search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • பலத்த பாதுகாப்பை மீறி தபால் வாக்கு பெட்டியை திறந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி போலீசார், பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எந்திரம் இருக்கும் மையத்தை யாரும் எளிதாக நெருங்கி விட முடியாது. உயர் அதிகாரிகள் இல்லாமல் திறக்க முடியாது.

    மத்திய பிரதேசத்தில் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், வருகிற 3-ந்தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனால் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக கருதி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினரும் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

    இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாட்டுகளையும் மீறி, பாலகாட் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு பெட்டி வைத்திருக்கும் அறையில் பலர் தபால் வாக்குகளை கட்டு கட்டுகளாக பிரித்து வைப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பானது.

    இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ், "இது மிகவும் முக்கியமான விசயம். குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேணடும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதன்பின் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, ஜோதிராதித்யா சந்தியா 20 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதனால் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.

    • வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள்.
    • ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

    வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    • உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
    • வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.

    பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.

    இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.

    ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.

    அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

    மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.

    வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    • தமிழக சட்டசபை தேர்தலில் ஓ.பி.எஸ். தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என தர்மர் எம்.பி பேசினார்.
    • இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஓ.பி.எஸ். அணியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாத புரம் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்தின் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் மூக்கையா, மாநில வழக் கறிஞர் பிரிவு செயலாளர் நவநாதன் முன்னிலை வகித்தனர்.

    முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துச் சாமி வரவேற்றார். கூட்டத் தில் தர்மர் எம்.பி.பேசிய தாவது:-

    நமது ஒருங்கிணைப் பாளர் ஓ.பி.எஸ். செயல்பாடு களை தமிழகமே உற்று நோக்கி கவனிக்கிறது. திருச்சி மாநாடு இந்திய ளவில் பேசப்பகிறது. பசும்பொன் தேவர் குருபூஜைக்கு ஓ.பன்னீர் செல்வம் வரும்போது நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வரவேற்பு கொடுக்க வேணடும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். நம் உழைப்பு என்றும் வீணாவதில்லை. உழைப்புக்கேற்றபலன் கிடைக்கும். நடிப்பவர் களைப் பற்றி நாம் கவலைப்பட தேவை யில்லை. நமது நிர்வாகிகள் யாரும் சோடை போன தில்லை. நமது நிர்வாகிகளை மக்களே பாராட்டுகின்றனர்.

    இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது. அதற்காக தொடர்ந்து உழைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பரமக்குடி திலகர், மாரந்தை நீதி தேவன், தூரிமுருகேசன் உள்பட அனைத்து ஒன்றிய செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
    • மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.

    சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட மனுதாக்கல் கடந்த 13-ந்தேதி நடந்தது. இந்நிலையில் இன்று அந்த மாநிலத்தில் 2-வது கட்ட 70 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.

    அதுபோல மத்திய பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) மனுதாக்கல் தொடங்கியது. அந்த மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இன்று வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பிரசாரம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

    • யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பா.ஜ.க. கட்சி 25 முதல் 29 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிகிறது.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.

    சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐந்து மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற ரீதியில் கருத்து கணிப்புகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தனியார் நிறுவனம் (லோக் போல்) நடத்திய ஆய்வில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 56 முதல் 60 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    பா.ஜ.க. கட்சி 25 முதல் 29 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பி.எஸ்.பி. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் இதர வேட்பாளர்கள் ஒரு இடத்தில் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது. இதே போன்று தெலுங்கானா மாநிலத்திலும் அதிகபட்சம் 44 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 61 முதல் 67 இடங்களிலும், பி.ஆர்.எஸ். கட்சி 45 முதல் 51 இடங்களிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆறு முதல் எட்டு இடங்களிலும், பா.ஜ.க. இரண்டு அல்லது மூன்று இடங்களிலும், இதர வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது.

    • 2023 இறுதிக்குள் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது
    • மகாலஷ்மி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்

    இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவிருக்கிறது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 25-க்கும் மேற்பட்ட கட்சிகள், "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளது.

    இதற்கிடையே, இந்தியாவில் இந்த வருட இறுதிக்குள் சட்டீஸ்கர், ம.பி., மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தலும் நடைபெறவிருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று தெலுங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் துக்குகுடா நகரில் விஜயபேரி சபாவில் ஒரு மிக பெரும் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார்.

    அக்கூட்டத்தில் அவர் அம்மாநில மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    தெலுங்கானா மக்களுக்கு 5 உத்திரவாதங்களை வழங்குகிறேன். அவை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். மகாலஷ்மி திட்டம் எனும் திட்டத்தின்படி தெலுங்கானாவில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும். சமையல் கியாஸ் ரூ.500 தொகையில் வழங்கப்படும். தெலுங்கானா மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். தெலுங்கானாவில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்க காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.

