search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலா பால்"

    • கடந்த சில வாரங்களாகவே பிரித்விராஜ், படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
    • சிறப்பு காட்சியைப் பார்த்த தெலுங்கு திரைத்துறை இயக்குனர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.

    பிலெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், அமலா பால், சோபா மேனன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து, வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'ஆடுஜீவிதம்'.

    2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுஜீவிதம் நாவலைத் தழுவி இப்படத்தை இயக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைத்துள்ளார்.

    2018 ஆம் ஆண்டு படபிடிப்பை தொடங்கிய ஆடு ஜீவிதம் படக்குழுவினர், 2023 ஆம் ஆண்டில் படபிடிப்பு பணிகளை முடித்தனர். மலையாள சினிமாவில் ஆடுஜீவிதம் படமே மிக நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடந்த படமாகும்.

    கடந்த சில வாரங்களாகவே பிரித்விராஜ், படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரித்விராஜ் நேற்று தெலுங்கு திரைத்துறையின் முன்னணி இயக்குனர்களை ஆடுஜீவிதம் படத்தின் சிறப்பு காட்சிக்கு அழைத்து இருந்தார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆடுஜீவிதம் படத்தை தெலுங்கு மொழியில் விநியோக உரிமையைப் பெற்றது.

    சிறப்பு காட்சியைப் பார்த்த தெலுங்கு திரைத்துறை இயக்குனர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். ஆடுஜீவிதம் படத்தின் "ஓமானே" பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது.

    மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு படத்திற்கு பிறகு வெளியாகும் மலையாளப் படம் இதுவே. அதனால் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மேல் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது.
    • இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது

    மலையாள சினிமாவின் சிறந்த முன்னணி இயக்குனரில் ஒருவர்தான் பிளெஸ்சி ஐப் தாமஸ். இவரை அனைவரும் ப்ளெஸி என்று தான் திரைத்துறையில் அழைப்பர். இயக்குனர் பிளெஸ்சி இயக்கிய காழ்ச்சா திரைப்படம் 2004-ல் வெளியானது. இதுவே இவருக்கு முதல் படம். மம்முட்டி, பத்மப்ரியா நடித்த இந்த படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 3 ஃபில்ம் ஃபேர் சவுத் விருதுகளை வென்றது காழ்ச்சா படம். இயக்குனர் பிளெஸ்சிக்கு காழ்ச்சா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.

    அதற்கு பிறகு 2005-ல் அடுத்த படமான 'தன்மாத்ர' படத்தை இயக்கினார். இது பத்மராஜனின் "ஓர்மா" சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிளெஸ்சி எழுதி இயக்கி 150 நாட்கள் ஓடிய திரைப்படம். தன்மாத்ர சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என 5 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றது. 53-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது. 2011-ல் 'பிரணயம்'படத்தை பிளெஸ்சி இயக்கினார். இத்திரைப்படம் அந்த அளவுக்கு வணிக ரீதியாக பெருமளவு வசூலிக்கவில்லை.

    இவர் எடுத்த "100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம் "ஆணவப் படம் 2018 வெளியானது. உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது. அந்த ஆவணப் படத்திற்கான நீளம் 48 மணி நேரம் 10 நிமிடங்கள். இந்நிலையில் இயக்குனர் பிளெஸ்சி தனது அடுத்த படமாக 'ஆடுஜீவிதம்'படத்தை இயக்கியுள்ளார். மார்ச் 28 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ப்ருத்விராஜ் மற்றும் அமலா பால் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இப்படம். பிளெஸ்சி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது. ஏர் ரகுமான், மோகன்லால், ப்ரிதிவிராஜ், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

     

     

     

     

    • 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    மலையாள சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்லஸி இப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ப்ரிதிவிராஜ் சுகுமாரன் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    'தி கோட்ஸ் லைஃப்'என இப்படத்திற்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ப்ரித்திவிராஜ் 'நஜீப்' எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    சுனில் கே. எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் ப்ரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகியுள்ளது.

