search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thank You"

    • நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
    • எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளதாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

    வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    • நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது.
    • கலைவாணர் அரங்கில் கடந்த 5- ந் தேதி நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 5- ந் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் சித்தலூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், தேவ பாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி, வடதொ ரசலூர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் துரைசாமி, திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் வில்வபதி ஆகியோரும், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளிலிருந்து கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, கச்சிராயபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, நைனாக்கு ப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகிய ஆசிரியர்களுக்கும், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா பள்ளி முதல்வர் சந்திரா என 9 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ராதா கிருஷ்ணன் விருதுகளை வழங்கி, வெள்ளிப் பதக்கம் அணிவித்து தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கி கவு ரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, இவ்விருது பெற்ற கள்ள க்குறிச்சி மாவட்ட த்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்களும் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்கு மாரை நேரில் சந்தித்து சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண ப்பிரியா, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ஆரோக்கியசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஜோதிமணி, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) துரைராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வறட்சி நிவாரணம் அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • யூனியன் மானேஜர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சன்முகப் பிரியா ராஜேஷ் தலைமை யில் வட்டார வளர்ச்சி அலு வலர் அன்புக்கண்ணன் (கிராம ஊராட்சிகள்) ஆணையாளர் ஜானகி ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. யூனியன் மானே ஜர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:- லட்சுமி (தி.மு.க.):- கீழத்தூவல் கண்மாயை தூர்வார வேண்டும்.

    சசிகலா(அ.தி.மு.க.):- எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராமத்தில் சத்துணவு கூடம் இடிந்து கிடக்கிறது. புதிதாக சத்துணவுகூடம் கட்டித்தர வேண்டும். காமாட்சிபுரத்திலிருந்து சடையனேரி செல்லும் சாலையை தார்சாலையாக மாற்றித் தரவேண்டும்.

    அர்ச்சுனன் (வளநாடு, அ.தி.மு.க.):- மட்டியரேந்தல், தாழியரேந்தல் கிராமத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே மக்கள் போராட்டம் நடத்திய போது குடிநீர் வந்தன. அதன் பின்பு காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை. மக்களுக்கு முறையாக குடிநீர் கிைடக்கிறதா? என பார்வையிட குடிநீர் வாரிய அதிகாரிகள் வருவதில்லை. மக்கள் கவுன்சிலரிடம் புகார் செய்கிறார்கள். நாங்கள் ஆைணயாளரிடம் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை. செலவை அங்கீக ரிக்கவே கூட்டம் நடத்து கிறீர்கள்.

    சண்முகப்பிரியா ராஜேஷ் (சேர்மன்):- ராமநாதபுரம் மாவட்ட வறட்சி நிவாரணத்திற்கு ஏக்கருக்கு ரூ.5400 அறிவித்த முதல்-அமைச்சருக்கும், வறட்சி நிவாரணம் வழங்க கோரி சட்டமன்றத்தில் குரல் கொடுத்த காதர் பாட்சா முத்துராமலிங்கத் திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    • நாகையில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
    • முதல்- அமைச்சர், நகராட்சி நிர்வாகம், அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்கு நன்றி.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

    இது குறித்து ஷாநவாஸ் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் இது குறித்து பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன்.

    இந்நிலையில் தமிழக முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட 10 முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இதை எழுதிக் கொடுத்தேன்.

    நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 30-ந்தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கே.என்.நேரு நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர், நகராட்சி நிர்வாகம் அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்குஷா நவாஸ் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    ×