search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுதாக்கல்"

    • வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
    • மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.

    சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட மனுதாக்கல் கடந்த 13-ந்தேதி நடந்தது. இந்நிலையில் இன்று அந்த மாநிலத்தில் 2-வது கட்ட 70 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.

    அதுபோல மத்திய பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) மனுதாக்கல் தொடங்கியது. அந்த மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இன்று வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பிரசாரம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

    • கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.
    • முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அம்பத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இருவரும் ரவுடிகள். இவர்கள் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். 

    இவர்கள் கடந்த 10-ந்தேதி மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். மோட்டார் சைக்களில் சென்ற இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் வானூர் போலீசார் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர். 

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலவ், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வானூர் போலீசார் முடிவு செய்தனர்.   சென்னை அம்பத்தூர் கோர்ட்டில் இருந்து அலுவலர் சார்ந்த தகவல் கடந்த 16-ந்தேதி வானூர் போலீசாருக்கு வந்தது. உடனடியாக வானூர் போலீசார் சென்னைக்கு விரைந்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான முகிலன் மற்றும் 5 பேரை வானூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அம்பத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு அனுமதி கிடைத்து முகிலனிடம் வானூர் போலீசார் விசாரணை நடத்தினால் மட்டுமே இக்கொலைக்கான காரணம் தெரியவரும் என தெரிகிறது.

    வெளிநாட்டில் வாங்கிய சொத்துகளின் விவரங்களை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்று குற்றம் சுமத்தி கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் மற்றும் மருமகள் மீது சிறப்பு கோர்ட்டில், வருமான வரித்துறை புகார் மனுவை தாக்கல் செய்துள்ளது.
    சென்னை:

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துகள் வாங்கியுள்ளதாகவும், இந்த சொத்துகள் வாங்கிய விவரங்களை நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும், தங்களது வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ம் ஆண்டு கருப்பு பண தடுப்புச்சட்டத்தை கொண்டு வந்தார்.

    இந்த சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. அதாவது, இங்கிலாந்து நாட்டில், ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பு கொண்ட 2 சொத்துகளும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்தும் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது.

    இதை எதிர்த்து நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 3 பேரும் மேல்முறையீடு செய்தனர்.


    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி ஆகியோர் கடந்த 3-ந்தேதி விசாரித்தனர். அப்போது, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தலாம். அதேநேரம், கருப்பு பண தடை சட்டத்தின் கீழோ அல்லது வருமானவரிச் சட்டத்தின் கீழோ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும்போது, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த வழக்கிற்கு வருமான வரித்துறை முதன்மை இயக்குனர், வருகிற ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில், கருப்பு பண தடுப்புச்சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக புகார் மனுவை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில், வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த புகார் மனுவை சிறப்பு கோர்ட்டு பரிசீலித்து ஏற்றுக்கொண்டு பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பும் என்று கூறப்படுகிறது.
    ×