search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூர்யா"

    • சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

    சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.

    சில நாட்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

    காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் வீடியோவில் ரத்தத்துடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் துப்பாக்கியேந்தி மாஸ் காட்டும் லுக்கில் சூர்யா நடந்துவருவது விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் தந்த வைபை மீண்டும் தருவதாக உள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஊட்டியில் தொடங்கியுள்ளது. அங்கு 15 நாட்கள் படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.
    • மொத்தம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.

    திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 44 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.

    தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 45-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.

    மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், "1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது."

    "25 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள்."

    "கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கேன்."

    "என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்," என்று கூறினார்.


    • இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே என ஒரு கூடத்தின் தலைவன் போருக்கு செல்வதற்கு முன் வெறியோடு பாடும் பாவனையில் உள்ளார் சூர்யா.

    இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது.

    பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • என்னை இந்த வழக்கில் தொடர்புப்படுத்தி அவரது கணவருக்கும் எனக்கு தொர்பு உள்ளதாக ஜெயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.
    • மீண்டும் ராஜலட்சுமியிடம் எனது சொத்தில் ஒரு பகுதியை அடமானம் வைத்து ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டேன்.

    மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு பள்ளி மாணவர் கடத்தப்பட்ட வழக்கு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி குஜராத்தில் தனது கணவர் குடியிருந்து வரும் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் தனது சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என தற்கொலைக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டானின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டு மரண வாக்குமூலம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த மரண வாக்குமூலத்தில் எழுதியிருப்பதாவது:-

    எனது பெயர் சூர்யா என்றும், மதுரையில் கடந்த 11-ம் தேதி மாணவன் கடந்தப்பட்ட வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தனக்கு அந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதில் சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்ததுகூட இல்லை. என்னை ஏன் இந்த வழக்கில் ராஜலட்சுமி சம்பந்தபடுத்தினார் என்று புரியவில்லை. என்னை இந்த வழக்கில் தொடர்புப்படுத்தி அவரது கணவருக்கும் எனக்கு தொர்பு உள்ளதாக ஜெயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.

    அவரது கணவர் பெயர் கூட எனக்கு தெரியாது. கடந்த ஆண்டு ஐகோர்ட்டு மகாராஜா மூலமாகதான் ராஜலட்சுமி எனக்கு அறிமுகம் ஆனார். அவர்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் வட்டி தொழில் உள்ளது. ராஜலட்சுமி வட்டி தொழில் செய்பவர். எனது பெயர் உபயோகித்து ராஜலட்சுமியிடம் ஐகோர்ட்டு மகாராஜா ரூ. 60 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஓடிவிட்டார்.

    அந்த பணம் குறித்து எனது கணவரிடம் கூறுவதாக ராஜலட்சுமி தெரிவித்ததால் மகாராஜா வாங்கிய ரூ. 60 பணத்தை நான் தருகிறேன் என்று ஒப்புக் கொண்டதன் பேரிலும் மேலும் எனக்கு கடன் பிரச்சனை இருந்ததால், மீண்டும் ராஜலட்சுமியிடம் எனது சொத்தில் ஒரு பகுதியை அடமானம் வைத்து ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டேன்.

    அந்த பணத்திற்கு வட்டி எடுத்துக் கொண்டு பணத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், ஐகோர்ட் மகாராஜா வாங்கிய ரூ. 60 லட்சம் மற்றும் நான் வாங்கிய ரூ. 15 லட்சம் ஆகியவற்றை வட்டியும் முதலுமாகராஜலட்சுமி தனது மாமன் மகன் ஒருவரை அழைத்துவந்து 1.35 கோடி தரவேண்டும் என மிரட்டியதுடன் எனது பியூட்டி பார்லரையும் எழுதி வாங்கி கொண்டார்.

    அதன் பின்பும் எனது பியூட்டி பார்லர் 80 லட்சம் வரும் மீதம் உள்ள பணத்தை கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் எனது வாழ்வாதாரம் இழந்து கணவர் மற்றும் குழந்தைகளை இழந்து பெங்களூர் சென்று படிக்க நினைத்தேன். தொடர்ச்சியாக என்னை பணம் கேட்டு சித்திரவதை செய்தார்கள். என்னிடம் உள்ள அனைத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றும் நோக்கில் தற்போது சிறுவன் கடத்தல் வழக்கில் எனது பெயரை ராஜலட்சுமி சேர்த்துள்ளார். இதில் யார் ஈடுபட்டார்கள் என்றும், அவர்களது பெயர் கூட எனக்கு தெரியாது. வேண்டுமென்றால் எனது செல்போன் உரையாடலை சேகரித்து சோதனை செய்து பாருங்கள்.

    மேலும் இறந்து போன மைதிலி ராஜலட்சுமி கணவர் ராஜ்குமாருக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

    அப்படி புகார் தெரிவித்திருக்கும் பட்சத்தில் எனது செல்போன உரையாடலை ஆய்வுபடுத்துங்கள், ஐகோர்ட்டு மகாராஜா ஜெயிலில் இருந்து ஓடிபோன பிறகு ராஜலட்சுமியுடன் தொடர்பில் இருந்தார். ராஜலட்சுமியை பார்க்க கடந்த ஏப்ரல் 20 முதல் 25 வரை ராஜட்சுமி வீட்டிற்கு அடிக்கடி மகாராஜா வந்தார். அதுபற்றி சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தால் உண்மை தெரிந்துவிடும்.

