என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
'தி கோட்' பட கிளைமேக்ஸ் காட்சிக்காக கேரளா செல்லும் விஜய்
- பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
- படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் செல்லும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம், மார்ச்.13-
நடிகர் விஜய் தி கோட்(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68-வது படம் ஆகும்.
தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெட்கட்புரபு முதன்முறையாக இணைந் துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் ஷக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தி கோட் படத்தின் படப் பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுககப்பட உள்ளது.
கிளைமேக்ஸ் காட்சிகள் முதலில் இலங்கையில் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த காட்சிகள் திருவனந்த புரத்தில் எடுக்கப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் வருகிற 18-ந்தேதி கேரளா வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் காரியவட்டத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதா னம், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அவரது வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
சினிமா படப்பிடிப் பிற்காக நடிகர் விஜய் முதன் முறையாக திருவனந்த புரத்துக்கு வர உள்ளார். படப்பிடிப்புக்காக திருவ னந்தபுரம் வரும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களை யும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்