search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில், புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சருக்கு, எம்.எல்.ஏ. நன்றி
    X

    அமைச்சர் கே.என்.நேருவுடன் ஷாநாவஸ் எம்.எல்.ஏ.

    நாகையில், புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சருக்கு, எம்.எல்.ஏ. நன்றி

    • நாகையில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
    • முதல்- அமைச்சர், நகராட்சி நிர்வாகம், அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்கு நன்றி.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

    இது குறித்து ஷாநவாஸ் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் இது குறித்து பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன்.

    இந்நிலையில் தமிழக முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட 10 முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இதை எழுதிக் கொடுத்தேன்.

    நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 30-ந்தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கே.என்.நேரு நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர், நகராட்சி நிர்வாகம் அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்குஷா நவாஸ் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    Next Story
    ×