    மேலும் குழந்தை கடந்தல் எவ்வளவு பெரிய குற்றம் என்று எனக்கு தெரியும். எனக்கும் 2 குழந்தைகள் இருக்கு. குழந்தைகளை பிரிந்து வாழும் வலி என்ன என்று எனக்கு தெரியும். ஐயா நான் என் தவறை திருத்ததான் வெளியூர் சென்று படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைத்தேன். எனது கணவர் என் நன்னடத்தை பார்த்து மன்னித்து என்னை சேர்த்துக் கொள்வார். நான் குழந்தை கடத்தல் செய்தேன் என்று கூற ஆதாரம் வேண்டும். இன்று எனது கணவர் பெயர், எனது புகைப்படம் டிவியில் வந்துள்ளது.

    நாளை நான் குற்றமற்றவள் என்று நிருபிக்கப்பட்டால் எனது மானம், எனது கணவர் மானம் திரும்ப கிடைக்குமா ஐயா, ஏன்றாவது சேர நினைத்த எனது வாழ்க்கை திரும்ப கிடைக்குமா ஐயா.. நீதி வேண்டும் ஸ்டாலின் ஐயா உங்கள் ஆட்சியை நான் பார்த்து வருகிறேன்... நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். நான் உங்கள் வீட்டு பெண்ணாய் இருப்பின் என்னை என்றாவது ஒருநாள் மேடையில் சூர்யா நிரபராதி என்று ஸ்டாலின் ஐயா மற்றும் உதயநிதி ஐயா சொல்லுங்கள்.

    எனது ஆத்மா ஸ்டாலின் ஐயா, உதயநிதி அண்ணாவை வாழ்த்தும். எனது கணவர் மிகவும் நல்லவர் அவரையும், குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள். எனது குழந்தையிடம் உனது தாய் நல்லவள் என்று கூறுங்கள் என அந்த மரண வாக்கு மூலத்தில் கூறிபிட்டுள்ளார்.

    • சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா.
    • வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடல் நாளைவெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

    கங்குவா படத்தின் முதல் பாடல் ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது. தற்பொழுது இப்பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பாடலை ஒற்றை வரியில் விவரிக்கின்றனர். அதில் சிங்கத்தின் கர்ஜனை, காட்டு தீ, வைப் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

    இதனால் இப்பாடலிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது.

    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடல் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

    கங்குவா படத்தின் முதல் பாடல் ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது. இதுதவிர, கங்குவா படத்தின் பேட்ச்ஓர்க் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்.
    • திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

    சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவாவின் முதல் பாடல் வரும் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
    • இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

     விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.

    அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படம் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.

    'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் வரவேற்பை பெற்றநிலையில், இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். 

    • புதுமுக தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
    • படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.

    கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை புறநானூறு படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் உலா வருகிறது.

    அதில், புறநானூறு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் அமரன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தையும் முடித்துவிட்டு, சுதா கொங்கராவின் 'புறநானூறு' படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் 2டி எஎண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில், தற்போது புதுமுக தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க உள்ளார் என்று தெரிகிறது. அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • சமீபத்தில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இந்திப்படங்களில் நடித்தார்.

    மும்பையில் பிறந்து வளர்ந்து, ஹிந்தி மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், இன்று கோலிவுட் உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் ஜோதிகா. இவர் கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாகவே தனது கணவரின் தயாரிப்பில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து தற்பொழுது பாலிவுட் உலகிலும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இந்திப்படங்களில் நடித்தார்.

    இந்நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த அம்பானி மற்றும் ராதிகா ஆகியோரின் திருமணத்தில், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தம்பதிகளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இந்த திருமண விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான், இயக்குனர் அட்லி, விக்னேஷ் சிவன், நயன்தாரா என்று இந்திய திரை உலகின் பெரும் நட்சத்திரங்கள் நேரில் பங்கேற்ற நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் பல துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    மேலும் இந்த விழாவில் பங்கேற்ற நடிகை ஜோதிகா, 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தின்போது தனது கணவர் சூர்யா அணிவித்த, இரண்டு அடுக்கு வைர மோதிரத்தை, அவர்கள் அன்பின் அடையாளமாக இந்த திருமணத்திலும் அணிந்து வந்திருந்தது வெகுவாக பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.


     



    அந்த விழாவின் போது சூர்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சூர்யா பட்டு வேட்டி சட்டையிலும் , ஜோதிகா பிங்க் நிற புடவையிலும் சூர்யாவுடன் இணைந்து மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவி"ஒன்றாய் இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா" சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
    • சூர்யாவை வைத்து இவர் இயக்கிய உன்னை நினைத்து இயக்கினார்.

    குடும்பங்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன். 'புதிய பாதை' படத்தில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணியாற்றியதை தொடர்ந்து, 1990-ம் ஆண்டு வெளியான 'புது வசந்தம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

    இந்த படத்தை தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார்.

    இதில் பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய உன்னை நினைத்து இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் விக்ரமன் கடைசியாக 2014ம் ஆண்டில் நினைத்தது யாரோ என்கிற படத்தை இயக்கினார். அதன்பிறகு, அவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், திரைப்படங்கள் இயக்கவில்லை.

    இந்நிலையில், இயக்குனர் விக்ரமன் உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், சந்தானம் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

    • தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.
    • இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஞானவேல்ராஜா சமீபத்தில் பங்கேற்ற நேர்காணலில் கங்குபா படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கங்குவா இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளதாகவும். கங்குவா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் துவங்கும் எனவும் , 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

    இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×