search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா செய்திகள்"

    • அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 படத்தில் நடித்து வருகிறார்.
    • கன்னட நடிகையான ருக்மணி வசந்த் இப்படத்தின் கதாநாயகி.

    சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் வெற்றியை அடுத்து பல முன்னணி இயக்குநர்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். அமரன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய அமரன் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    அமரன் படத்தில் ஒரு ஆர்மி கமேண்டோவாக நடித்துள்ளார். இதற்காக அவர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டு மஸ்த்தாக வைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

    அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 படத்தில் நடித்து வருகிறார்.இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்த நிலையில்.


     


    இன்று பாண்டிசேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது. கன்னட நடிகையான ருக்மணி வசந்த் இப்படத்தின் கதாநாயகி. சமீபத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்து வெளியாகிய 'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தில் இவர் நடித்தார். இதனிடையே, SK23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


     


    • ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
    • சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஏ.ஆர். முருகதாஸ் ஒருவராக இருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படத்தில் உதவி இயக்குநராக ஆரம்ப காலத்தில் பணி புரிந்தார். பிறகு 2000 ஆம் ஆண்டில் அஜித் நடித்து வெளியான தீனா என்ற படத்தை இயக்கினார்.

    2005 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கினார். இந்த படம் சூர்யாக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கஜினி படம் ஹிட்டானதை அடுத்து 2008 ஆம் ஆண்டு அவரின் திரையுலக பயணத்தை பாலிவுட் பக்கம் திருப்பினார்.

    இவர் இயக்கிய கஜினி படத்தை அமீர்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்தார். இந்தியிலும் மிக முக்கியமான படமாக இது பேசப்பட்டது. வசூலில் உச்சமடித்தது இந்தி கஜினி. மேலும் வசூலில் ரூ. 100 கோடி தாண்டிய முதல் இந்தி படம் இதுவே.

    2011 ஆம் ஆண்டு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து 7ஆம் அறிவு படத்தை அவர் இயக்கினார். 2012 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கினார். நடிகர் விஜய்-க்கு கம்பேக் கொடுத்த படங்களில் துப்பாக்கி முதன்மை இடம் பிடித்தது.

    தமிழ் சினிமாவின் அதிக வசூல் பட்டியலில் துப்பாக்கி இடம் பிடித்தது. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சர்கார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார்.

    இந்த வரிசையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.இது சிவகார்த்திகேயனின் 23-வது படம் ஆகும். இந்த படம் தொடர்பான தவவல்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் மற்றொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். இவர் இயக்க போகும் இந்தி படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் பட்ஜெட் 400 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சஜித் நதியத்வாலா இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் சல்மான் கான் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    • உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது.
    • இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது

    மலையாள சினிமாவின் சிறந்த முன்னணி இயக்குனரில் ஒருவர்தான் பிளெஸ்சி ஐப் தாமஸ். இவரை அனைவரும் ப்ளெஸி என்று தான் திரைத்துறையில் அழைப்பர். இயக்குனர் பிளெஸ்சி இயக்கிய காழ்ச்சா திரைப்படம் 2004-ல் வெளியானது. இதுவே இவருக்கு முதல் படம். மம்முட்டி, பத்மப்ரியா நடித்த இந்த படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 3 ஃபில்ம் ஃபேர் சவுத் விருதுகளை வென்றது காழ்ச்சா படம். இயக்குனர் பிளெஸ்சிக்கு காழ்ச்சா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.

    அதற்கு பிறகு 2005-ல் அடுத்த படமான 'தன்மாத்ர' படத்தை இயக்கினார். இது பத்மராஜனின் "ஓர்மா" சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிளெஸ்சி எழுதி இயக்கி 150 நாட்கள் ஓடிய திரைப்படம். தன்மாத்ர சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என 5 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றது. 53-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது. 2011-ல் 'பிரணயம்'படத்தை பிளெஸ்சி இயக்கினார். இத்திரைப்படம் அந்த அளவுக்கு வணிக ரீதியாக பெருமளவு வசூலிக்கவில்லை.

    இவர் எடுத்த "100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம் "ஆணவப் படம் 2018 வெளியானது. உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது. அந்த ஆவணப் படத்திற்கான நீளம் 48 மணி நேரம் 10 நிமிடங்கள். இந்நிலையில் இயக்குனர் பிளெஸ்சி தனது அடுத்த படமாக 'ஆடுஜீவிதம்'படத்தை இயக்கியுள்ளார். மார்ச் 28 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ப்ருத்விராஜ் மற்றும் அமலா பால் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இப்படம். பிளெஸ்சி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது. ஏர் ரகுமான், மோகன்லால், ப்ரிதிவிராஜ், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

     

     

     

     

    • தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன்-இல் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார்.
    • மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான “ரெபெல்” வெளியாக உள்ளது.