    • நடிகை அமலா பால் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
    • இவர் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

    சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.


    இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நண்பர்கள் உடன் ஜாலியாக சுற்றுலா செல்வதும் பாருக்கு செல்வதும் என கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.


    அமலா பால் இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலா பாலின் நெருங்கிய நண்பரான ஜனா தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • நடிகை அமலா பால் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்டவர்.

    சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.


    அமலா பால் பதிவு

    இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். நண்பர்கள் உடன் ஜாலியாக சுற்றுலா செல்வதும் பாருக்கு செல்வதும் என கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

    கவர்ச்சியாக வலம் வந்த அமலா பால் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமைதியாக தியானம் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து கவர்ச்சி அமலாபால் அமைதியான அமலாபால் ஆக மாறியது ஏன்? என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.


    • சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலாபால்.
    • பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

    தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர், தி டீச்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    அமலா பால்

    இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில், நடிகை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சியான உடையில் நடனமாடும் வீடியோ பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பதிவில் ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    • சிந்து சமவெளி, மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அமலா பால்.
    • இவர் தற்போது மலையாளத்தில் நடிக்கும் 'தி டீச்சர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

     

    அமலா பால் - தி டீச்சர் 

    அமலா பால் - தி டீச்சர் 

    இந்நிலையில் அமலாபால் மலையாளத்தில் நடித்திருக்கும் 'தி டீச்சர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் பகத் பாசில் நடித்த அதிரன் என்ற படத்தை இயக்கிய விவேக், இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹக்கிம் ஷாஜகான், செம்பன் வினோத், அனு மோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தி டீச்சர் படத்தின் விறுவிறுப்பான டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

    • விவாகரத்துக்கு பின்னர் நடிகை அமலா பாலுக்கு பவ்நிந்தர்சிங் தத்‌ என்ற நபருடன் நட்பு ஏற்பட்டது.
    • சில தினங்களுக்கு முன்பு, இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாக பவ்நிந்தர்சிங் தத் மீது புகார் அளிக்கப்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் பஞ்சாப்பை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் பாடகருமான பவ்நிந்தர்சிங் தத்‌ என்ற பூவி (வயது 35) அமலாபால் இடையே நட்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு பழகி வந்தனர்.

    அமலா பால்

    அமலா பால்

     

    புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த பெரிய முதலியார் சாவடியில் சொகுசு வீட்டை குத்தகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கி இருந்தனர். அந்த வீட்டில் அவர்கள் தொடங்கிய திரைப்பட அலுவலகப் பணியையும், ஹெர்பல் பவுடர் வியாபாரம் செய்யும் இடமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

     

    அமலா பால்

    அமலா பால்

     

    சில தினங்களுக்கு முன்பு நடிகை அமலாபால், பவ்நிந்தர்சிங் தத் மற்றும் அவரது உறவினர்கள் 20 லட்சம் பணமோசடி செய்ததாகவும், இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், நம்பிக்கை மோசடி செய்ததாகவும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அமலாபால் தனது உதவியாளர் விக்னேஷ் மூலம் கடந்த மாதம் 29-ம் தேதி புகார் அளித்தார்.

    அமலா பால் - பவ்நிந்தர்சிங் தத்

    அமலா பால் - பவ்நிந்தர்சிங் தத்

     

    குற்றப்பிரிவு துணைபோலிஸ் சூப்பிரண்டு இருதயராஜ் தாயாரிப்பாளர் பவ்நிந்தர்சிங் தத், அவரது தந்தை சுந்தர்சிங், கனடா நாட்டில் வாழும் அவரது சகோதரி உள்ளிட்ட 12 பேர் மீது மோசடி உள்ளிட்ட 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் பெரிய முதலியார் சாவடியில் உள்ள இல்லத்தில் பவ்நிந்தர்சிங் தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பவ்நிந்தர்சிங் தத்தை 13 நாள் சிறையில் அடைக்க நீதிபதி வரலட்சுமி உத்தரவிட்டார்.

