search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilaga vetri Kazhagam"

    • பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    • படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் செல்லும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம், மார்ச்.13-

    நடிகர் விஜய் தி கோட்(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68-வது படம் ஆகும்.

    தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெட்கட்புரபு முதன்முறையாக இணைந் துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் ஷக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    தி கோட் படத்தின் படப் பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுககப்பட உள்ளது.

    கிளைமேக்ஸ் காட்சிகள் முதலில் இலங்கையில் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த காட்சிகள் திருவனந்த புரத்தில் எடுக்கப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் வருகிற 18-ந்தேதி கேரளா வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் காரியவட்டத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதா னம், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அவரது வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

    சினிமா படப்பிடிப் பிற்காக நடிகர் விஜய் முதன் முறையாக திருவனந்த புரத்துக்கு வர உள்ளார். படப்பிடிப்புக்காக திருவ னந்தபுரம் வரும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களை யும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ கட்சியை தொடங்கியுள்ளார்.
    • இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.


    இதைத்தொடர்ந்து, திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.
    • பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

    விஜய் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    கட்சியின் பெயரை கூறி தொண்டர்கள் வீடு வீடாக சென்று இனிப்பு வழங்கி அறிமுகம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    அடுத்த கட்டமாக விஜய் கட்சியின் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.

    இந்நிலையில் கட்சி யின் சின்னம் பற்றி கட்சி தலைவர் விஜய் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கட்சி சின்னம் பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக ஆலோசனை செய்து சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு 5 சின்னம் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக பெண்களை கவரும் வகையில் கட்சி சின்னம் தேர்வு செய்யப் பட்டு தேர்தல் கமிஷனுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • பொதுமக்களிடம் இனிப்பு வழங்கி கட்சியின் பெயரை சொல்லி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
    • மாநிலம் முழுவதும் பரபரப்பு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தொண்டர்களால் ஒட்டப்பட்டன.

    சென்னை:

    தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2-ந் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

    இதைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    மாநிலம் முழுவதும் பரபரப்பு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தொண்டர்களால் ஒட்டப்பட்டன.

    இந்நிலையில் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். கிராமங்களிலும் நகர் புறங்களிலும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இனிப்பு வழங்கி கட்சியின் பெயரை சொல்லி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    சென்னையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக அம்பத்தூரில் கண்தான முகாம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, வில்லிவாக்கம், கே.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய்யின் அடுத்த அறிவிப்பை எதிர்பார்த்து உற்சாகத்தில் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

    • நடிகர் பாலா பல சேவைகளை செய்து வருகிறார்.
    • மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ வழங்கினார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார். மருத்துவ வசதி இல்லாமல் இருக்கும் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையும் வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் நடிகர் பாலாவிடம் விஜய் கட்சி தொடங்கியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "விஜய் சார் பீக்கில் இருப்பவர், நான் வீட்டில் இருப்பவன். விஜய் சார் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. அரசியலில் சேரும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. எனக்கு பதவி ஆசை இல்லை. அந்த அளவிற்கு மூளையும் இல்லை.


    எனக்கு சேவை மட்டும் போதும். அரசியலில் தாக்கு பிடிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. நான் பத்து ஆம்புலன்ஸ் தருவதாக கூறினேன், அதில் ஐந்து முடித்துவிட்டேன் மீதியையும் கொடுத்துவிடுவேன். இது முடித்துவிட்டு இன்னொரு இலக்கு இருக்கிறது அதை நோக்கி பயணிப்பேன். இதில் எந்த விதமான அரசியல் நோக்கம் இல்லை, அன்பின் ஏக்கம் மட்டுமே இருக்கிறது" என்று கூறினார்.


    • நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
    • எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளதாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

    வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    • நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
    • 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


    இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் டி. ராஜேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அரசியல் என்பது பொது வழி அந்த பொது வழியில் யார் வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ண விரும்பவில்லை விமர்சனம், நான் கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம்" என்று பேசினார்.

    • நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' கட்சியை தொடங்கியுள்ளார்.
    • இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


    இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் சமுத்திரகனி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரை உலகில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள்பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன் பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும்.. உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துகள் சகோதரா" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • கட்சி பெயர் முடிவாகி விட்ட நிலையில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெளிவுப்படுத்த விஜய் விரும்புகிறார்.
    • 2026-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமையாக செய்வதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

    சென்னை:

    தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் விஜய் மக்கள் நலப்பணிகளில் தனது ரசிகர்களை ஈடுபடுத்தி வந்தார். இதற்காக அவர் "விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் ஏற்கனவே அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார்.

