம். பாவங்களை போக்கும் அற்புத தீர்த்த கட்டம் இங்குள்ளது. எல்லோரும் 100 சதவீதம் நல்லவர்களாக இருக்க முடியாது. ஏதாவது குறைகள் இருக்கும். அத்தகைய சூழலில் பாவங்கள் போக்கும் பாபநாசத்திற்கு வருவது நல்லது. உலகில் எந்த மூலையில் இருப்பவர்களும் ஒருமுறையாவது பாபநாசம் வரவேண்டும்.

    காசியில் உள்ள கங்கையை போன்றே புனிதமிக்க நதி தாமிரபரணி. 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடக்கூடிய தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நம் முன்னோர்கள் ஆன்மீகத்தை அறிவியலுடன் இணைத்தே வகுத்துள்ளனர்.

    இவ்வாறு டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறினார்.

    தொடர்ந்து அவர் நாளை கன்னியாகுமரி செல்கிறார். நாளை மறுநாள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்.#ActorVijay #SAChandrasekhar #Vijaypolitics
    ‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வரும் ராதா ரவி, விஜய் புரட்சித்தலைவரை போல நிச்சயமாக வருவார் என்றும், விரைவில் அவர் தமிழ்நாட்டை ஆள்வார் என்றும் கூறியிருக்கிறார். #Vijay #RadhaRavi
    நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மூத்த நடிகர் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

    இந்நிலையில் அவர் நடிகர் விஜய் பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘‘விஜய் இன்னும் ஐந்து அல்லது ஆறு வருடங்களில் அரசியலுக்கு வரவேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே தைரியமாக பல வி‌ஷயங்களை செய்தவர் விஜய்.



    அதனால் தான் அவரிடம் எதிர்ப்பை சம்பாதித்தார். நீங்கள் புரட்சித்தலைவரை போல நிச்சயமாக வருவீர்கள். அதற்காக அவரிடம் இருக்கும் சில குணங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். திரையுலகை ஆள்வது போல தமிழ்நாட்டையும் ஆள்வார் விஜய்” என ராதாரவி கூறியுள்ளார். #Vijay #Sarkar #RadhaRavi

    விஜய்யை அரசியல் களத்திற்கு அழைப்பதாக ட்விட்டரில் கூறிய கமல்ஹாசனுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KamalHaasan #Vijay #VijayPolitics
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக டுவிட்டர் மூலம் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

    விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?’ என்கிற கேள்விக்கு பதில் அளித்த கமல் ’எனது அனைத்துத் தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்தமான தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறினார்.

    இது அரசியல் அரங்கில் பரபரப்பான பேச்சாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் செல்போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செல்போன் குறுந்தகவல் மூலமாகவும் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ள விஜய் ‘தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாராம்.

    கமல், ரஜினிக்கு அடுத்தபடியாக அரசியலில் விஜய் களமிறங்குவார் என ஒரு யூகம் கிளம்பியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் வருகைக்கு அடித்தளம் போட்டார் விஜய். ஆனால் சில அரசியல் நிர்ப்பந்தங்களால் அவர் நடிக்கும் படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த முடிவை தள்ளிவைத்தார்.



    கடந்த ஆண்டு வெளியான மெர்சல் படத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதுபற்றி கூறும்போது, அந்த வசனம் சர்ச்சையாகும் என்று தெரிந்தே பேசியதாக குறிப்பிட்டார்.

    அவர் நடித்துக் கொண்டிருக்கும் சர்கார் படத்திலும் நடப்பு அரசியலை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ள விஜய் கிடைக்கும் வரவேற்பை வைத்து அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என காத்திருக்கிறார்.

    இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவை பெற விஜய்யை தன் பக்கம் இழுக்க கமல் முயற்சிக்கிறாரோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதன்மூலம் அரசியலில் கமலும், விஜய்யும் இணைந்து பயணிப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #KamalHaasan #Vijay #VijayPolitics

    ×