     

    அமலா பால் - பவ்நிந்தர்சிங் தத்

    அமலா பால் - பவ்நிந்தர்சிங் தத்

     

    இந்நிலையில் பவ்நிந்தர்சிங் தத் சார்பில் ஜாமீன் கேட்டு நேற்று வானுர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பவ்நிந்தர்சிங் தத்துக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பவ்நிந்தர்சிங் தத் உறவினர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் நிலையில். பவ்நிந்தர்சிங்தத் தரப்பு வக்கீல்கள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மீதம் உள்ளவர்களுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    • சில தினங்களுக்கு முன்பு நடிகை அமலா பால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
    • இதில் தொடர்புடைய மேலும் 11 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை அமலாபால். இவர், தனது உதவியாளர் விக்னேஸ்வரன் மூலம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர்சிங் தத் என்கிற பூவி (வயது 36) என்பவர் தன்னிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், மேலும் ரூ.6 கோடி தரும்படியும், பணம் தரவில்லையெனில் நாம் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

     

    இதற்கு பவ்நிந்தர்சிங் தத்தின் உறவினர்களான புதுடெல்லியை சேர்ந்த ஜூல்பிகர், அனில்குமார், கரன்கனோஜலா, மித்லேஸ்குமார், பீகார் மாநிலத்தை சேர்ந்த வில்பேஹரா ரன்ஜித்தா, புதுச்சேரி மாநிலம் வைத்திக்குப்பத்தை சேர்ந்த பிரைன்சித்தார்த்தா இங்லே, சென்னை மேற்கு கே.கே. நகரை சேர்ந்த ஹேபாஸ்கர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்த இந்திரஜித்சிங், நீலம்கரூர், கங்கதீப்கர், ஹர்பித்சிங் ஆகிய 11 பேரும் உடந்தையாக இருந்ததாகவும், எனவே அவர்கள் 12 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகாரில் கூறியிருந்தார்.

     

    இந்த புகாரின்பேரில் பவ்நிந்தர்சிங் தத் உள்ளிட்ட 12 பேர் மீதும் 16 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து திரைப்பட தயாரிப்பாளரான பவ்நிந்தர்சிங் தத்தை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பவ்நிந்தர்சிங் தத்தின் உறவினர்களான ஜூல்பிகர், அனில்குமார் உள்ளிட்ட 11 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

     

    இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், 11 பேரும் ராஜஸ்தான், புதுடெல்லி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே 11 பேரையும் கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் 4 நகரங்களுக்கும் விரைந்துள்ளனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை அமலா பால்.
    • இவர் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால்.

    அமலாபால்

    இந்நிலையில் நடிகை அமலாபால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் 11 பக்கம் கொண்ட புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், பவ்நீந்தர்சிங்தத் தன்னிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தாங்கள் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டுவதாகவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

    கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக அமலாபால் குற்றஞ்சாட்டி உள்ளார். பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாகவும் புகார் மனுவில் அமலாபால் குறிப்பிட்டு உள்ளார்.

    அமலாபால் - பவ்நீந்தர்சிங்தத்

    நடிகை அமலா பாலின் புகார் மனுவின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பவ்நீந்தர்சிங்தத் மீது 16 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். நடிகை அமலாபால் மீது பவ்நீந்தர்சிங்தத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அதோ அந்த பறவை போல'.
    • இந்த படத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அதோ அந்த பறவை போல'. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அமலா பால்

    இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.


    அதோ அந்த பறவை போல போஸ்டர்

    பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் 'அதோ அந்த பறவை போல' படம் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள திரைப்படம் கடாவர்.
    • இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

    மலையாள இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'கடாவர்'. இதில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க ஷான் லோகேஷ் பட தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.


    கடாவர் போஸ்டர்

    கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் தடயவியல் துறை நிபுணரான பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ளார்.

    இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. அமலா பாலின் இந்த புதிய கதாபாத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    ×