    இவ்வாறு சோனியா காந்தி அறிவித்தார்.

    தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்தவாரம் முதல்-மந்திரி அசோக் கெலாட் 1000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மொபைல்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை டிஜிட்டல் கல்வியறிவுடன் இணைப்பதாகும்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நிறைவடைவதை தொடர்ந்து விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கவும், மீண்டும் ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் கட்சி பல்வேறு அதிரடி வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.

    அதே வேளையில் இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. இதனிடையே ஆளும் காங்கிரஸ் கட்சி பெண்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது. ஏற்கனவே வீடுகளுக்கு 200 யூனிட்டுக்கு கீழ் மின் கட்டணம் கிடையாது என அறிவித்துள்ள நிலையில் தற்போது அரசு செயல்படுத்தி வரும் இலவச செல்போன் திட்டம் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்திரா காந்தி ஸ்மார்ட்போன் யோஜனா என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக செல்போன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை கடந்தவாரம் முதல்-மந்திரி அசோக் கெலாட் 1000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மொபைல்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மொபைலுடன் இலவச இணையமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை டிஜிட்டல் கல்வியறிவுடன் இணைப்பதாகும். இதனால் மாநில அரசு நடத்தும் பல்வேறு திட்டங்களைப் பற்றிய தகவல்களை அவர்கள் எளிதாகப் பெற முடியும் மற்றும் அவர்கள் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த மாநில அரசு தெரிவித்து உள்ளது.

    இந்த திட்டத்தில் பெண்களுக்கு ரியல்மி, ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு மொபைல்போனின் விலை ரூ.5,999 மற்றும் ரூ.6,499 என்கின்றனர்.

    அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு அல்லது ஐ.டி.ஐ. படிக்கும் மாணவிகள் மற்றும் அரசிடம் இருந்து சமூக ஓய்வூதியம் பெறும் விதவை பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பின்னர் படிப்படியாக அனைத்து பெண்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    அசோக் கெலாட்டை வீழ்த்த பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்த நிலையில் இந்த இலவச ஸ்மார்ட்போன் திட்டம் பெண்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு தனி மதிப்பை பெற்று கொடுத்துள்ளது. இதனால் பா.ஜ.க. திணறும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும்போது இரு கட்சிகளும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபடும் என தெரிகிறது.

    • சத்தீஷ்கர் தலைநகர் ராய்பூரில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பேரணியில் அவர் பங்கேற்கிறார்.
    • மாநில காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    புதுடெல்லி:

    சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடக்கின்றன. தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகின்றன.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக அமையும் என கருதப்படுவதால் இதில் பலத்தை நிரூபிப்பதோடு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கவும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பாக 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இது தொடர்பாக முத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 5 மாநில தேர்தல் பிரசாரத்தை சத்தீஷ்கரில் இருந்து தொடங்குகிறார். சத்தீஷ்கர் தலைநகர் ராய்பூரில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பேரணியில் அவர் பங்கேற்கிறார்.

    அதை தொடர்ந்து 18-ந்தேதி தெலுங்கானாவிலும், 22-ந்தேதி மத்திய பிரதேசத்தின் போபாலிலும், 23-ந்தேதி ராஜஸ்தானின் ஜெய்பூரிலும் நடைபெறும் பேரணிகளில் அவர் கலந்துகொள்கிறார். சுற்றுப் பயணத்தின்போது மல்லிகார்ஜூன கார்கே அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    கர்நாடகா, இமாசல பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி கையாண்ட யுக்தியை 5 மாநில தேர்தலிலும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதற்காக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    • 5 மாநிலங்களின் தேர்தல்கள் என்பது பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.
    • பிரதமர் மோடி 38 கூட்டணிக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வின் 316 எம்.பி.க்களை சந்தித்து பேச உள்ளார்.

    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க மும்முரம் காட்டி வருகிறது. அதே வேளையில் பா.ஜ.க.வை வீழ்த்தி இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    இதை தொடர்ந்து இரு கட்சிகளுமே தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பாக மாநிலங்களில் பிரதானமாக உள்ள பா.ஜ.க.வுக்கு எதிரான 26 கட்சிகளை ஒருங்கிணைத்து இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி(இந்தியா) என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணி தலைவர்கள் கடந்த 13, 14-ந்தேதிகளில் பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த 5 மாநிலங்களின் தேர்தல்கள் என்பது பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் களநிலவரங்களை பார்த்தால் பா.ஜ.க.வுக்கு, காங்கிரஸ் கட்சி 'டப்' கொடுக்கும் வகையில் உள்ளது.

    தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணியை முறியடிக்க பா.ஜ.க.வும் பல்வேறு அதிரடி திட்டங்களை வகுத்து வருகிறது.

    ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணி கட்சியினர் கடந்த 17-ந்தேதி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்கள். இதில் எதிர்க்கட்சி கூட்டணியின் திட்டத்தை முறியடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி 38 கூட்டணிக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வின் 316 எம்.பி.க்களை சந்தித்து பேச உள்ளார்.

    இவர்களை 11 குழுக்களாகப் பிரித்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு, 21 மத்திய மந்திரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வருகிற நாளை (திங்கட்கிழமை) முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை தொடர திட்டம் வகுக்கப்படுகிறது. பிராந்தியம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ள இக்குழுக்களுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் 2 மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியுடன் இருப்பார்கள்.

    முதல் சந்திப்பு நாளை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளது. 83 எம்.பி.க்கள் கலந்துகொள்ளும் இந்த சந்திப்பில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய மந்திரி நிதின் கட்கரியும் இடம் பெறுகிறார்கள். 2-வது சந்திப்பில் மந்திரிகள் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் இடம் பெறுகின்றனர்.

    பிரதமருடனான இந்த சந்திப்பில் இடம்பெறும் எம்.பி.க்கள் தங்கள் தொகுதி வளர்ச்சி, மத்திய அரசு திட்டங்களின் நிலை, மக்களின் பிரச்சினைகள் போன்றவை பற்றி ஆலோசிக்க உள்ளனர். இந்த சந்திப்புகளின் மூலம் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற பா.ஜ.க. முயற்சிக்கிறது. அடுத்து வரவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெல்வதும் இந்த சந்திப்பின் நோக்கமாக உள்ளது.

    இவற்றில் தங்கள் கட்சி 20 வருடங்களாக ஆட்சி செய்யும் மத்தியபிரதேசம் பா.ஜ.க.விற்கு முக்கியமாக உள்ளது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் இதர கட்சிகளின் சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

    ஆனால் காங்கிரஸ் முக்கியத் தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுத்து பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. எனவே ம.பி.யில் தங்கள் ஆட்சியை 5-வது முறையாக தக்க வைப்பது பா.ஜ.க.விற்கு பெரும் சவாலாகி உள்ளது.

    சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளை பொறுத்தே பா.ஜ.க.விற்கு மக்களவை தேர்தலிலும் எம்.பி.க்கள் கிடைக்கும். தற்போது ம.பி.யின் 29 மக்களவைத் தொகுதிகளில் 28 இடங்கள் பா.ஜ.க. வசம் உள்ளன. இந்த 5 மாநிலங்களிலும் வெற்றியை உறுதிப்படுத்தும் பொறுப்பை மந்திரி அமித்ஷாவும், தலைவர் நட்டாவும் ஏற்றுள்ளனர்.

    அடுத்தடுத்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே மத்திய மந்திரிகள், பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • தெலுங்கானா அரசு சிறுபான்மையினருக்கு ரூ.1 லட்சம் உதவிக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
    • மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    புதுடெல்லி:

    தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் தெலுங்கானா அரசு சிறுபான்மையினருக்கு ரூ.1 லட்சம் உதவிக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் நிதியுதவியின் அடிப்படையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு 100 சதவீதம் மானியத்துடன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் உத்தரவை தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டது.

    இதுகுறித்து முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கூறுகையில், ஜாதி, மத வேறுபாடின்றி வறுமையை ஒழிக்க மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தகுதியான பிரிவினருக்கு அரசு ஏற்கனவே ஆதரவு அளித்து வருகிறது.

    அனைத்து சிறுபான்மை சமூகத்தினரின் மேம்பாடு மற்றும் நலனுக்காக மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி சிறுபான்மையினரின் வறுமை மற்றும் பின்தங்கிய நிலையை துடைக்க முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடை பெற்று வருகிறது.

    ஆட்சியை தக்க வைப்பதற்காக பா.ஜனதா அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக 48 சதவீதம் உள்ள பெண் வாக்காளர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக பா.ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் 23 முதல் 60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 வழங்குவதற்கான திட்டத்தை மாநில அரசு தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகா சட்டசபை தேர்தல் பாணியில் காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

    குறிப்பாக அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் செய்து வரும் பிரியங்கா காந்தி பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.மத்திய பிரதேசத்தில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ரூ.1,500 மாத ஊதியம், சிலிண்டருக்கு ரூ.500 மானியம், இலவச 100 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அறிவித்து உள்ளார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு காங்கிரஸ் புதிய பொறுப்பு கொடுத்து நியமித்துள்ளது.
    • இவர் ஏற்கனவே கர்நாடக மேலிட பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருதுநகர்

    கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமி ட்டி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு மண்டல பார்வையா ளர்களாக 5 பேரை நியமித்துள்ளது.

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்வகுமார் ஆகியோரும் அடங்குவர். மாணிக்கம் தாகூர் எம்.பி. ஏற்கனவே கர்நாடக மேலிட பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×