    தமிழ்நாடு விஜய் ரசிகர்கள் இந்த அமைப்பு மூலம் மக்கள் நலப்பணிகளை செய்து வந்தனர். இந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற அவர் முடிவு செய்தார்.

    கடந்த சில மாதங்களாக இதற்காக அவர் பல்வேறு பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் கள நிலவரம் பற்றிய ஆய்வு ஒன்றையும் அவர் மேற்கொண்டார். பிறகு தனது விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தினார்.

    அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நேற்று அவர் புதிய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார். அவர் தொடங்கிய கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என்று பெயரிட்டுள்ளார். நேற்று மதியம் தேர்தல் ஆணையத்திலும் இந்த புதிய கட்சியை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

    பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று நடிகர் விஜய் தனது திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய கட்சியின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விஜய் சுட்டிக்காட்டி உள்ளார்.

    கட்சியின் கொள்கைகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன் வைத்து அரசியல் பயணம் தொடங்கும் என்றும் நேற்று நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தார்.


    அரசியலில் ஈடுபட போவதாகவும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் கூறியிருக்கிறார். தற்போது அவர் கைவசம் உள்ள படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளன. அதன் பிறகு நடிகர் விஜய் தீவிரமாக தேர்தல் களத்துக்கு வருவார் என்று தெரியவந்துள்ளது.

    கட்சி பெயர் முடிவாகி விட்ட நிலையில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெளிவுப்படுத்த விஜய் விரும்புகிறார். மேலும் கட்சிக்காக வலுவான சட்ட விதிகளை உருவாக்கும் முயற்சிகளிலும் மேற்கொண்டு உள்ளார். திராவிட கழகங்கள், இஸ்லாமிய கட்சிகள், தலித் கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் விஜய் கட்சியின் கொள்கைகள் அமையும் என்று தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே கட்சி கொடியை வடிவமைத்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் திட்டத்தையும் நடிகர் விஜய் வைத்துள்ளார். கட்சி கொடியை வடிவமைக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துகளை கேட்டாலும் விஜய்யின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்று அவரது கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    கட்சி கொள்கை, கட்சி கொடி போன்றவற்றை வெளியிட்ட பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தையும் நடிகர் விஜய் வைத்துள்ளார். வருகிற ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் தொடங்குவார் என்று தெரிகிறது. நடிகர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை வரையறுத்து வருகிறார்கள். 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் விஜய்யின் சுற்றுப்பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2011-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் விஜய் தனது ரசிகர்கள் கூட்டத்தை திரட்டினார். மீனவர்களுக்கு ஆதரவாக நடந்த அந்த கூட்டம் திராவிட கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் இருந்தது. அதன் பிறகு விஜய் அந்த அளவுக்கு தனது ரசிகர்களை எந்த இடத்திலும் கூட்டவில்லை.

    தற்போது அரசியலுக்கு வந்து இருப்பதால் ரசிகர்கள், பொதுமக்களை ஒரே இடத்தில் திரட்டி மிக பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அந்த முதல் பொதுக்கூட்டம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் விஜய் கருதுகிறார். இதற்காக தனி குழு ஒன்று திட்டமிட்டு வருகிறது.

    ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டும் அந்த மாநாடு வழக்கமாக திராவிட கட்சிகள் நடத்தும் மாநாடு போல அமையாமல் மாறுபட்ட வகையில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விஜய் கருதுகிறார். குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்.

    அந்த வகையில் திருச்சி அல்லது கடலூரில் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் விரும்புகிறார். இந்த 2 நகரங்கள் தவிர வேறு ஏதாவது இடத்தில் முதல் மாநாட்டை நடத்தலாமா? என்றும் ஆலோசனை நடந்து வருகிறது.

    முதல் மாநாட்டுக்கான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 2026-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமையாக செய்வதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

    அரசியலில் அவரது ஒவ்வொரு நகர்வும் "கப்பு முக்கியம் பிகிலு" என்று அவர் ஒரு படத்தில் உச்சரிக்கும் வசனத்தை பிரதிபலிப்பது போல அமைந்துள்ளது.

    • மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறார்.
    • 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


    இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய கட்சியின் பெயரில் தவறு இருப்பதாக வைரல் தமிழ் ஆசிரியர் கதிரவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 'தமிழக வெற்றி கழகம்' என்றில்லாமல் 'தமிழக வெற்றிக் கழகம்' என வரவேண்டும் என்று விளக்கமளித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.


    • அரசியலில் வெற்றி பெற ரசிகர்களின் பலம் மட்டும் போதாது.
    • ‘‘நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா..; அப்புறம்... என் பேச்ச நானே கேட்கமாட்டேன்னு’’ வேற சொல்லி இருக்காரு.

    புலி வருது... புலி வருது... என்று கடைசியில் வந்தேவிட்டது...!

    ஆம்... தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் 'தளபதி' விஜய், ''தமிழக வெற்றி கழகம்'' என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் குதித்துவிட்டார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கு அரசியல் ஆசை இருந்ததை மறுக்க முடியாது. தனது படங்களில் 'பஞ்ச் டயலாக்' மூலம் அவ்வப்போது அவர் அதை வெளிப்படுத்த தயங்கியது இல்லை. அவரது ரசிகர்களும் தேர்தல்களின்போது தங்கள் அரசியல் ஈடுபாட்டை காட்டி வந்துள்ளனர்.

    இதுவரை 'டிரெய்லராகவே' இருந்து வந்த அவர்களுடைய அரசியல் ஆசை இப்போது, புதிய கட்சியின் வடிவில் முழுமையாக வெளியாகி இருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் வரை நடிகராக இருந்த விஜய் நேற்று முதல் அரசியல் தலைவர் ஆகி இருக்கிறார்; அவரது ரசிகர்கள் தொண்டர்கள் ஆகி இருக்கிறார்கள்.

    இந்தியாவில், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கி ஜெயித்தவர்கள் 2 பேர்தான், ஒருவர் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., மற்றொருவர் ஆந்திராவில் என்.டி.ராமராவ். ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர்தான் என்ற போதிலும் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி அந்த கட்சியை வளர்த்தெடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்தவர்.

    இவர்கள் தவிர திரைத்துறையைச் சேர்ந்த எத்தனையோ பேர் கட்சி தொடங்கி அரசியலில் மூழ்கி காணாமல் போய் இருக்கிறார்கள். சிலர் பாதி கிணறு, முக்கால் கிணறு தாண்டியதோடு சரி. இன்னும் சிலர் ''சீச்சீ இந்த பழம் புளிக்கும்'' என்று ஓடி இருக்கிறார்கள். மேலும் சிலர் சூடுகண்ட பூனையாக கடையை சாத்திவிட்டு, ''தெரிந்த தொழிலையே செய்வோம்'' என்று நடையை கட்டி இருக்கிறார்கள்.

    மேற்கண்ட அத்தனை பேருக்கு கிடைத்த அனுபவங்களையும் நன்கு அறிந்தே, நிதானமாகவும், தெளிவாகவும் விஜய் அடியெடுத்து வைத்து இருக்கிறார்.

    விஜய் யாரை எதிர்க்கப்போகிறார்? அவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்? என்பது மக்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதுவரை எல்லோருக்கும் வேண்டப்பட்டவராக-யாரையும் எதிர்க்காதவராக இருந்து வந்திருக்கலாம்.

    அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கமுடியாது? இருக்க நினைத்தால் கட்சியை வளர்க்க முடியாது. இது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

    கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க.வின் கொள்கைகள், அண்ணாயிசம் பற்றியெல்லாம் எம்.ஜி.ஆர். பேசிய போதிலும், தி.மு.க.வை எதிர்ப்பதுதான் அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கையாக இருந்தது; இப்போதும் இருக்கிறது. இதனால்தான் தி.மு.க.வுக்கு எதிரான கருத்துகளை கொண்டவர்கள் எம்.ஜி.ஆர். கட்சியின் பக்கம் நின்றனர்.

    கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அங்கே-இங்கே என்று தாவிக் கொண்டிருக்கும் கட்சிகளெல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிடுகின்றன.

    இதையெல்லாம் கூர்ந்து கவனித்து வரும் விஜய், தனது கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

    சட்டசபை தேர்தலை குறிவைத்தே ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்கும் விஜய் ''வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது'' என்று அறிவித்து இருக்கிறார். தேர்தல் பணியாற்ற அவரது தொண்டர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும்போது, விஜய்யின் இந்த முடிவு அவர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை தரக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. களத்தில் குதிப்பது என்று முடிவு செய்துவிட்டபின் தள்ளிப்போடுவது தொண்டர்களின் வேகத்தையும், உற்சாகத்தையும் குறைப்பதாக அமைந்துவிடும். ஏனெனில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது.

