search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வறட்சி நிவாரணம் அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி
    X

    வறட்சி நிவாரணம் அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி

    • வறட்சி நிவாரணம் அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • யூனியன் மானேஜர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சன்முகப் பிரியா ராஜேஷ் தலைமை யில் வட்டார வளர்ச்சி அலு வலர் அன்புக்கண்ணன் (கிராம ஊராட்சிகள்) ஆணையாளர் ஜானகி ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. யூனியன் மானே ஜர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:- லட்சுமி (தி.மு.க.):- கீழத்தூவல் கண்மாயை தூர்வார வேண்டும்.

    சசிகலா(அ.தி.மு.க.):- எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராமத்தில் சத்துணவு கூடம் இடிந்து கிடக்கிறது. புதிதாக சத்துணவுகூடம் கட்டித்தர வேண்டும். காமாட்சிபுரத்திலிருந்து சடையனேரி செல்லும் சாலையை தார்சாலையாக மாற்றித் தரவேண்டும்.

    அர்ச்சுனன் (வளநாடு, அ.தி.மு.க.):- மட்டியரேந்தல், தாழியரேந்தல் கிராமத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே மக்கள் போராட்டம் நடத்திய போது குடிநீர் வந்தன. அதன் பின்பு காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை. மக்களுக்கு முறையாக குடிநீர் கிைடக்கிறதா? என பார்வையிட குடிநீர் வாரிய அதிகாரிகள் வருவதில்லை. மக்கள் கவுன்சிலரிடம் புகார் செய்கிறார்கள். நாங்கள் ஆைணயாளரிடம் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை. செலவை அங்கீக ரிக்கவே கூட்டம் நடத்து கிறீர்கள்.

    சண்முகப்பிரியா ராஜேஷ் (சேர்மன்):- ராமநாதபுரம் மாவட்ட வறட்சி நிவாரணத்திற்கு ஏக்கருக்கு ரூ.5400 அறிவித்த முதல்-அமைச்சருக்கும், வறட்சி நிவாரணம் வழங்க கோரி சட்டமன்றத்தில் குரல் கொடுத்த காதர் பாட்சா முத்துராமலிங்கத் திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×