    ஜி.வி. பிரகாஷ் சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்து இருந்தார். கேப்டன் மில்லர் படத்திற்கு கூடுதல் போனசாக இருந்தது ஜி. வி. ப்ரகாஷின் இசை. மக்கள் அனைவராலும் பாராட்டு பெற்றது.

    இவர் இசையமைத்த வா வாத்தி, கருப்பு நெரத்தழகி, மார்க் ஆண்டனி மற்றும் அடியே படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்கள் மனதில் எப்போழுதும் கேட்டுக் கொண்டே இருக்கும். சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர்கான தேசிய விருதை பெற்றார்.

    இசையில் மட்டுமல்ல நடிப்பிலும் இவர் அசுரனாக வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளியான பேச்சுலர் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன்-இல் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான "ரெபெல்" வெளியாக உள்ளது.அரசியல் ஆக்சன் டிராமா கதைக்களம் கொண்ட இந்த படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார்.

    கேரளாவில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது. தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். பிரேமலு படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மமிதா பைஜூ இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மார்ச் 22-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.




     


    • கிராமத்து பின்னணி படங்களை முதன்மையாக எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் முத்தையா
    • அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார்.

    கிராமத்து பின்னணியுடைய படங்கள் மிகவும் அரிதாகி விட்டன. இதை எடுக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே எனலாம். கிராமத்து பின்னணி படங்களை முதன்மையாக எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் முத்தையா. இவர் எடுத்த கொம்பன்,குட்டி புலி,விருமன், போன்ற படங்களே இதற்கு சாட்சி.

    கார்த்தி நடிப்பில் வெளிவந்த கொம்பனும்,விருமனும் மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆர்யா நடித்து வெளியான 'காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி இருந்தார்.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நடிகர் பரத் வில்லனாக நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்கள் நடித்தும் பரத்திற்கு எந்த நல்ல படமும் அமையவில்லை. முத்தையா படத்தில் வரும் வில்லனுக்கு எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு.

    அதனால் நல்ல கிராமத்து பின்னணியில் அமையவுள்ள இப்படத்தில் பரத்திற்கு நல்ல கம் பேக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

    • ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்கவிருக்கிறார்.
    • தற்பொழுது கார்த்தியின் 26வது படம் நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை '96' படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கவுள்ளனர்.

    சமீபத்தில் பிறந்தாள் கொண்டாடிய மாரி செல்வராஜை வாழ்த்தி பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலையத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படம் இயக்கவிருக்கிறார். அதில், கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் இப்படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல்களை பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளனர்.

    தற்பொழுது கார்த்தியின் 26வது படம் நலன் குமாரசாமியும் , 27 ஆவது படத்தை '96' படம் இயக்கிய ப்ரேம் குமார் இயக்கவுள்ளனர். தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். கைதி 2, சர்தார்2 போன்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

    கார்த்தியை வைத்து முன்னணி இயக்குநர்கள் படம் இயக்க இருப்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து அடுத்தாக துருவ் விக்ரம் வைத்து பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
    • இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

    மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.

    ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

    இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்வதில் ஆற்றல் பெற்றவர். சிங்கம், சாமி, யானை போன்ற படங்களே இதற்கு சாட்சி.

    ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமூத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன் பென்ச் ஃபில்ம்ஸ் மற்றும் zee ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "டோண்ட் வொரி டோண்ட் வொரி டா மச்சி" எனும் பாடல் வெளியாக உள்ளது.

    இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

    • நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார்.
    • படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது.

    இப்படத்தில் தனுஷ்,நாகார்ஜூனா,ராஷ்மிகா மந்தனா,சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளனர்.

    தனுஷ் இதில் சிவன் பார்வதி படத்தின் முன் நின்றிப்பது போல் போஸ்டர் வடிவமைத்து இருக்கின்றனர். இந்த படத்தில் தனுஷ் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது
    • பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது.

    மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் பிரேமலு படம் வெளியானது. மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். சென்னையில் இப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு உருவாகியது.  உலகளவு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 100 கோடியை தாண்டியது பிரேமலு. மலையாள திரையுலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் பிரேமலு 5-வது இடத்தில் உள்ளது. இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது. மலையாளத்தில் வரவேற்பை தொடர்ந்து பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் தமிழிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். மார்ச் மாத இறுதியில் தமிழில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்
    • இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்.ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் கதை ஒரு சமூக பிரச்சனையை பேசக் கூடிய படமாக இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    • தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

    பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் இன்று தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

     தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி பரவியது. 77-வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது விழாவில் சிகப்பு கம்பளத்தின் மீது பளபளக்கும் சேலையை அணிந்திருந்த போது அவர் தனது வயிற்றுப்பகுதியை மறைத்ததாக கூறப்படுகிறது. தீபிகா படுகோனே தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ள செய்தி பரவியதும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் தீபிகா தாய்மை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். "நிச்சயமாக ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறோம்" என்று அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×