    1972 அக்டோபர் 17-ந்தேதி அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். அடுத்த ஆறு மாதங்களில் அதாவது 1973 மே 20-ந்தேதி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்பாளரை களம் இறக்கி மகத்தான வெற்றி கண்டது இங்கு நினைவு கூரத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று விஜய் அறிவித்து இருப்பதால், அந்த தேர்தலில் அவரது கட்சியின் நிலை என்னவாக இருக்கும்? அவரது தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? என்பதும் தற்போதைய நிலையில் தெரியவில்லை. போகப் போகத்தான் தெரியும்.

    இதுவரை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள் பணியாற்றிய அவரது ரசிகர்கள், இப்போது கட்சி தொண்டர்களாகி மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறார்கள். அவர்களுடைய நற்செயல்களால் வரும் பெருமைகள் அனைத்தும் விஜய்யை வந்து சேரும். அதேசமயம், ஏதாவது குறைபாடுகள் என்றாலும், அதனால் வீசப்படும் கணைகளையும் அவர்தான் தாங்கிக்கொள்ள நேரிடும். இதையெல்லாம் நன்கு உணர்ந்திருக்கும் 'தளபதி' விஜய் தனது 'சிப்பாய்களை' நல்வழியில் நடத்திச்செல்வார் என்று உறுதியாக நம்பலாம்.

    அரசியலில் வெற்றி பெற ரசிகர்களின் பலம் மட்டும் போதாது. ரசிகர்கள் வட்டத்தை தாண்டி சமானிய மக்களின் ஆதரவையும் பெற்றால்தான் கோட்டைக்கு செல்ல முடியும். தனது செயல்கள்-அணுகுமுறைகள் மூலம் மக்கள் மனங்களை வெல்லும் திட்டங்களை அவர் வைத்திருக்கக்கூடும்.

    சினிமாவில் விஜய் 'புலி'தான் என்பதில் சந்தேகமே இல்லை. அவரது படங்கள் நல்ல வசூலை கொடுக்கின்றன.

    வெள்ளித்திரையில் உச்சத்தில் இருக்கும் அவர், அரசியலில் குதித்து இருப்பதால், சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக அறிவித்து இருப்பது எதிர்பாராத ஒன்றுதான்.

    ஏனெனில், முதலமைச்சர் ஆகும் வரை எம்.ஜி.ஆர்., சினிமா-அரசியல் என்ற இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்தார். முதலமைச்சர் பதவி, சினிமாவில் நடிக்க அனுமதிக்காததால்தான் வேறு வழியில்லாமல் அவர், திரையுலகத்தை விட்டு விலகினார். அப்படி இருக்கும் போது விஜய், சினிமாவுக்கு 'பேக்கப்' சொல்ல தீர்மானித்து இருப்பது திரைத்துறையினருக்கு ஒருபுறம் ஆச்சரியம் அளிப்பதாகவும், மற்றொருபுறம் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

    என்றாலும் அவர் நன்றாக யோசித்தே முடிவு எடுத்து இருப்பார் என்று நம்புவோம். ஏன்னா?... ''நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா..; அப்புறம்... என் பேச்ச நானே கேட்கமாட்டேன்னு'' வேற சொல்லி இருக்காரு. எனவே அவரது இந்த முடிவு தீர்க்கமானதாகத்தான் இருக்கும்.

    ஓகே... சினிமா புலி விஜய், அரசியலிலும் தான் புலிதான் என்பதை நிரூபிப்பாரா? அல்லது....; வேண்டாம்..., வேண்டாம்.... பொறுத்திருந்து பார்ப்போம். 

    • ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர்.
    • சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

    சின்னசேலம்:

    நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம், நகரம் சார்பில் புதிய பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து நைனார்பாளையம் முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கிடா வெட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர்.

    இதில் ஏராளமான ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கிடா விருந்தை மகிழ்ச்சியுடன் சுட சுட சாப்பிட்டனர். இந்த விருந்து சின்னசேலம் ஒன்றிய தலைவர் செல்வசுதா, நகரத் தலைவர் கில்லி செல்வம், ஒன்றிய அமைப்பாளர் மகேந்திரன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது மேலும் கட்சி நிர்வாகிகளிடையே 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் ஏராளமான ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

    ×